நாளை பிரிவினை பயங்கரவாத நினைவுதினம்: உ.பி. அரசு அழைப்பு!
Sep 12, 2026, 02:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாளை பிரிவினை பயங்கரவாத நினைவுதினம்: உ.பி. அரசு அழைப்பு!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 13, 2023, 11:42 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆகஸ்ட் 14-ம் தேதியை, பிரிவினை பயங்கரவாத நினைவு தினமாக அனுசரிக்க, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அழைப்பு விடுத்திருக்கிறார்.

நாடு சுதந்திரமடைவதற்கு முன்பு, 1940-ம் ஆண்டு பாகிஸ்தான் தனி நாடு தீர்மானத்தை லாகூரில் நிறைவேற்றியது முஸ்லீம் லீக். மேலும், பாகிஸ்தான் தனி நாடு பிரிவினைக்குப் பிறகே சுதந்திரம் என்பதில் ஜின்னா உறுதியாக இருந்தார். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவும், இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்குதற்கும் பிரிட்டன் அரசு அமைச்சர்கள் அடங்கிய குழுவை அனுப்பியது. ஆனால், இக்குழுவில் இருந்து விலகிய முஸ்லீம், நாடு முழுவதும் கலவரத்தை தூண்டி விட்டது.

இக்கலவரத்தால் மிகவும் பாதிக்கப்பட்டது மேற்குவங்க மாவட்டம் தான். நவக்காளி என்கிற இடத்தில் வெடித்த பெரும் கலவரம் பீகார், உத்தரப் பிரதேசம் வரை பரவியது. இக்கலவரத்தல் 4,000 மக்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்தனர். இது பிற்காலத்தில் கொல்கத்தா கொடுங்கொலைகள் என்று சரித்திரத்தில் பதிந்து விட்டது. இதன் பிறகு, 1947 ஆகஸ்ட் 14-ம் தேதி பாகிஸ்தான் தனி நாடு பிரிந்து, அந்நாட்டிற்கு சுதந்திரமும் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின் போது, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ஆகஸ்ட் 14-ம் தேதியை பிரிவினை பயங்கரவாத நினைவு தினமாக அனுஷ்டிக்குமாறு, முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச மாநில அரசு அழைப்பு விடுத்திருக்கிறது. இதையொட்டி, இளைய சமுதாயத்தினருக்கு சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில், பிரிவினை ஏற்பட்டபோது நிகழ்த்தப்பட்ட கலவரங்கள், வன்முறை தொடர்பான காட்சிகள் அடங்கிய கண்காட்சிகள், திரைப்படக் காட்சிகள் மற்றும் புத்தகக் காட்சிகளை, மாநிலத்தின் 75 இடங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

மேலும், பிரிவினையின்போது உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கு 2 நிமிட மவுன அஞ்சலியும் செலுத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சிகளில், பிரிவினையின்போது பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் கலந்துகொண்டு பிரிவினையின்போது தாங்கள் அனுபவித்த துன்பங்களை பகிர்ந்துகொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இது தவிர, பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில், பிரவினை குறித்த ஆவணப்படங்களை திரையிட்டு இளைய சமுதாயத்தினருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.

இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு, இந்திய சிந்தி கவுன்சில், உத்தரப் பிரதேச சிந்தி சபா, சிந்தி அகாடமி, சனாதானி பஞ்சாபி மகாசபா உள்ளிட்ட அரசு சாரா அமைப்புகளுக்கும் மாநில அரசு அழைப்பு விடுத்திருக்கிறது.

Tags: Noakhali riotsNoakhaliYogi AdityanathCm Yogi AdityanathUP CM Yogi AdityanathUP CM
Share
Tweet
SendShare
Previous Post

இந்திய ஹாக்கி அணி அசத்தல் வெற்றி.

Next Post

டெல்லியில் பிரம்மாண்ட மூவர்ணக்கொடி பேரணி!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies