நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் 23 மசோதாக்கள் நிறைவேற்றம்!
Sep 6, 2026, 05:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் 23 மசோதாக்கள் நிறைவேற்றம்!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 12, 2023, 07:22 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில், மக்களவையில் 22 மசோதாக்களும், மாநிலங்களவையில் 25 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. அதேசமயம், மக்களவை மற்றும் மாநிலங்களவை அனுமதியுடன் 1 மசோதா திரும்பப் பெறப்பட்டது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த மாதம் 20-ம் தேதி தொடங்கியது. ஆனால், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக, எதிர்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டன. இதனால், 23 நாட்கள் அமர்வில்  17 அமர்வுகள்  நடந்தன. எனினும், எதிர்கட்சிகளின் அமளிக்கு மத்தியிலும் அவ்வப்போது சில மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

அந்த வகையில், மக்களவையில் 20 மசோதாக்களும், மாநிலங்களவையில் 5 மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட்டன. இம்மசோதாக்களில் இரு அவைகளிலும் சேர்த்து மொத்தமாக 23 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அதாவது, மக்களவையில் 22 மசோதாக்களும், மாநிலங்களவையில் 25 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. மக்களவை மற்றும் மாநிலங்களவையின் அனுமதியோடு 1 மசோதா திரும்பப் பெறப்பட்டிருக்கிறது.

இம்மசோதாக்களில், டெல்லி தேசிய தலைநகர் பிரதேச அரசு சட்டத் திருத்த மசோதா, இந்திய மேலாண்மை நிறுவனங்கள் திருத்த மசோதா, கடலோரப் பகுதிகள் கனிம மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை திருத்த மசோதா, பிறப்பு, இறப்பு பதிவு திருத்த மசோதா, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை திருத்த மசோதா, வழக்கறிஞர்கள் சட்டத் திருத்த மசோதா, பத்திரிகை மற்றும் பத்திரிகை பதிவு மசோதா, அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை மசோதா, மருத்தகம் திருத்த மசோதா, டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா, தேசிய நர்சிங், மருத்துவச்சி ஆணைய மசோதா, தேசிய பல் மருத்துவ ஆணைய மசோதா, ஒளிப்பதிவு திருத்த மசோதா, கடலோர மீன்வளர்ப்பு ஆணைய திருத்த மசோதா, வன பாதுகாப்பு திருத்த மசோதா உள்ளிட்டவை அடங்கும்.

இது ஒருபுறம் இருக்க, நாடாளுமன்றத்தில் மத்திய அரசு மீது எதிர்கட்சிகள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தன. இத்தீர்மானத்தின் மீதான விவாதம் 20 மணி நேரம் நடந்தது. இவ்விவாதத்தின் மீது பேசிய காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகளின் உறுப்பினர்கள் பலரும் மத்திய அரசு பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தினர். இதற்கு மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாரான், கிரண் ரிஜூஜி, ஸ்மிருதி இரானி உள்ளிட்ட பலரும் பதிலடி கொடுத்தனர்.

நிறைவாக, நேற்று மாலை பாரத பிரதமர் நரேந்திர மோடி, நம்பிக்கை இல்லாத் தீர்மானத்திற்கு விளக்கம் அளித்து சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக உரையாற்றினார். பிரதமர் பேசிக் கொண்டிருக்கும்போதே, எதிர்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பிரதமர் பேசி முடித்த பிறகு, நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தோல்வியில் முடிந்தது.

இந்த நிலையில், இன்று காலை பிரதமர் மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவை சந்தித்து உரையாடினர்.

Tags: ParliamentAmith shaModi Meeting
Share
Tweet
SendShare
Previous Post

ஜம்மு காஷ்மீரில் நாளை மூவர்ணக்கொடி பேரணி: டி.ஜி.பி. அறிவிப்பு!

Next Post

செந்தில் பாலாஜிக்கு 25-ம் தேதிவரை காவல் நீட்டிப்பு: மீண்டும் புழல் சிறையில் அடைப்பு!

Related News

கே.என் நேரு வீட்டில் சிக்கியது என்ன ?; தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை

‘Made-in-India’- வரலாற்று சாதனை : செவ்வாய் கிரகத்தில் விண்வெளி வீரர்கள் வசிக்க வீடு ரெடி – சிறப்பு தொகுப்பு!

சீன எல்லையில் Early-warning system : மீண்டும் சீரமைக்க நேபாள அரசு தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

அவிநாசியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதல் நிலை ஒப்பந்ததாரர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை!

வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா, தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை – தேர்தல் ஆணையம்

அரசியல் காரணங்களுக்காக கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் சோதனை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

கேரளாவில் கார் விபத்து – திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 7 பேர் பலி!

ஜவ்வாது மலையில், அரசு வன நிலத்தை பட்டா செய்து தருவதாகக் கூறி ஒரு கோடி லஞ்சம் – 6 பேர் சஸ்பெண்ட்!

ஆர்எஸ்எஸ் தலைவரின் இங்கிலாந்து பயணம் இந்தியாவின் கலாச்சார கண்ணோட்டம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்கும்  – சுனில் அம்பேகர்

கே.என். நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies