தவெக தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்டு வந்த முதலமைச்சருக்கான உயர் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்த நிலையில், விஜய் முதலமைச்சர் ஆக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் தேர்தல் முடிவு வெளியான தினமே விஜய்க்கு முதலமைச்சருக்கான உயர் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
கடந்த 3 நாட்களாக கான்வாய் வாகனங்கள் புடைசூழ தவெக தலைவர் விஜய் வலம் வந்தார். இந்நிலையில் அவருக்கு வழங்கப்பட்டு வந்த உயர் பாதுகாப்பு திடீரென வாபஸ் பெறப்பட்டுள்ளது.
தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதும் போதிய ஆதரவு இல்லாததால் உயர் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதாக கூறப்படுகிறது.
பட்டினப்பாக்கம் அலுவலகத்தில் இருந்து கான்வாய் வாகனங்கள் எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், விஜய் தனியாக நீலாங்கரை இல்லத்திற்கு காரில் சென்றார்.
அதேநேரம் பெரும்பான்மையை நிரூபித்துவிட்டு உயர் பாதுகாப்பை ஏற்பதாக கூறி கான்வாய் வாகனங்களை விஜய் திருப்பி அனுப்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
















