தவெகவுக்கு எந்த வகையிலும் அதிமுக ஆதரவு அளிக்காது என அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சென்னை பசுமை வழிச்சாலையில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது தவெகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து பேசப்பட்டதாகவும், இது தொடர்பாக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இடையே கருத்து முரண்கள் எழுந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமி, அதிமுக மிகப் பெரிய இயக்கம் எனவும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.
மேலும், தவெகவிற்கு ஆதரவு என்பது முற்றிலும் தவறான செய்தி எனவும் தவெகவுக்கு எந்த வகையிலும் அதிமுக ஆதரவு அளிக்காது என்பதை இபிஎஸ் ஒப்புதலுடன் கூறுவதாகவும் தெரிவித்தார்.
















