லிபியாவில் ஆயுதக் குழுக்கள் மோதல்: 27 பேர் பலி… 106 பேர் படுகாயம்!
Apr 28, 2026, 12:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

லிபியாவில் ஆயுதக் குழுக்கள் மோதல்: 27 பேர் பலி… 106 பேர் படுகாயம்!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 16, 2023, 05:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில், எண்ணெய் வளம் மிக்க ஒன்றான லிபியாவில் அதிபர் கடாஃபி தலைமையிலான சர்வாதிகார ஆட்சி நடந்து வந்தது. கடந்த 2011-ம் ஆண்டு நேட்டோ படையினரின் ஆதரவுடன் புரட்சி வெடித்தது. இதில் கடாஃபி கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து, அந்நாட்டில் உள்நாட்டுக் கலவரம் தொடர்ந்து வருகிறது.

அதாவது, தலைநகர் திரிபோலியை மையமாகக் கொண்டு பிரதமர் அப்துல் ஹமீத் பெய்பா தலைமையில் ஒரு அரசு நடந்து வருகிறது. அதேசமயம், சிர்ட் கடற்கரை நகரை மையமாக வைத்து ஃபாதி பகாஷா என்பவர் தலைமையில் போட்டி அரசு ஒன்று செயல்பட்டு வருகிறது. இவர், தன்னை பிரதமராக அறிவித்து செயல்பட்டு வருகிறார்.

இந்த இருவருமே தனித் தனியாக போராளிக் குழுவை வைத்திருக்கிறார்கள். இந்த இருக்களுக்கு இடையே அடிக்கடி மோதல் நடக்கும், இது தவிர, முன்னாள் ராணுவத் தளபதி ஹைதாம் தஜோரி தலைமையிலான புரட்சியாளர்கள் படையணி என்னும் போராளிக் குழுவும், அப்தெல் கனி அல் கிக்லி தலைமையிலான மற்றொரு போராளிக் குழுவும் உள்ளன.

இக்குழுக்கள் அடிக்கடி மோதிக் கொள்வதன் காரணமாக, லிபியாவில் உள்நாட்டு கலவரம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இப்போராளிக் குழுக்களின் மோதல்களில், போராளிகளில் பலர் உயிரிழப்பதோடு, அப்பாவி மக்கள் பலியாவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்தச் சூழலில், திரிபோலியில் நேற்று இரு சக்தி வாய்ந்த குழுக்களுக்கிடையே நடந்த ஆயுதத் தாக்குதலில் 27 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும் 106 பேர் படுகாயமடைந்து மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

444 படைப்பிரிவின் தளபதியாக இருப்பவர் மஹ்மூத் ஹம்சா. இவர், கடந்த 14-ம் தேதி விமானம் ஏறுவதற்காக, தெற்கு லிபியாவின் தலைநகர் திரிபோலியில் உள்ள முக்கிய விமான நிலையமான மிட்டிகாவுக்கு வந்திருக்கிறார். ஆனால், விமான நிலையத்தில் இருந்த சிறப்புத் தடுப்புப் படையினர், மஹ்மூத் ஹம்சாவை விமானம் ஏறவிடாமல் தடுத்து நிறுத்தியதோடு, கைதும் செய்தனர்.

இத்தகவல் மளமளவென 444 படைப்பிரிவினருக்குப் பரவியது. இதையடுத்து, அன்றைய தினம் இரவு விமான நிலையத்தில் குவிந்த 444 படைப்பிரிவினர், சிறப்புத் தடுப்புப் பிரிவினர் மீது ஆயுதத் தாக்குதல் நடத்தினர். இதற்கு சிறப்புப் படைப் பிரிவினரும் பதிலடி தாக்குதல் கொடுத்தனர். இதனால், விமான நிலையம் அமைந்திருந்த பகுதியே போர்க்களம்போல காட்சியளித்தது.

இதைத் தொடர்ந்து, ஐ.நா.வால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய ஒற்றுமை அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் ஏற்பட்ட உடன்படிக்கையைத் தொடர்ந்து நேற்று மோதல்கள் நிறுத்தப்பட்டன. இச்சம்பவத்தில் 27 பேர் உயிரிழந்தனர். இவர்களில் அப்பாவி பொதுமக்களும் அடங்குவர். அதேபோல, 106 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். இவர்களிலும் ஏராளமானோர் பொதுமக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: libiyaWARWar Time
ShareTweetSendShare
Previous Post

இந்தியக் கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் முகமது ஹபீப் மறைந்தார்.

Next Post

செம்மண் குவாரி வழக்கில் சாட்சி விசாரணை தொடக்கம்: பொன்முடிக்கு சிக்கல்!

Related News

இந்திய பொருட்களுக்கு பூஜ்யம் வரி; இந்தியா, நியூசி., வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து

இந்தியர்கள் நாடு திரும்புங்கள்;ஸ்ரீதர் வேம்பு வேண்டுகோள்

தரமற்ற கேன் குடிநீர் விற்றால் ரூ.5,000 அபராதம்; சுகாதாரத்துறை எச்சரிக்கை

இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்; நியூசி. பிரதமர் பெருமிதம்

பைக்குகளை சேதப்படுத்தி பெண்ணை தாக்கிய போதை இளைஞர்கள்; சென்னை எண்ணூரில் துணிகரம்

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கார் மீது தாக்குதலா ?; போலீசார் விசாரணை

Load More

அண்மைச் செய்திகள்

ஏஐ தொழில்நுட்பம் தெரியாமல் இருப்பது கற்காலத்தில் வாழ்வதற்கு இணையானது; ஆனந்த் வெங்கடேஷ்

பெண்களின் பாதுகாப்பில் மம்தா பானர்ஜி தோல்வியடைந்து விட்டார்;உள்துறை அமைச்சர் அமித்ஷா

பாரம்பரிய வழிபாட்டு முறைகளில் தலையிட முடியாது; சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து

முகவர்கள் இல்லாத நேரத்தில் இவிஎம் பேட்டரி நீக்கமா ?; அதிகாரிகளுடன் வாக்குவாதம்

பாஜகவில் இணைந்த ராகவ் சதா தலைமையிலான எம்.பிக்கள்; காலியான ஆம் ஆத்மி கூடாரம்

முந்தைய தலைவர்கள் எடுக்க தயங்கிய முக்கிய முடிவுகளை பிரதமர் மோடி எடுத்தார்; புகழாரம் சூட்டிய எம்.பி

முதல்கட்ட வாக்குப்பதிவில் மாற்றத்திற்கான அலை; பிரதமர் மோடி

தமிழகத்தில் அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் – கே.பி.ராமலிங்கம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் கோலாகலம்!

தமிழக சடட்ப்பேரவை தேர்தல் : 2021ஆம் ஆண்டை விட சுமார் 22 லட்சம் பேர் கூடுதலாக வாக்களிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies