இராஜகோபால தொண்டைமானிற்கு நினைவிடம் அமைக்க ஊழல் திமுக அரசு 2 ஏக்கர் நிலம் கொடுக்க மறுக்கிறது- அண்ணாமலை
Oct 25, 2025, 11:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இராஜகோபால தொண்டைமானிற்கு நினைவிடம் அமைக்க ஊழல் திமுக அரசு 2 ஏக்கர் நிலம் கொடுக்க மறுக்கிறது- அண்ணாமலை

Web Desk by Web Desk
Aug 19, 2023, 03:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

100 ஏக்கர் நிலம் தானமாக கொடுத்தவரின் மணிமண்டபத்திற்கு,
ஊழல் திமுக அரசு 2 ஏக்கர் நிலம் கொடுக்க மறுக்கிறது என பாஜக மாநில் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பல நூற்றாண்டுகள் தொன்மை வாய்ந்த புதுக்கோட்டை சமஸ்தானத்தின் மன்னராக புதுக்கோட்டை நகரின் வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றிய ஐயா ராஜகோபால தொண்டைமானின் நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு கொண்டாடப்பட்டது நாம் அறிந்ததே. புதுக்கோட்டை மக்களின் நலனுக்காக, விவசாயம், போக்குவரத்து, நீர்ப்பாசனம் என பல்வேறு துறைகளில் வசதிகளை ஏற்படுத்தித் தந்தவர் மன்னர் ராஜகோபால தொண்டைமான்.

புதுக்கோட்டை சமஸ்தானத்தை, அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் அவர்களது கோரிக்கையை ஏற்று இந்தியக் குடியரசுடன் இணைக்க ஒப்புக்கொண்ட மன்னர் ராஜகோபால தொண்டைமான், அவரது அரச கருவூலத்திலிருந்து, 53 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் மற்றும் பணத்தை நாட்டுக்கு வழங்கியவர்.

1974 ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டபோது, புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம் அமைக்க 100 ஏக்கர் அளவுள்ள நிலத்தையும், தன் சொந்த அரண்மனையையும் வழங்கிய பெருமைக்குரியவர்.

அத்தகைய பெருமை வாய்ந்த மன்னர் ராஜகோபால தொண்டைமான் அவர்களுக்கு நினைவிடம் அமைக்க, ஆட்சியர் அலுவலகம் அமைந்திருக்கும் அவர் தானமாகக் கொடுத்த 100 ஏக்கர் நிலத்திலிருந்து, இரண்டு ஏக்கர் நிலத்தை, நினைவிடம் அமைக்க வழங்க வேண்டும் என்ற மன்னர் குடும்பத்தின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்காமல், வெறும் 35 சென்ட் நிலம் மட்டுமே ஒதுக்கீடு செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

நாட்டுக்காகவும், புதுக்கோட்டை மக்களுக்காகவும் தனது
உடைமைகள் அனைத்தையும் கொடுத்த மன்னர் ராஜகோபால தொண்டைமான் அவர்களது வரலாற்றை, இன்னும் பல தலைமுறைகளுக்குக் கொண்டு செல்ல வேண்டிய கடமை தமிழக மக்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

மன்னர் தானமாகக் கொடுத்த 100 ஏக்கர் நிலத்தில் இருந்து, அவருக்கு நினைவிடம் அமைக்க 2 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்வதில் தமிழக அரசுக்கு என்ன பிரச்சினை உள்ளது என்பது தெரியவில்லை.

உடனடியாக, தமிழக அரசு தனது வீண் பிடிவாதத்தை விட்டு விட்டு, தமிழகத்தின் பெருமை மிகுந்த மன்னர்களில் ஒருவரான மன்னர் ராஜகோபால தொண்டைமான் அவர்களுக்கு நினைவிடம் அமைக்க, ஆட்சியர் அலுவலகம் அமைந்திருக்கும் நிலத்தில், 2 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்றும், மன்னர் நினைவிடப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Tags: k annamalaibjp k annamalai
ShareTweetSendShare
Previous Post

இந்தியா அயர்லாந்து டி20: இந்திய அணி வெற்றி.

Next Post

டெல்லி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இன்றுகனமழை.

Related News

மதுரையில் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை – சாலையில் நீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி!

கடன் வாங்குவதில் தமிழகம் முதலிடம் – ஹெச்.ராஜா விமர்சனம்!

இன்றைய தங்கம் விலை!

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மனித உரிமை மீறலை பாகிஸ்தான் கைவிட வேண்டும் – ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி வலியுறுத்தல்!

சட்டமன்ற தேர்தலில் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் – நயினார் நாகேந்திரன் உறுதி!

வடகிழக்கு பருவமழை பாதிப்பு – மத்திய குழு இன்று ஆய்வு!

Load More

அண்மைச் செய்திகள்

செஞ்சி அருகே தொடர் மழை காரணமாக நீரில் மூழ்கிய நெற்பயிர் – விவசாயிகள் வேதனை!

வங்கக்கடலில் வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மண்டலமாக வலுவடையக்கூடும் – வானிலை ஆய்வு மையம்

அமெரிக்காவை முந்தும் சீனா : மிகப்பெரிய ராணுவ போக்குவரத்து விமானம் வடிவமைப்பு!

இந்தியாவை தொடர்ந்து ஆப்கனிஸ்தானும் அதிரடி : பாகிஸ்தானுக்குள் பாயும் நதியின் குறுக்கே அணை கட்ட முடிவு!

டெல்லியில் மாசு : மேக விதைப்பு பலன் தருமா? – செயற்கை மழை எப்படி சாத்தியம்!

AI தளங்களுக்கு கடிவாளம் போடும் இந்தியா – கடுமையான விதிகளை விதிக்க திட்டம்!

தீஸ்தா நதிநீர் பிரச்னையில் மாஸ்டர் பிளான் : சீனா-வங்கதேசம் கைகோர்ப்பு – இந்தியாவை பாதிக்குமா?

அடுத்த தலைமுறை போருக்கு தயாராகும் இந்திய ராணுவம் : களமிறக்கப்படும் பைரவ் கமாண்டோ படை ‘அஷ்னி’ ட்ரோன் பிரிவு!

புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை : மீண்டும் தலைதூக்க சதி செய்கிறதா PFI?

ஆந்திராவை உலுக்கிய பேருந்து விபத்து : தூக்கத்திலேயே துடிதுடித்து பலியான சோகம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies