செந்தில் பாலாஜிக்கு 25-ம் தேதிவரை காவல் நீட்டிப்பு: மீண்டும் புழல் சிறையில் அடைப்பு!
Jul 4, 2025, 09:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செந்தில் பாலாஜிக்கு 25-ம் தேதிவரை காவல் நீட்டிப்பு: மீண்டும் புழல் சிறையில் அடைப்பு!

Web Desk by Web Desk
Aug 12, 2023, 07:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமலாக்கத்துறை விசாரணை நிறைவடைந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு, வரும் 25-ம் தேதி வரை காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இதையடுத்து, அவர் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

2011 – 16 அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ஏராளமானோரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, சென்னையைச் சேர்ந்த 2 பேர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்த நிலையில், உச்ச நீதிமன்றம் உத்தரவின் பேரில், மறு விசாரணை நடந்து வருகிறது.

இந்த சூழலில், பண மோசடி தொடர்பாக கடந்த மே மாதம் செந்தில் பாலாஜி வீடு உள்பட பல்வேறு இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர், அப்போது, செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கியதோடு, அவர்களது வாகனங்களையும் அடித்து சேதப்படுத்தினர். இது ஒருபுறம் இருக்க, பண மோசடி விவகாரத்தில் சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி, செந்தில் பாலாஜிக்கும், அவரது தம்பி அசோக் குமாருக்கும் அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியது. ஆனால், இருவருமே ஆஜராகவில்லை.

இதையடுத்து, செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி வீடு, அலுவலகங்கள் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் வீடு, அலுவலகங்களில் கடந்த மாதம் 13-ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனடிப்படையில், 14-ம் தேதி செந்தில் பாலாஜியை கைது செய்தனர். அப்போது, நெஞ்சுவலி, அறுவைச் சிகிச்சை, ஆட்கொணர்வு மனு என பல சம்பவங்கள் அரங்கேறியது. இதனால், இலாகா இல்லாத அமைச்சரானார் செந்தில் பாலாஜி.

பின்னர், நீதிமன்ற உத்தரவின் பேரில் சென்னை புழல் சிறையில் செந்தில் பாலாஜி அடைக்கப்பட்டார்.  அவரை, அமலாக்கத்துறை கடந்த 7-ம் தேதி காவலில் எடுத்து விசாரித்து வந்தது . அப்போது, அதிகாரிகள் கேட்ட பெரும்பாலான கேள்விகளுக்கு, தெரியாது என்றும், எனக்கு தொடர்பில்லை எனவும் அவர் பதிலளித்ததாகக் கூறப்படுகிறது. இந்த சூழலில், 5 நாள் விசாரணை இன்று நிறைவடைந்த நிலையில், செந்தில் பாலாஜியை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆஜர்படுத்தினர்.

மேலும், அவரிடம் 5 நாட்கள் நடத்திய விசாரணை குறித்த குற்றப்பத்திரிகையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி அல்லி, வரும் ஆகஸ்ட் 25-ம் தேதிவரை, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜி மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags: dmk senthil balajiit raids senthil balaji
ShareTweetSendShare
Previous Post

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் 23 மசோதாக்கள் நிறைவேற்றம்!

Next Post

இறுதிப்போட்டியில் இந்திய ஹாக்கி அணி…

Related News

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

ரிதன்யா தற்கொலை விவகாரம் : விசாரணையில் அரசியல் தலையீடு – பெற்றோர் பரபரப்பு புகார்!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

மேற்கு தொடர்ச்சி மலையில் அதிசயம் : வன விலங்குகள் மத்தியில் வாழும் “தனி ஒரு மூதாட்டி”!

எப்போ சார் திறப்பீங்க? – குமுறும் பொதுமக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

100% சாலைகள் அமைத்து விட்டோம் என்று தமிழக அரசு பொய் கூறுகிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

எனக்கு IAS, IPS என யாரையும் தெரியாது – நிகிதா ஆடியோ வெளியீடு!

அஜித்குமார் கொலை : அரசு மாணவர் விடுதி அருகே காவல்துறை வாகனம் நிற்கும் சிசிடிவி வெளியீடு!

அஜித்குமாரின் குடும்பத்தினரை சந்தித்து நயினார் நாகேந்திரன் ஆறுதல்!

கனமழையால் பாதித்த மாநில முதல்வர்களுடன் பேசிய அமித்ஷா!

விழுப்புரத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த பெண் நூலகரை தரையில் அமர்த்தியதாக புகார்!

மக்கள் பிரச்னைகளில் தீவிர கவனம் செலுத்துகிறார் டெல்லி முதல்வர் – சக்சேனா

கிருஷ்ணகிரி : 13 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்த இளைஞர்கள் : 3 பேர் கைது!

மகாராஷ்டிரா : மராத்தி பேசாததற்காக தாக்குதல் – அமைச்சர் கண்டனம்!

மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதையை பொதுமக்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் : துணை மேயர் மகேஷ் குமார்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies