இன்று முதல் புதிய அரசியல், புதிய பாதை, புதிய இயக்கம் தொடங்குவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சமூக வலைதளம் மூலம் பேசிய அவர், எதிர்காலத்தை நோக்கி பயணப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டதாக தெரிவித்தார்.
எதிர்காலம் அழைத்துச் செல்லும் பாதையில் பயணிக்க வேண்டிய நேரம் இது என்றும், ஒரு புதிய அரசியலை, அடிப்படை கட்டமைப்பை மாற்றக் கூடிய அரசியலை உருவாக்க வேண்டும் என தெரிவித்தார்.
ஆனந்தமாக.. அன்போடு தமிழ்நாட்டில் ஒரு புதிய அரசியல் இயக்கத்தை தொடங்க இருக்கிறோம் என்றும், தமிழ்நாட்டில் அடுத்து நடக்க உள்ள தேர்தலில் நமது அரசியல் கட்சி போட்டியிடும் என்றும் அவர் கூறினார்.
















