தமிழ்நாடு 16வது சட்டப்பேரவை கலைக்கப்படுவதாக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் திங்கள்கிழமை வெளியானது. இதில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆளுங்கட்சியான திமுக கூட்டணி 73 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
இதையடுத்து ஸ்டாலின் தனது முதலமைச்சர் பதவி மற்றும் அமைச்சரவையின் ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பி வைத்தார்.
இதனையடுத்து, ஸ்டாலினின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டதாக ஆளுநர் மாளிகை தெரிவித்து இருந்தது. இந்நிலையில், தமிழ்நாடு 16வது சட்டப்பேரவை கலைக்கப்படுவதாக ஆளுநர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஆளுநரின் உத்தரவு மே 5 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















