புதுச்சேரியில் மீண்டும் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்டிஏ கூட்டணி ஆட்சியை பிடித்தது. புதுச்சேரி சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக மற்றும் லஜக ஆகிய கட்சிகள் சேர்ந்த என்டிஏ கூட்டணி ஒரு அணியாகவும், காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி மற்றொரு அணியாகவும் களமிறங்கின. மேலும் தவெக-வும் நாம் தமிழர் கட்சியும் தனித்தனியாக போட்டியிட்டன. 30 தொகுதிகள் கொண்ட புதுச்சேரிக்கு கடந்த ஏப்ரல் 9-ம் தேதியன்று தேர்தல் நடைபெற்று முடிந்தது. புதுச்சேரியில் ஆட்சியமைக்க 16 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் எனும் சூழலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில் என்.ஆர். காங்கிரஸ் 9 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும், லஜக 1 இடத்திலும், காங்கிரஸ் 1 இடத்திலும், அதிமுக 1 இடத்திலும், திமுக 1 இடத்திலும் வெற்றி பெற்றன. அதிக இடங்களில் வெற்றி பெற்றதன் மூலம் முதலமைச்சர் ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான என்டிஏ கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கவுள்ளது.
















