லிபியாவில் ஆயுதக் குழுக்கள் மோதல்: 27 பேர் பலி… 106 பேர் படுகாயம்!
Jul 28, 2026, 09:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

லிபியாவில் ஆயுதக் குழுக்கள் மோதல்: 27 பேர் பலி… 106 பேர் படுகாயம்!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 16, 2023, 05:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில், எண்ணெய் வளம் மிக்க ஒன்றான லிபியாவில் அதிபர் கடாஃபி தலைமையிலான சர்வாதிகார ஆட்சி நடந்து வந்தது. கடந்த 2011-ம் ஆண்டு நேட்டோ படையினரின் ஆதரவுடன் புரட்சி வெடித்தது. இதில் கடாஃபி கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து, அந்நாட்டில் உள்நாட்டுக் கலவரம் தொடர்ந்து வருகிறது.

அதாவது, தலைநகர் திரிபோலியை மையமாகக் கொண்டு பிரதமர் அப்துல் ஹமீத் பெய்பா தலைமையில் ஒரு அரசு நடந்து வருகிறது. அதேசமயம், சிர்ட் கடற்கரை நகரை மையமாக வைத்து ஃபாதி பகாஷா என்பவர் தலைமையில் போட்டி அரசு ஒன்று செயல்பட்டு வருகிறது. இவர், தன்னை பிரதமராக அறிவித்து செயல்பட்டு வருகிறார்.

இந்த இருவருமே தனித் தனியாக போராளிக் குழுவை வைத்திருக்கிறார்கள். இந்த இருக்களுக்கு இடையே அடிக்கடி மோதல் நடக்கும், இது தவிர, முன்னாள் ராணுவத் தளபதி ஹைதாம் தஜோரி தலைமையிலான புரட்சியாளர்கள் படையணி என்னும் போராளிக் குழுவும், அப்தெல் கனி அல் கிக்லி தலைமையிலான மற்றொரு போராளிக் குழுவும் உள்ளன.

இக்குழுக்கள் அடிக்கடி மோதிக் கொள்வதன் காரணமாக, லிபியாவில் உள்நாட்டு கலவரம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இப்போராளிக் குழுக்களின் மோதல்களில், போராளிகளில் பலர் உயிரிழப்பதோடு, அப்பாவி மக்கள் பலியாவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்தச் சூழலில், திரிபோலியில் நேற்று இரு சக்தி வாய்ந்த குழுக்களுக்கிடையே நடந்த ஆயுதத் தாக்குதலில் 27 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும் 106 பேர் படுகாயமடைந்து மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

444 படைப்பிரிவின் தளபதியாக இருப்பவர் மஹ்மூத் ஹம்சா. இவர், கடந்த 14-ம் தேதி விமானம் ஏறுவதற்காக, தெற்கு லிபியாவின் தலைநகர் திரிபோலியில் உள்ள முக்கிய விமான நிலையமான மிட்டிகாவுக்கு வந்திருக்கிறார். ஆனால், விமான நிலையத்தில் இருந்த சிறப்புத் தடுப்புப் படையினர், மஹ்மூத் ஹம்சாவை விமானம் ஏறவிடாமல் தடுத்து நிறுத்தியதோடு, கைதும் செய்தனர்.

இத்தகவல் மளமளவென 444 படைப்பிரிவினருக்குப் பரவியது. இதையடுத்து, அன்றைய தினம் இரவு விமான நிலையத்தில் குவிந்த 444 படைப்பிரிவினர், சிறப்புத் தடுப்புப் பிரிவினர் மீது ஆயுதத் தாக்குதல் நடத்தினர். இதற்கு சிறப்புப் படைப் பிரிவினரும் பதிலடி தாக்குதல் கொடுத்தனர். இதனால், விமான நிலையம் அமைந்திருந்த பகுதியே போர்க்களம்போல காட்சியளித்தது.

இதைத் தொடர்ந்து, ஐ.நா.வால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய ஒற்றுமை அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் ஏற்பட்ட உடன்படிக்கையைத் தொடர்ந்து நேற்று மோதல்கள் நிறுத்தப்பட்டன. இச்சம்பவத்தில் 27 பேர் உயிரிழந்தனர். இவர்களில் அப்பாவி பொதுமக்களும் அடங்குவர். அதேபோல, 106 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். இவர்களிலும் ஏராளமானோர் பொதுமக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: libiyaWARWar Time
ShareTweetSendShare
Previous Post

இந்தியக் கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் முகமது ஹபீப் மறைந்தார்.

Next Post

செம்மண் குவாரி வழக்கில் சாட்சி விசாரணை தொடக்கம்: பொன்முடிக்கு சிக்கல்!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies