நேரு நினைவு அருங்காட்சியகம் பெயர் மாற்றம்!
Oct 3, 2025, 08:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நேரு நினைவு அருங்காட்சியகம் பெயர் மாற்றம்!

Web Desk by Web Desk
Aug 16, 2023, 05:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியிலுள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் என்ற பெயரை, பிரதம மந்திரிகள் நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் என்று மத்திய அரசு பெயர் மாற்றம் செய்திருக்கிறது.

இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் அதிகாரப்பூர்வ இல்லமாக டெல்லியிலுள்ள தீன் மூர்த்தி பவன் செயல்பட்டு வந்தது. நேருவின் மறைவுக்குப் பிறகு, இதை நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகமாக மாற்றிய முந்தைய காங்கிரஸ் அரசு, அதற்கு நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் என்று பெயர் சூட்டியது.

இந்த நிலையில், நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகச் சங்கத்தின் சிறப்புக் கூட்டம் கடந்த ஜூன் மாதம் நடந்தது. அப்போது, இந்தப் பெயரை மாற்ற முடிவு செய்யப்பட்டது. நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் என்பது இனி பிரதம மந்திரிகள் நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் என்று அழைக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. அப்போது, பெயர் மாற்றம் செய்வதற்குக் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இந்த நிலையில், கடந்த 11-ம் நூலகச் சங்கத்தின் சிறப்புக் கூட்டம் மீண்டும் நடந்தது. சங்கத்தின் துணைத் தலைவரான ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த கூட்டத்தில், நூலக சங்கத்தின் தலைவரும், நிர்வாகக்குழு உறுப்பினருமான நிருபேந்திர மிஸ்ரா, “பெயர் மாற்றம் செய்வது ஜனநாயகத்தின் மீதான தேசத்தின் ஆழ்ந்த அர்ப்பணிப்பை வலியுறுத்துகிறது” என்றார்.

தொடர்ந்து பேசிய ராஜ்நாத் சிங், “நேரு முதல் மோடி வரை அனைத்து பிரதமர்களின் பங்களிப்புகளையும், எதிர்கொண்ட பல்வேறு சவால்களுக்கு அவர்கள் அளித்த பதிலையும் இந்நிறுவனம் வெளிப்படுத்துவதால், பிரதம மந்திரிகள் நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் என்கிற பெயர் மாற்றம் செய்வது கட்டாயம்” என்று கூறினார்.

இதையடுத்து, நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம், ஆகஸ்ட் 14-ம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கம் என்று பெயர் மாற்றப்பட்டதாக நூலக சங்க நிர்வாகக் குழுவின் துணைத் தலைவர், தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அப்பதிவில், “சமூகத்தின் ஜனநாயகமயமாக்கல் மற்றும் பல்வகைப்படுத்துதலுக்கேற்ப நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம், 2023 ஆகஸ்ட் 14-ம் தேதி முதல் பிரதம மந்திரிகள் நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கம் என்று அறியப்படும். அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும், அப்பதிவில் தீன் மூர்த்தி பவன் படத்தை இணைத்திருந்த அவர், பாரத பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கலாச்சாரத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி ஆகியோரையும் டேக் செய்திருந்தார். இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

Tags: nehru memorialnehru memorial Librarynehru memorial name changedname changed
ShareTweetSendShare
Previous Post

செம்மண் குவாரி வழக்கில் சாட்சி விசாரணை தொடக்கம்: பொன்முடிக்கு சிக்கல்!

Next Post

பெரியவர்கள் துணையின்றி, நீர் நிலைகளில் இறங்குவதைத் குழந்தைகள் தவிர்க்க வேண்டும் – அண்ணாமலை

Related News

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

அரிச்சுவடி ஆரம்பம்!

தவெக ஆனந்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு – உயர்நீதிமன்றம்

தவெக தலைவர் விஜய்க்கு தலைமைத்துவ பண்பு இல்லை – சென்னை உயர்நீதிமன்றம் விமர்சனம்!

ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

பஞ்சாப் : சொத்தை எழுதி வைக்க கோரி மாமியாரை தாக்கிய மருமகள்!

Load More

அண்மைச் செய்திகள்

அரிய வகை கனிமங்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது – அஸ்வினி வைஷ்னவ்

கர்நாடகா : வீட்டில் மர்ம பொருள் வெடித்ததில் தம்பதி உயிரிழப்பு!

உலக அரசியலில் நாளுக்கு நாள் மோதல்கள் அதிகரித்து வருகிறது – நிர்மலா சீதாராமன்

நியூசி – ஆஸி. இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டது!

5ம் தமிழ் சங்க அமைப்பினை கண்டித்து விஷ்வ இந்து பரிஷித் போராட்டம்!

கரூர் சம்பவம் – நீதிமன்றத்தை அரசியல் களமாக்காதீர் – நீதிபதிகள்!

வியட்நாம் : புவாலோ புயல், வெள்ளத்தால் 51 பேர் பலி!

செர்பியா : கடும் பனிப்பொழிவு – வீடுகளில் முடங்கிய மக்கள்!

சேலம் : விற்பனை ஆகாத பொருட்களை ஆங்காங்கே கொட்டிய வியாபாரிகள்!

கரூரில் பெருந்துயர சம்பவம் – முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என்.டி.ஏ குழு கடிதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies