இம்ரான் கானின் 9 ஜாமீன் மனுக்கள் நிராகரிப்பு: பாகிஸ்தான் நீதிமன்றங்கள் அதிரடி!
Sep 2, 2026, 04:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இம்ரான் கானின் 9 ஜாமீன் மனுக்கள் நிராகரிப்பு: பாகிஸ்தான் நீதிமன்றங்கள் அதிரடி!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 16, 2023, 04:32 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும், பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கானின் 9 ஜாமீன் மனுக்களை இஸ்லாமாபாத் நீதிமன்றங்கள் நிராகரித்து விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

2018 முதல் 2022-ம் ஆண்டுவரை பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக இருந்தவர் பிரபல கிரிக்கெட் வீரர் இம்ரான் கான். இவரது கூட்டணி அரசியல் அங்கம் வகித்த முக்கியக் கட்சி ஒன்று விலகி, எதிர்கட்சிக் கூட்டணியில் இணைந்ததால், இம்ரானின் ஆட்சி கவிழ்ந்தது. இதன் பிறகு, இம்ரான் கான் மீது ஊழல், முறைகேடு, கொலை மிரட்டல், பயங்கரவாதம், தேச துரோகம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், ஊழல் வழக்கில் இம்ரான் கான் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து, இம்ரானின் ஆதரவாளர்கள் வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டனர். இதில், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டதோடு, பல்வேறு பகுதிகளில் இராணுவ அலுவலகங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து, வன்முறையில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக, இம்ரான் கான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதனிடையே, இம்ரான் கான் பிரதமராக இருந்த காலகட்டத்தில், அவருக்குக் கிடைத்த விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை அரசு கஜானாவில் ஒப்படைக்காமல், விற்று பணத்தை மோசடி செய்ததாக தோஷகானா ஊழல் வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கில், இம்ரான் கானுக்கு இஸ்லாமாபாத் நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. இதன் தொடர்ச்சியாக, இம்ரான் கான் தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

இந்த நிலையில், வன்முறை தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் ஜாமீன் கோரி, இம்ரான் கான் தரப்பில் இஸ்லாமாபாத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் 9 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றில் 3 ஜாமீன் மனுக்களை இஸ்லாமாபாத் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றமும், 6 மனுக்களை கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றமும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கின்றன. இதனால், இம்ரான் கானுக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

Tags: pakistanimran khanPakistan PM imran khanimran khan arrest
Share
Tweet
SendShare
Previous Post

பந்து வீச்சாளராகவும் உள்ள பேட்ஸ்மேன்களே இந்தியக் கிரிக்கெட் அணிக்குத் தேவை !- ஆகாஷ் சோப்ரா

Next Post

ஃபிஃபா பெண்கள் கால்பந்து உலகக்கோப்பை இறுதிபோட்டி: முதல் முறையாக ஸ்பெயின் அணி.

Related News

திருப்பதி ஏழுமலையான் கோயில் துணை நிர்வாக அதிகாரி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் – பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

முந்தைய ஆட்சியில் ஆசிரியர்கள், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

ரூ 4,800 கோடி மதிப்பீட்டில் மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்ரோ தனியார் மயமாக்கப்படவில்லை, தனியாரிடம் ஒப்பந்தம் மட்டுமே செய்துள்ளோம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் விளக்கம்!

மின் பயன்பாடு கணக்கெடுப்பில் தவறு ஏற்பட்டால் மேற்பார்வை பொறியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் – மின்வாரியம் எச்சரிக்கை!

அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘கம் பேக்’ கொடுக்கும் – ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை

நேபாளத்தில் இருந்து மேலும் 5 பேர் சென்னை திரும்பினர் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

விமானப் படையின் முதல் பெண் துணைத் தளபதியாக சக்தி ஷர்மா நியமனம்!

விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு திட்டத்தில் தட்கல் முறையை ரத்து செய்யக்கோரிய வழக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

வாக்கு எண்ணிக்கைக்கு ‘டோட்டலைசர்’ கருவி : உச்ச நீதிமன்றம் உத்தரவு!

உதகையில் உள்ள பள்ளி மைதானத்தை மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை தேவை – பாஜக எம்எல்ஏ போஜராஜன் வலியுறுத்தல்!

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை – ஆதவ் அர்ஜுனா

சென்னையில் 11 இடங்களில் நவீன ஏசி பேருந்து நிறுத்தங்கள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies