நைஜர் நாட்டில் இராணுவ புரட்சி: இந்தியர்கள் வெளியேற அறிவுறுத்தல்!
Aug 13, 2026, 11:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நைஜர் நாட்டில் இராணுவ புரட்சி: இந்தியர்கள் வெளியேற அறிவுறுத்தல்!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 12, 2023, 11:51 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நைஜர் நாட்டில் இராணுவ புரட்சி ஏற்பட்டு, வன்முறை வெடித்திருப்பதால், அந்நாட்டில் இருக்கும் இந்தியர்கள் பாதுகாப்புடன் வெளியேறும்படி, இந்திய வெளியுறவுத்துறை  அறிவுறுத்தி இருக்கிறது.

மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகள் பலவற்றில் தற்போது இராணுவ புரட்சி மற்றும் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைகள் அரங்கேறி வருகிறது. அதன்படி கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 6 நாடுகளில் ஆட்சி கவிழ்க்கப்பட்டிருக்கிறது. தற்போது 7-வது நாடாக நைஜர் நாட்டிலும் இராணுவப் புரட்சி ஏற்பட்டு, ஆட்சி கவிழ்க்கப்பட்டிருக்கிறது.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜர் நாட்டில், அதிபர் முகமது பாஸும் தலைமையிலான ஜனநாயக ஆட்சி நடந்து வருகிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே அந்நாட்டில் பாதுகாப்பின்மை மற்றும் பொருளாதார சரிவு ஏற்பட்டிருக்கிறது. இதனால், அந்நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாத நிலை நீடித்து வருகிறது. இதனால், பொதுமக்களும், இராணுவமும் அதிபர் மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில், நைஜர் நாட்டில் ஜனநாயக ஆட்சியைக் கவிழ்த்து விட்டு, இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது. மேலும், அந்நாட்டு அதிபர் முகமது பாஸுமையும் இராணுவம் கைது செய்திருக்கிறது. இதனால், அதிபரின் ஆதரவாளர்கள் இராணுவத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கி இருக்கிறார்கள். அதேசமயம், பொதுமக்களில் மற்றொரு தரப்பினர் இராணுவத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.

இதையடுத்து, அந்நாட்டில் இராணுவத் தரப்பினருக்கும், அதிபர் தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்து வன்முறையாக மாறி இருக்கிறது. ஆகவே, வன்முறை பெரிய அளவில் விஸ்வரூபம் எடுப்பதற்கு முன்பு, அந்நாட்டில் இருக்கும் இந்தியர்கள் பாதுகாப்புடன் வெளியேறும்படி, இந்திய வெளியுறவுத் துறை அறிவுறுத்தி இருக்கிறது.

இது தொடர்பாக, மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்ஸி கூறுகையில், “நைஜர் நாட்டின் நிலவரத்தை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. அந்நாட்டின் நிலவரம் தற்போது மிகவும் மோசமாக இருந்து வருகிறது. ஆகவே, அங்கிருக்கும் இந்தியர்கள் உடனடியாக அந்நாட்டை வெளியேற வேண்டும். அவ்வாறு வெளியேறும்போது மிகவும் பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.

அதேபோல, அந்நாட்டின் நிலவரம் தற்போது கலவரமாக இருப்பதால், அந்நாட்டுக்கு பயணம் செய்ய திட்டமிட்டவர்கள், திட்டத்தை ஒத்திவைக்க வேண்டும். அந்நாட்டில் நிலைமை சீராகி, இயல்பு நிலை திரும்பியவுடன் பயணத்தை மேற்கொள்வதுதான் சிறந்த முடிவாக இருக்கும்” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags:
Share
Tweet
SendShare
Previous Post

திமுக விதைத்த விஷவிதை இன்று மரமாக மாறி இருக்கிறது, அதை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை- அண்ணாமலை

Next Post

பாகிஸ்தான், சீன எல்லையில் பதட்டம் ? ஸ்ரீநகரில் மிக்-29 போர் விமானங்கள் நிலை நிறுத்தம்!

Related News

Delimitation bill-ஐ பற்றி “Fake Theories” – அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவிற்கு தமிழக பாஜக கண்டனம்!

கோவையில் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்ட வழக்கு – மேலும் ஒருவர் கைது!

லார் கிப்பான் குரங்குடன் வீடியோ – நடிகர் விக்ரமுக்கு வனத்துறை நோட்டீஸ்!

முதலமைச்சர் விஜய் தலைமையில் முதலீட்டாளர் மாநாடு – 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!

தூத்துக்குடியில் கிறிஸ்தவ ஆலய கட்டுமானப் பணியின்போது மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து – 40 பேர் காயம்!

குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் வீதியில் இறங்கி போராடும் நிலை தொடர்வது கவலையளிக்கிறது – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

உத்தரகாண்டில் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்ற நிகழ்ச்சி சுத்திகரிப்பு சடங்கு – உரிய விசாரணை நடத்தப்படும் என ஜெ.பி.நட்டா உறுதி!

பழனி தண்டாயுதபாணி கோயில் சொத்துக்கள் – அதிகாரிகள் நேரில் ஆய்வு!

தனியார் மருத்துவமனை அறை வாடகைக்கு கட்டுப்பாடு – நாடாளுமன்ற நிலைக்குழு வலியுறுத்தல்!

எதிர்கட்சிகள் கடும் அமளி – மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

வாளையாறு அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற யானை குட்டியுடன் உயிரிழப்பு!

ஜஸ்டின் மணிகண்டன் மீது, மேலும் ஒரு நில மோசடி புகார் – 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

தேர்தல் தோல்விக்கு காரணமான மாவட்டச் செயலர்கள் மீது நடவடிக்கை – திமுக தலைவருக்கு நிர்வாகிகள் கடிதம்!

இன்றைய தங்கம் விலை!

லஞ்சம் கேட்டாலும் கொடுக்க கூடாது – சென்னை காவல் ஆணையர் அறிவுறுத்தல்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் ஸ்ரீரங்கத்தில் இருந்து புறப்பட்ட மங்கல சீர்வரிசை பொருள்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies