செந்தில் பாலாஜிக்கு 25-ம் தேதிவரை காவல் நீட்டிப்பு: மீண்டும் புழல் சிறையில் அடைப்பு!
Jan 14, 2026, 07:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செந்தில் பாலாஜிக்கு 25-ம் தேதிவரை காவல் நீட்டிப்பு: மீண்டும் புழல் சிறையில் அடைப்பு!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 12, 2023, 07:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமலாக்கத்துறை விசாரணை நிறைவடைந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு, வரும் 25-ம் தேதி வரை காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இதையடுத்து, அவர் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

2011 – 16 அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ஏராளமானோரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, சென்னையைச் சேர்ந்த 2 பேர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்த நிலையில், உச்ச நீதிமன்றம் உத்தரவின் பேரில், மறு விசாரணை நடந்து வருகிறது.

இந்த சூழலில், பண மோசடி தொடர்பாக கடந்த மே மாதம் செந்தில் பாலாஜி வீடு உள்பட பல்வேறு இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர், அப்போது, செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கியதோடு, அவர்களது வாகனங்களையும் அடித்து சேதப்படுத்தினர். இது ஒருபுறம் இருக்க, பண மோசடி விவகாரத்தில் சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி, செந்தில் பாலாஜிக்கும், அவரது தம்பி அசோக் குமாருக்கும் அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியது. ஆனால், இருவருமே ஆஜராகவில்லை.

இதையடுத்து, செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி வீடு, அலுவலகங்கள் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் வீடு, அலுவலகங்களில் கடந்த மாதம் 13-ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனடிப்படையில், 14-ம் தேதி செந்தில் பாலாஜியை கைது செய்தனர். அப்போது, நெஞ்சுவலி, அறுவைச் சிகிச்சை, ஆட்கொணர்வு மனு என பல சம்பவங்கள் அரங்கேறியது. இதனால், இலாகா இல்லாத அமைச்சரானார் செந்தில் பாலாஜி.

பின்னர், நீதிமன்ற உத்தரவின் பேரில் சென்னை புழல் சிறையில் செந்தில் பாலாஜி அடைக்கப்பட்டார்.  அவரை, அமலாக்கத்துறை கடந்த 7-ம் தேதி காவலில் எடுத்து விசாரித்து வந்தது . அப்போது, அதிகாரிகள் கேட்ட பெரும்பாலான கேள்விகளுக்கு, தெரியாது என்றும், எனக்கு தொடர்பில்லை எனவும் அவர் பதிலளித்ததாகக் கூறப்படுகிறது. இந்த சூழலில், 5 நாள் விசாரணை இன்று நிறைவடைந்த நிலையில், செந்தில் பாலாஜியை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆஜர்படுத்தினர்.

மேலும், அவரிடம் 5 நாட்கள் நடத்திய விசாரணை குறித்த குற்றப்பத்திரிகையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி அல்லி, வரும் ஆகஸ்ட் 25-ம் தேதிவரை, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜி மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags: dmk senthil balajiit raids senthil balaji
ShareTweetSendShare
Previous Post

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் 23 மசோதாக்கள் நிறைவேற்றம்!

Next Post

இறுதிப்போட்டியில் இந்திய ஹாக்கி அணி…

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies