நேரு நினைவு அருங்காட்சியகம் பெயர் மாற்றம்!
Jul 25, 2026, 05:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நேரு நினைவு அருங்காட்சியகம் பெயர் மாற்றம்!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 16, 2023, 05:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியிலுள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் என்ற பெயரை, பிரதம மந்திரிகள் நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் என்று மத்திய அரசு பெயர் மாற்றம் செய்திருக்கிறது.

இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் அதிகாரப்பூர்வ இல்லமாக டெல்லியிலுள்ள தீன் மூர்த்தி பவன் செயல்பட்டு வந்தது. நேருவின் மறைவுக்குப் பிறகு, இதை நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகமாக மாற்றிய முந்தைய காங்கிரஸ் அரசு, அதற்கு நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் என்று பெயர் சூட்டியது.

இந்த நிலையில், நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகச் சங்கத்தின் சிறப்புக் கூட்டம் கடந்த ஜூன் மாதம் நடந்தது. அப்போது, இந்தப் பெயரை மாற்ற முடிவு செய்யப்பட்டது. நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் என்பது இனி பிரதம மந்திரிகள் நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் என்று அழைக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. அப்போது, பெயர் மாற்றம் செய்வதற்குக் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இந்த நிலையில், கடந்த 11-ம் நூலகச் சங்கத்தின் சிறப்புக் கூட்டம் மீண்டும் நடந்தது. சங்கத்தின் துணைத் தலைவரான ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த கூட்டத்தில், நூலக சங்கத்தின் தலைவரும், நிர்வாகக்குழு உறுப்பினருமான நிருபேந்திர மிஸ்ரா, “பெயர் மாற்றம் செய்வது ஜனநாயகத்தின் மீதான தேசத்தின் ஆழ்ந்த அர்ப்பணிப்பை வலியுறுத்துகிறது” என்றார்.

தொடர்ந்து பேசிய ராஜ்நாத் சிங், “நேரு முதல் மோடி வரை அனைத்து பிரதமர்களின் பங்களிப்புகளையும், எதிர்கொண்ட பல்வேறு சவால்களுக்கு அவர்கள் அளித்த பதிலையும் இந்நிறுவனம் வெளிப்படுத்துவதால், பிரதம மந்திரிகள் நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் என்கிற பெயர் மாற்றம் செய்வது கட்டாயம்” என்று கூறினார்.

இதையடுத்து, நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம், ஆகஸ்ட் 14-ம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கம் என்று பெயர் மாற்றப்பட்டதாக நூலக சங்க நிர்வாகக் குழுவின் துணைத் தலைவர், தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அப்பதிவில், “சமூகத்தின் ஜனநாயகமயமாக்கல் மற்றும் பல்வகைப்படுத்துதலுக்கேற்ப நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம், 2023 ஆகஸ்ட் 14-ம் தேதி முதல் பிரதம மந்திரிகள் நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கம் என்று அறியப்படும். அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும், அப்பதிவில் தீன் மூர்த்தி பவன் படத்தை இணைத்திருந்த அவர், பாரத பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கலாச்சாரத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி ஆகியோரையும் டேக் செய்திருந்தார். இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

Tags: nehru memorialnehru memorial Librarynehru memorial name changedname changed
ShareTweetSendShare
Previous Post

செம்மண் குவாரி வழக்கில் சாட்சி விசாரணை தொடக்கம்: பொன்முடிக்கு சிக்கல்!

Next Post

பெரியவர்கள் துணையின்றி, நீர் நிலைகளில் இறங்குவதைத் குழந்தைகள் தவிர்க்க வேண்டும் – அண்ணாமலை

Related News

தரகர் கூலியாக 10 பில்லியன் டாலர் நிதி உதவி : அமெரிக்காவிடம் கையேந்தும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை… நாட்டை சிதைக்காதீர்கள் – இந்திரேஷ் குமார்

மத்திய அமைச்சர்களுடன் கரப்பான் பூச்சி கட்சி பிரதிநிதிகள் சந்திப்பு!

மன்னார்குடி எம்.எல்.ஏ. காமராஜ் மீது தகுதி நீக்க நடவடிக்கை – சபாநாயகரிடம் அமமுக சார்பில் மனு!

எதிர்க்கட்சிகள் அமளி : திங்கள் வரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை ஒடுக்கும் பாகிஸ்தான் – ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடி அருணாச்சலம் மரணத்திற்கு காரணமாக காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

காவிரி நீர் பங்கீடு விவகாரம் : ஆகஸ்ட் 3-ம் தேதி கர்நாடகா செல்கிறார் முதலமைச்சர் விஜய்!

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு 70,485 பேர் விண்ணப்பம்!

இன்றைய தங்கம் விலை!

தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்தும் பணி தாமதம் – ரயில்வே அமைச்சகம்

ஜனநாயக நாடுகளின் அமைதியை சீர்குலைக்கும் DEEP STATE : டெல்லி மாணவர் போராட்டத்தின் பின்னணியில் யார்? – சிறப்பு தொகுப்பு!

கேரள ஆர்எஸ்எஸ் நிர்வாகி சீனிவாசன் கொலை வழக்கு – பிஎஃப்ஐ நிர்வாகி முகமது அலி கைது!

டெல்லி போராட்டத்தின் பின்னணியில் வெளிநாட்டு மதமாற்ற அமைப்புகள் – அம்பலமான அதிர்ச்சி தகவல்!

சமூக வலைதளங்கள் மூலம் வதந்தி பரப்ப முயற்சி – டெல்லி காவல்துறை எச்சரிக்கை!

நீண்ட தூர இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட ‘குஷா’ ஏவுகணை – முதற்கட்ட சோதனை வெற்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies