இந்திய இறகு பந்தின் சங்கத் தலைவர் ஹிமன்த் பீஷ்மா சர்மா கவுகாத்தியில் இறகு பந்தின் விளையாட்டுக்கான “தேசிய சிறப்பு மையம்” ( National Centre of Excellence )என்ற பெயரில் திறந்து வைத்தார்
அசாம் மாநிலத்தின் முதல்வரும் இந்திய இறகுபந்து சங்கத்தின் தலைவருமான ஹிமன்த் பீஷ்மா சர்மா தலைமையில் கவுகாத்தி நகரில் இறகுபந்திற்க்கான “தேசிய சிறப்பு மையம்” திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் இறகுபந்து ஒலிம்பிக் சாம்பியன் தௌபிக் ஹிதாயத், இந்திய இறகுபந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் புல்லேலா கோபிசந்த் அஸ்ஸாம் மாநில விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அமைச்சரான பிமல் போரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இது குறித்து இந்திய இறகுபந்தின் சங்க தலைவர் கூறுயதாவது,
“இந்த இறகுபந்தின் தேசிய சிறப்பு மையம் சங்கத்தின் 7 ஆண்டு கனவு திட்டம். பல இன்னல்களுக்கு பின் தேசிய அளவில் சிறப்பு மையமாக இருப்பது மட்டுமல்லாமல், உலகின் மிகச் சிறந்த மையமாகவும் இருக்கிறது. மற்ற மாநில விளையாட்டு வரலாற்றில் இந்த மையம் ஒரு புரட்சியை ஏற்படுத்தும்.
இந்த விளையாட்டு மையத்தில் 60 விளையாட்டு வீரர்கள் ஒரே நேரத்தில் விளையாட 16 அரங்கம், நவீன உடற்பயிற்சி உபகரணங்கள், வீரர்களுக்கான 60 படுக்கைகள் கொண்ட விடுதி, 2,000 சதுர அடியில் பிரத்யேகமான பிசியோதெரபி மையம், மற்றும் விளையாட்டு வீரர்களை ஊக்கம் கொடுக்கக் கூடிய பயிற்சியாளர்கள் என உள்ளடக்கி உள்ளது.” என தெரிவித்தார்.