வன்முறையால் தடைபட்ட ஊர்வலம்: மீண்டும் நடத்த வி.ஹெச்.பி. முடிவு!
Sep 9, 2025, 04:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வன்முறையால் தடைபட்ட ஊர்வலம்: மீண்டும் நடத்த வி.ஹெச்.பி. முடிவு!

Web Desk by Web Desk
Aug 14, 2023, 11:34 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹரியானா மாநிலத்தில் இஸ்லாமியர்களின் வன்முறை காரணமாக நின்றுபோன ஊர்வலத்தை, ஆகஸ்ட் 28-ம் தேதி மீண்டும் நடத்த விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு முடிவு செய்திருக்கிறது.

ஹரியானா மாநிலம் குருகிராம் அருகேயுள்ள நூஹ் பகுதியில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் “பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக யாத்திரை” கடந்த மாதம் நடந்தது. இந்த ஊர்வலத்தை குருகிராம் சிவில் லைன்ஸிலிருந்து பா.ஜ.க. மாவட்டத் தலைவர் கார்கி கக்கார் தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் கேத்லா மோட் அருகே சென்றபோது, இஸ்லாமிய இளைஞர்கள் கும்பல் ஒன்று பேரணியை தடுத்து நிறுத்தியது. மேலும், ஊர்வலத்தைத் தொடர விடாமல் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும், கார் உள்ளிட்ட வாகனங்களுக்கும் தீவைத்தனர்.

இதையடுத்து, ஊர்வலத்தில் பங்கேற்ற பெண்கள் உள்ளிட்ட 2,500 பேர் அருகிலுள்ள காவல் நிலையத்திலும், கோயில்களிலும் தஞ்சமடைந்தனர். தகவலறிந்த போலீஸார் விரைந்து சென்று, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கலவரத்தை ஒடுக்க முயன்றனர். ஆனால், வன்முறையாளர்கள் போலீஸார் மீதும் தாக்குதல் நடத்தத் தொடங்கினர். இதில், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த வீர்ர்கள் இருவர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். இதனால், அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதோடு, இணைய வசதியும் துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக, ஊர்வலம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

இதன் பிறகு, வன்முறையில் ஈடுபட்ட கலவரக்காரர்களின் வீடுகள் மற்றும் எங்கெல்லாம் இருந்து கல்வீசினார்களோ அக்கடைகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட கட்டடங்களையும் மாநில அரசு இடித்துத் தள்ளியது. இந்த சூழலில்தான், பாதியில் கைவிடப்பட்ட ஊர்வலத்தை மீண்டும் நடத்த விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு முடிவு செய்திருக்கிறது. இது தொடர்பாக, விவாதிக்க, சர்வ் ஹிந்து சமாஜ் என்கிற அமைப்பு சார்பில், பல்வால் – நூங் எல்லையிலுள்ள பாண்டிரி கிராமத்தில் மகா பஞ்சாயத்து கூட்டம் நேற்று நடந்தது.

இக்கூட்டத்தில்தான், பாதியில் தடைபட்ட ஊர்வலத்தை வரும் 28-ம் தேதி நூஹ் மாவட்டம் நல்ஹர் என்கிற இடத்தில் இருந்து மீண்டும் தொடங்குவது என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும், இப்பகுதியில் நடக்கும் மோதல்களுக்குப் பசுக் கடத்தல்தான் முக்கியக் காரணமாக இருக்கிறது. ஆகவே, நூஹ் மாவட்டத்தில் துணை ராணுவப் படையின் தலைமையகம் அமைக்க வேண்டும். நூஹ் கலவரம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும். கலவரத்தால் ஏற்பட்ட இழப்பைக் குற்றவாளிகளிடமிருந்து வசூலிக்க வேண்டும். நூஹ் மற்றும் பல்வால் மக்களின் தற்காப்புக்காக அரசு சார்பில் ஆயுதம் வழங்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

Tags: hariyana
ShareTweetSendShare
Previous Post

17 வருடங்களுக்குப் பிறகு வெஸ்ட் இண்டீஸிடம் தொடரை இழந்த இந்திய அணி!

Next Post

சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ள தொழில் முனைவோர் தம்பதியருக்கு பிரதமர் மோடி அழைப்பு.

Related News

நீருக்கடியில் நகரம் கண்டுபிடிப்பு : 8500 ஆண்டுகள் பழமையானதா!

கனமழையால் வாரணாசி கங்கை நதியில் வெள்ளப் பெருக்கு!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றிப் பெறுவார் – உறவினர்கள் மகிழ்ச்சி!

உக்ரைன் : வெடிபொருள் கிடங்கை குறிவைத்து அழித்த ரஷ்ய ராணுவம்!

சேலம் : முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் மீது புகார்!

சேலம் : கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 4 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.200 கோடி வசூலை குவித்த லோகா திரைப்படம்!

குடும்ப வன்முறை குற்றமாகாது என டிரம்பின் கருத்தால் சர்ச்சை!

நேபாளத்தில் வன்முறை எதிரொலி : இந்தோ-நேபாள் எல்லையில் தீவிர சோதனை!

இஸ்ரேல் : 5க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

திருவண்ணாமலை : தாழ்வான மின் கம்பிகளுக்கு மரக்கொம்பு வைத்து முட்டு கொடுத்த அதிகாரிகள்!

துருக்கி : சிறுவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 போலீஸ் பலி!

விருதுநகர் : 100 நாள் திட்டத்தில் வேலை வழங்க தினசரி ரூ.120 வசூலிப்பதாக புகார்!

டெல்லி : 4 மாடி கட்டடம் இடிந்து விபத்து!

ஆஸ்திரேலியாவில் வீட்டுக்குள் நுழைந்த பாம்பை கண்டு அஞ்சாத சிறுமி!

நாகை : மழையின் காரணமாக 9,000 ஏக்கர் அளவில் உப்பு உற்பத்தி பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies