செம்மண் குவாரி வழக்கில் சாட்சி விசாரணை தொடக்கம்: பொன்முடிக்கு சிக்கல்!
Aug 17, 2025, 08:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செம்மண் குவாரி வழக்கில் சாட்சி விசாரணை தொடக்கம்: பொன்முடிக்கு சிக்கல்!

Web Desk by Web Desk
Aug 16, 2023, 05:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில், சாட்சி விசாரணை இன்று தொடங்கி இருக்கிறது. இதனால், பொன்முடிக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

கடந்த 2006 முதல் 2011-ம் ஆண்டுவரையிலான தி.மு.க. ஆட்சி காலத்தில் உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, கூடுதலாக கனிமவளத்துறையையும் கவனித்து வந்தார். அப்போது, விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூந்துறை கிராமத்தில் முறைகேடாக செம்மண் குவாரியை ஏலம் எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், அந்த செம்மண் குவாரியில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட, கூடுதலாக செம்மண்ணை எடுத்து முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக, பொன்முடி, அவரது மகன் கௌதமசிகாமணி, ஜெயச்சந்திரன், கோபிநாத், கோதகுமார், சதானந்தன், லோகநாதன், ராஜமகேந்திரன் ஆகிய 8 பேர் மீது 2012-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கு கடந்த 11-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, பொன்முடி, கௌதமசிகாமணியைத் தவிர மற்றவர்கள் ஆஜராகினர்.

அதேபோல, புகார்தாரரான ஓய்வுபெற்ற வானூர் வட்டாட்சியர் குமரபாலனும் உடல்நலக் குறைவு காரணமாக ஆஜராகவில்லை. எனவே, குமரபாலனிடம் காணொளி வாயிலாக விசாரணை நடத்தும் வகையில், வழக்கு விசாரணையை 16-ம் தேதிக்கு நீதிபதி பூர்ணிமா ஒத்திவைத்தார். அதன்படி, இன்று வழக்கு விசாரணை நடந்தது. அப்போது, அரசுத் தரப்பு சாட்சியான குமரபாலன், விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

இதையடுத்து, வழக்கு விசாரணை சூடுபிடித்திருக்கிறது. இதனால், அமைச்சர் பொன்முடிக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. ஏற்கெனவே, சொத்துக் குவிப்பு வழக்கில், பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை வேலூர் நீதிமன்றம் விடுவித்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து மறுவிசாரணையை தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags: PonmudiMinister PonmudiPonmudi SonPonmudi Son gowthama SigamaniGowthama Sigamani
ShareTweetSendShare
Previous Post

லிபியாவில் ஆயுதக் குழுக்கள் மோதல்: 27 பேர் பலி… 106 பேர் படுகாயம்!

Next Post

நேரு நினைவு அருங்காட்சியகம் பெயர் மாற்றம்!

Related News

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

அம்பத்தூர் அருகே படவட்டம்மன் கோயில் ஆடி மாத திருவிழா – பால்குடம் எடுத்த பக்தர்கள்!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

திமுக ஆட்சியில் அமைச்சர் வீடுகளிலேயே அமலாக்கத்துறை சோதனை – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்!

தீபாவளிக்கு இரு போனஸ் – பிரதமர் மோடி உறுதி

Load More

அண்மைச் செய்திகள்

வாகனங்களை நிறுத்தி வழிப்பறி கொள்ளை – முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு!

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை – தேர்தல் ஆணையம் விளக்கம்!

கூட்டணியில் இருந்து வெளியே அனுப்பி விடுவார்கள் என்ற பயத்தில் திருமாவளவன் உள்ளார் – எல்.முருகன் விமர்சனம்!

பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு ஹாங்கோர் வகை நீர்மூழ்கிக் கப்பல் – சீனா வழங்கியது!

போரால் பாதிக்கப்படும் குழந்தைகள் – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு டிரம்ப் மனைவி கடிதம்!

வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

சீர்காழி அருகே மீனவர் வலையில் சிக்கிய 300 கிலோ சுறா மீன் – ரூ.1.50 லட்சத்திற்கு ஏலம்!

மயிலாப்பூரில் சுதந்திர போராட்ட தியாகி ஆர்யா பெயரில் அறக்கட்டளை தொடக்கம்!

ராமநாதபுரம் அருகே ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடாமல் இருந்த கேட்கீப்பர் பணியிடை நீக்கம்!

நெல்லையில் பாஜக மண்டல மாநாடு – சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார் மத்திய அமைச்சர் அமித் ஷா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies