இமாச்சலில் கனமழை: பலி எண்ணிக்கை 71-ஆக உயர்வு
Jul 5, 2025, 12:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இமாச்சலில் கனமழை: பலி எண்ணிக்கை 71-ஆக உயர்வு

Web Desk by Web Desk
Aug 17, 2023, 03:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இமாச்சல பிரதேசத்தில் இடைவிடாது பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகள் காரணமாக இதுவரை 71 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இமாச்சலில் நிலச்சரிவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது. புதன்கிழமை மேலும் பல உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மாநிலத்தின் முதன்மைச் செயலாளர் (வருவாய்) ஒன்கர் சந்த் சர்மா கூறுகையில், “கடந்த மூன்று தினங்களில் 71 பேர் உயிரிழந்தனர்; 13 பேர் மாயமானார். இரவு வரை மொத்தம் 57 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன”.

கடந்த 4 நாட்களாக பெய்து வரும் கனமழையால் சிம்லா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அங்கு சம்மர் ஹில், ஃபாகி மற்றும் கிருஷ்ணாநகர் ஆகிய மூன்று பகுதிகள் நிலச்சரிவினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

“கடந்த 24 மணிநேரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கிருஷ்ணா நகரின் துணைப் பகுதிகளான இண்டோரா மற்றும் ஃபாட்பூரில் இருந்து 1,731 பேர் மீட்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து மக்களை மீட்கும் பணிகள் விமானப் படையினர், இராணுவத்தினர் , தேசிய பேரிடர் மீட்பு படையினரின் உதவியுடன் நடந்து வருகிறது” என்று இணை ஆணையர் நிபுன் ஜிந்தால் தெரிவித்தார்.

இதனிடையே, இமாச்சலப் பிரதேசத்தில் ஜூன் 1 முதல் செப்டம்பர் 30 வரையிலான பருவமழை காலத்தின் சராசரி மழையளவு 730 மி.மீ. ஆனால், கடந்த 54 நாட்களில் ஏற்கெனவே 742 மி.மீ மழை பெய்துவிட்டது என வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதற்குமுன் இப்படி ஒரு பேரழிவு ஏற்பட்டதில்லை’ என இமாச்சல பிரதேச முதலமைச்சர் சுக்விந்தசர் சிங் தெரிவித்துள்ளார் . கடந்த 50 ஆண்டுகளில் இப்படி ஒரு இயற்கை சீற்றத்தை தாங்கள் எதிர்கொண்டதில்லை எனவும், இதனால் இமாச்சல பிரதேசத்தில் 10,000 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்று (புதன்கிழமை) இமாச்சல் பிரதேசத்தின் ஆளுநர் சிவ் பிரதாப் ஷுக்லா மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை ஒரு சமுதாய கூடத்தில் சந்தித்தார் . பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண நிதி மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

Tags: rainhimachal pradesh
ShareTweetSendShare
Previous Post

உத்தராகண்ட் கனமழை: பலி எண்ணிக்கை 10-ஆக உயர்வு!

Next Post

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிக்கு டெண்டர்: மத்திய அரசு அறிவிப்பு

Related News

சீனாவை மிரட்டும் இந்தியா : கடலுக்கடியில் கண்காணிப்பு – ஆஸி.,யுடன் கைகோர்ப்பு!

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

ரிதன்யா தற்கொலை விவகாரம் : விசாரணையில் அரசியல் தலையீடு – பெற்றோர் பரபரப்பு புகார்!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

மேற்கு தொடர்ச்சி மலையில் அதிசயம் : வன விலங்குகள் மத்தியில் வாழும் “தனி ஒரு மூதாட்டி”!

Load More

அண்மைச் செய்திகள்

எப்போ சார் திறப்பீங்க? – குமுறும் பொதுமக்கள்!

100% சாலைகள் அமைத்து விட்டோம் என்று தமிழக அரசு பொய் கூறுகிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

எனக்கு IAS, IPS என யாரையும் தெரியாது – நிகிதா ஆடியோ வெளியீடு!

அஜித்குமார் கொலை : அரசு மாணவர் விடுதி அருகே காவல்துறை வாகனம் நிற்கும் சிசிடிவி வெளியீடு!

அஜித்குமாரின் குடும்பத்தினரை சந்தித்து நயினார் நாகேந்திரன் ஆறுதல்!

கனமழையால் பாதித்த மாநில முதல்வர்களுடன் பேசிய அமித்ஷா!

விழுப்புரத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த பெண் நூலகரை தரையில் அமர்த்தியதாக புகார்!

மக்கள் பிரச்னைகளில் தீவிர கவனம் செலுத்துகிறார் டெல்லி முதல்வர் – சக்சேனா

கிருஷ்ணகிரி : 13 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்த இளைஞர்கள் : 3 பேர் கைது!

மகாராஷ்டிரா : மராத்தி பேசாததற்காக தாக்குதல் – அமைச்சர் கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies