வன்முறையால் தடைபட்ட ஊர்வலம்: மீண்டும் நடத்த வி.ஹெச்.பி. முடிவு!
Jan 14, 2026, 06:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வன்முறையால் தடைபட்ட ஊர்வலம்: மீண்டும் நடத்த வி.ஹெச்.பி. முடிவு!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 14, 2023, 11:34 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹரியானா மாநிலத்தில் இஸ்லாமியர்களின் வன்முறை காரணமாக நின்றுபோன ஊர்வலத்தை, ஆகஸ்ட் 28-ம் தேதி மீண்டும் நடத்த விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு முடிவு செய்திருக்கிறது.

ஹரியானா மாநிலம் குருகிராம் அருகேயுள்ள நூஹ் பகுதியில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் “பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக யாத்திரை” கடந்த மாதம் நடந்தது. இந்த ஊர்வலத்தை குருகிராம் சிவில் லைன்ஸிலிருந்து பா.ஜ.க. மாவட்டத் தலைவர் கார்கி கக்கார் தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் கேத்லா மோட் அருகே சென்றபோது, இஸ்லாமிய இளைஞர்கள் கும்பல் ஒன்று பேரணியை தடுத்து நிறுத்தியது. மேலும், ஊர்வலத்தைத் தொடர விடாமல் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும், கார் உள்ளிட்ட வாகனங்களுக்கும் தீவைத்தனர்.

இதையடுத்து, ஊர்வலத்தில் பங்கேற்ற பெண்கள் உள்ளிட்ட 2,500 பேர் அருகிலுள்ள காவல் நிலையத்திலும், கோயில்களிலும் தஞ்சமடைந்தனர். தகவலறிந்த போலீஸார் விரைந்து சென்று, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கலவரத்தை ஒடுக்க முயன்றனர். ஆனால், வன்முறையாளர்கள் போலீஸார் மீதும் தாக்குதல் நடத்தத் தொடங்கினர். இதில், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த வீர்ர்கள் இருவர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். இதனால், அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதோடு, இணைய வசதியும் துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக, ஊர்வலம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

இதன் பிறகு, வன்முறையில் ஈடுபட்ட கலவரக்காரர்களின் வீடுகள் மற்றும் எங்கெல்லாம் இருந்து கல்வீசினார்களோ அக்கடைகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட கட்டடங்களையும் மாநில அரசு இடித்துத் தள்ளியது. இந்த சூழலில்தான், பாதியில் கைவிடப்பட்ட ஊர்வலத்தை மீண்டும் நடத்த விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு முடிவு செய்திருக்கிறது. இது தொடர்பாக, விவாதிக்க, சர்வ் ஹிந்து சமாஜ் என்கிற அமைப்பு சார்பில், பல்வால் – நூங் எல்லையிலுள்ள பாண்டிரி கிராமத்தில் மகா பஞ்சாயத்து கூட்டம் நேற்று நடந்தது.

இக்கூட்டத்தில்தான், பாதியில் தடைபட்ட ஊர்வலத்தை வரும் 28-ம் தேதி நூஹ் மாவட்டம் நல்ஹர் என்கிற இடத்தில் இருந்து மீண்டும் தொடங்குவது என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும், இப்பகுதியில் நடக்கும் மோதல்களுக்குப் பசுக் கடத்தல்தான் முக்கியக் காரணமாக இருக்கிறது. ஆகவே, நூஹ் மாவட்டத்தில் துணை ராணுவப் படையின் தலைமையகம் அமைக்க வேண்டும். நூஹ் கலவரம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும். கலவரத்தால் ஏற்பட்ட இழப்பைக் குற்றவாளிகளிடமிருந்து வசூலிக்க வேண்டும். நூஹ் மற்றும் பல்வால் மக்களின் தற்காப்புக்காக அரசு சார்பில் ஆயுதம் வழங்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

Tags: hariyana
ShareTweetSendShare
Previous Post

17 வருடங்களுக்குப் பிறகு வெஸ்ட் இண்டீஸிடம் தொடரை இழந்த இந்திய அணி!

Next Post

சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ள தொழில் முனைவோர் தம்பதியருக்கு பிரதமர் மோடி அழைப்பு.

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies