அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் புதுச்சேரியில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 53 தொகுதிகளை கைப்பற்றியது. இதையடுத்து அதிக தொகுதிகளை வென்ற தவெக ஆட்சி அமைக்க அதிமுகவின் ஆதரவை கோரியதாக தகவல் வெளியானது.
இதையடுத்து நேற்று சென்னை பசுமை வழிச்சாலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டம் முடிந்த பிறகு தவெகவுக்கு எப்போதும் ஆதரவு இல்லை என அதிமுக அதிரடியாக அறிவித்தது. இந்நிலையில் அக்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் புதுச்சேரியில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பாக அடுத்தக்கட்ட முடிவுகளை எடுக்க அதிமுக திட்டமிட்டுள்ள நிலையில், 2 நாட்கள் எம்எல்ஏக்கள் புதுச்சேரியில் தங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
















