இம்ரான் கானின் 9 ஜாமீன் மனுக்கள் நிராகரிப்பு: பாகிஸ்தான் நீதிமன்றங்கள் அதிரடி!
Oct 19, 2025, 07:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இம்ரான் கானின் 9 ஜாமீன் மனுக்கள் நிராகரிப்பு: பாகிஸ்தான் நீதிமன்றங்கள் அதிரடி!

Web Desk by Web Desk
Aug 16, 2023, 04:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும், பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கானின் 9 ஜாமீன் மனுக்களை இஸ்லாமாபாத் நீதிமன்றங்கள் நிராகரித்து விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

2018 முதல் 2022-ம் ஆண்டுவரை பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக இருந்தவர் பிரபல கிரிக்கெட் வீரர் இம்ரான் கான். இவரது கூட்டணி அரசியல் அங்கம் வகித்த முக்கியக் கட்சி ஒன்று விலகி, எதிர்கட்சிக் கூட்டணியில் இணைந்ததால், இம்ரானின் ஆட்சி கவிழ்ந்தது. இதன் பிறகு, இம்ரான் கான் மீது ஊழல், முறைகேடு, கொலை மிரட்டல், பயங்கரவாதம், தேச துரோகம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், ஊழல் வழக்கில் இம்ரான் கான் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து, இம்ரானின் ஆதரவாளர்கள் வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டனர். இதில், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டதோடு, பல்வேறு பகுதிகளில் இராணுவ அலுவலகங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து, வன்முறையில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக, இம்ரான் கான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதனிடையே, இம்ரான் கான் பிரதமராக இருந்த காலகட்டத்தில், அவருக்குக் கிடைத்த விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை அரசு கஜானாவில் ஒப்படைக்காமல், விற்று பணத்தை மோசடி செய்ததாக தோஷகானா ஊழல் வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கில், இம்ரான் கானுக்கு இஸ்லாமாபாத் நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. இதன் தொடர்ச்சியாக, இம்ரான் கான் தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

இந்த நிலையில், வன்முறை தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் ஜாமீன் கோரி, இம்ரான் கான் தரப்பில் இஸ்லாமாபாத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் 9 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றில் 3 ஜாமீன் மனுக்களை இஸ்லாமாபாத் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றமும், 6 மனுக்களை கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றமும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கின்றன. இதனால், இம்ரான் கானுக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

Tags: pakistanimran khanPakistan PM imran khanimran khan arrest
ShareTweetSendShare
Previous Post

பந்து வீச்சாளராகவும் உள்ள பேட்ஸ்மேன்களே இந்தியக் கிரிக்கெட் அணிக்குத் தேவை !- ஆகாஷ் சோப்ரா

Next Post

ஃபிஃபா பெண்கள் கால்பந்து உலகக்கோப்பை இறுதிபோட்டி: முதல் முறையாக ஸ்பெயின் அணி.

Related News

திருப்பூர் பேருந்து நிலையத்தில் அலைமோதிய கூட்டம் – பயணிகளை வரிசையாக நிற்க வைத்து அனுப்பிய போலீசார்!

தீபாவளி கொண்டாட சொந்த ஊர் செல்லும் மக்கள் – தாம்பரம் ரயில் நிலையத்தில் அலைமோதிய கூட்டம்!

கோவை, நீலகிரி உள்ளிட்ட 8 மாவடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

பெற்றோர்களே உஷார் : எல்லை மீறும் ChatGPT- சிறப்பு தொகுப்பு!

ஆற்காடு அருகே கடும் போக்குவரத்து நெரிசல் – அவசர அவசரமாக திறக்கப்பட்ட பாலம்!

திக்…திக்..திக்…சிதிலமடைந்த குடியிருப்புகள்.. திகிலுடன் வாழும் மக்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வரதராஜனுக்கு ஜாமின் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு!

இந்தியாவின் ராஜதந்திரம் : பாகிஸ்தானுக்கு சொல்லும் செய்தி என்ன? சிறப்பு தொகுப்பு!

சொந்த ஊர் செல்ல போதுமான பேருந்துகள் இல்லாததால் பயணிகள் அவதி – அதிகாரிகளுடன் வாக்குவாதம்!

ஜிஎஸ்டி வரி குறைப்பின் பலன் மக்களுக்கு நேரடியாக சென்றுள்ளது – நிர்மலா சீதாராமன் பேட்டி!

தீபாவளி பண்டிகை உற்சாகம் – சென்னையில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல்  பட்டாசுகளை வாங்க குவிந்த மக்கள்!

உடுமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு – பொதுமக்கள் குளிக்க தடை!

தமிழகத்தில் 1,540 திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.14, 808 கோடி செலவிடப்படாமல் திரும்ப பெறப்பட்டுள்ளது!

திருவாடானை அருகே லஞ்சம் கேட்டு மிரட்டும் வருவாய் ஆய்வாளர்!

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் ஆயிரக்கணக்கான மக்கள் – செங்கல்பட்டு அருகே கடும் போக்குவரத்து நெரிசல்!

3 மாத அரிசியை வழங்க மத்திய அரசு உத்தரவு – ஒரு மாத அரிசியை மட்டும் வழங்குவதாக தமிழக அரசு அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies