நேரு நினைவு அருங்காட்சியகம் பெயர் மாற்றம்!
Sep 10, 2026, 12:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நேரு நினைவு அருங்காட்சியகம் பெயர் மாற்றம்!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 16, 2023, 05:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டெல்லியிலுள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் என்ற பெயரை, பிரதம மந்திரிகள் நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் என்று மத்திய அரசு பெயர் மாற்றம் செய்திருக்கிறது.

இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் அதிகாரப்பூர்வ இல்லமாக டெல்லியிலுள்ள தீன் மூர்த்தி பவன் செயல்பட்டு வந்தது. நேருவின் மறைவுக்குப் பிறகு, இதை நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகமாக மாற்றிய முந்தைய காங்கிரஸ் அரசு, அதற்கு நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் என்று பெயர் சூட்டியது.

இந்த நிலையில், நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகச் சங்கத்தின் சிறப்புக் கூட்டம் கடந்த ஜூன் மாதம் நடந்தது. அப்போது, இந்தப் பெயரை மாற்ற முடிவு செய்யப்பட்டது. நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் என்பது இனி பிரதம மந்திரிகள் நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் என்று அழைக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. அப்போது, பெயர் மாற்றம் செய்வதற்குக் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இந்த நிலையில், கடந்த 11-ம் நூலகச் சங்கத்தின் சிறப்புக் கூட்டம் மீண்டும் நடந்தது. சங்கத்தின் துணைத் தலைவரான ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த கூட்டத்தில், நூலக சங்கத்தின் தலைவரும், நிர்வாகக்குழு உறுப்பினருமான நிருபேந்திர மிஸ்ரா, “பெயர் மாற்றம் செய்வது ஜனநாயகத்தின் மீதான தேசத்தின் ஆழ்ந்த அர்ப்பணிப்பை வலியுறுத்துகிறது” என்றார்.

தொடர்ந்து பேசிய ராஜ்நாத் சிங், “நேரு முதல் மோடி வரை அனைத்து பிரதமர்களின் பங்களிப்புகளையும், எதிர்கொண்ட பல்வேறு சவால்களுக்கு அவர்கள் அளித்த பதிலையும் இந்நிறுவனம் வெளிப்படுத்துவதால், பிரதம மந்திரிகள் நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் என்கிற பெயர் மாற்றம் செய்வது கட்டாயம்” என்று கூறினார்.

இதையடுத்து, நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம், ஆகஸ்ட் 14-ம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கம் என்று பெயர் மாற்றப்பட்டதாக நூலக சங்க நிர்வாகக் குழுவின் துணைத் தலைவர், தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அப்பதிவில், “சமூகத்தின் ஜனநாயகமயமாக்கல் மற்றும் பல்வகைப்படுத்துதலுக்கேற்ப நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம், 2023 ஆகஸ்ட் 14-ம் தேதி முதல் பிரதம மந்திரிகள் நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கம் என்று அறியப்படும். அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும், அப்பதிவில் தீன் மூர்த்தி பவன் படத்தை இணைத்திருந்த அவர், பாரத பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கலாச்சாரத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி ஆகியோரையும் டேக் செய்திருந்தார். இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

Tags: nehru memorialnehru memorial Librarynehru memorial name changedname changed
Share
Tweet
SendShare
Previous Post

செம்மண் குவாரி வழக்கில் சாட்சி விசாரணை தொடக்கம்: பொன்முடிக்கு சிக்கல்!

Next Post

பெரியவர்கள் துணையின்றி, நீர் நிலைகளில் இறங்குவதைத் குழந்தைகள் தவிர்க்க வேண்டும் – அண்ணாமலை

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies