75-வது சுதந்திர தின நிறைவு விழாவை முன்னிட்டு, டெல்லியில் பிரம்மாண்ட மூவர்ணக்கொடி பேரணியை மத்திய இணை அமைச்சர் மீனாட்சி லேகி இன்று காலை தொடங்கி வைத்தார்.
நம் நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இதையொட்டி, 75-வது நிறைவு விழாவை அமிர்தப் பெருவிழாவாகக் கொண்டாடும் வகையில், ஆகஸ்ட் 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை வீடுதோறும் தேசியக் கொடியேற்றுமாறு, நாட்டு மக்களுக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். மேலும், தேசியக்கொடி ஏற்றிய புகைப்படங்களை ஹர் ஹர் திரங்கா https://harghartiranga.com/ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக் கொண்டிருந்தார்.
இதையடுத்து, நாடு முழுவதும் உள்ள மக்கள் இன்று காலையிலேயே தங்களது வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றத் தொடங்கினர். இவர்களில் பலரும் கொடியேற்றிய புகைப்படங்களை ஹர் ஹர் திரங்கா இணையத்தளத்திலும் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசிய தலைநகர் டெல்லியில் பிரம்மாண்ட மூவர்ணக்கொடி பேரணி தொடங்கியது. இப்பேரணியை மத்திய இணையமைச்சர் மீனாட்சி லேகி, கொடியசைத்து துவக்கி வைத்தார். அப்போது அவர், “சுதந்திர தினம் நெருங்கி வருகிறது. இதை மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
பிரதமர் கூறியது போல, அமிர்தப் பெருவிழா தொடங்குகிறது. இந்த காலக்கட்டத்தில் நாம் நமது தேசத்தை வெற்றியின் உச்சத்திற்கு கொண்டு செல்ல வேண்டியது நமது கடமையாகும். மேலும், இது ஒன்று மட்டுமே குறிக்கோளாக இருக்க வேண்டும். ஆற்றல் நிரம்பிய இத்திசையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படும்போது, அது நிச்சயம் நடந்தே தீரும்” என்று கூறினார்.
Har Ghar Tiranga, Ghar Ghar Tiranga 🇮🇳
Glimpses from today’s #HarGharTiranga MP Run in New Delhi. pic.twitter.com/ybQGkOylDn
— Meenakashi Lekhi (@M_Lekhi) August 13, 2023