வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட வழக்கு: விசாரிக்க மறுத்து உயர் நீதிமன்ற நீதிபதி விலகல்!
Jan 14, 2026, 06:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட வழக்கு: விசாரிக்க மறுத்து உயர் நீதிமன்ற நீதிபதி விலகல்!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 14, 2023, 08:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட வழக்கை விசாரிக்க மறுத்து மதுரை உயர் நீதிமன்றக் கிளை நீதிபதி இளங்கோவன் விலகி இருக்கிறார். வேறு நீதிபதிக்கு மாற்ற பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

தி.மு.க. அரசில் இலாகா இல்லாத அமைச்சராக இருந்து வருபவர் செந்தில் பாலாஜி. தற்போது, சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இவர், கடந்த 2011 – 16 அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில், போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது, அத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ஏராளமானோரிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, டெல்லி உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் மறுவிசாரணை நடந்து வருகிறது. பண மோசடி தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில், சொத்துக் குவிப்பு மற்றும் சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக வருமான வரித்துறையினரும், அமலாக்கத்துறையினரும் தனித் தனியாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக, கடந்த மே மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள், செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக் குமார் மற்றும் அவர்களது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் சோதனை நடத்தினர். அப்போது, செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி வீட்டுக்கு சோதனைக்குச் சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் மீது செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களும், தி.மு.க.வினரும் தாக்குதல் நடத்தியதோடு, அதிகாரிகள் சென்ற காரின் கண்ணாடியையும் அடித்து நொறுக்கினர். இதில் காயமடைந்த அதிகாரிகள், கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினர்.

இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நடந்து வருகிறது. இவ்வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணை வந்தது. ஆனால், மேற்கண்ட வழக்கை விசாரிக்க மறுத்துவிட்ட நீதிபதி இளங்கோவன், இவ்வழக்கிலிருந்தும் விலகி இருக்கிறார். இதையடுத்து, இவ்வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றப் பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

Tags: Madurai high courtdmk senthil balaji
ShareTweetSendShare
Previous Post

இந்திய தலைமை நீதிபதி பெயரில் போலிச் செய்தி: சமூக வலைத்தளங்களில் வைரலாவதால் பரபரப்பு!

Next Post

5 மாநில பிஎப்ஐ நிர்வாகிகள் வீட்டில் என்ஐஏ சோதனை

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies