புதிய சிக்கலில் இம்ரான் கான்: சைபர் வழக்கு பதிவு!
Jan 14, 2026, 04:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதிய சிக்கலில் இம்ரான் கான்: சைபர் வழக்கு பதிவு!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 19, 2023, 08:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது மத்திய புலனாய்வு அமைப்பின் தீவிரவாத எதிர்ப்புப் பிரிவு புதிதாக ஒரு வழக்கு பதிவு செய்திக்கின்றனர். இதனால் இம்ரானுக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

2018 முதல் 2022-ம் ஆண்டு வரை பாகிஸ்தான் பிரதமராக இருந்தவர் பிரபல கிரிக்கெட் வீரர் இம்ரான் கான். இவரது தெஹ்கீர் இ இன்சாப் கட்சியுடன் கூட்டணியில் இருந்த முக்கிய கட்சி ஒன்று, எதிர்க்கட்சியோடு கூட்டணி சேர்ந்தது. இதனால், இம்ரான் கானின் ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டது. இதையறிந்த இம்ரான் கான், கடந்தாண்டு மார்ச் மாதம் தனது அரசை கவிழ்க்க சர்வதேச சதி நடப்பதாகவும், அமெரிக்காவின் ஆதரவு பெற்ற கும்பல் இந்த சதிக்குக் காரணமாக இருப்பதாகவும் கூறி, ஒரு கடிதத்தைக் காட்டினார்.

இதன் பிறகு நடந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மூலம் இம்ரான் கான் அரசு கவிழ்ந்தது. பின்னர், இம்ரான் கான் மீது ஊழல், மோசடி, கொலை மிரட்டல் உட்பட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், அவர் பிரதமராக இருந்தபோது கிடைத்த விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை அரசு கஜானாவில் சேர்க்காமல், மோசடி செய்ததாக தோஷகானா ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த சூழலில், அமெரிக்க தூதரகத்தின் இராஜதந்திர கேபிளின் உள்ளடக்கத்தை பொதுவெளியில் அம்பலப்படுத்தியதாக, மத்திய புலனாய்வு அமைப்பின் (எஃப்.ஐ.ஏ.) தீவிரவாத எதிர்ப்புப் பிரிவு கடந்தாண்டு ஏப்ரல் மாதம், இம்ரான் கான் மீது வழக்குப் பதிவு செய்தது.

இதனிடையே, தோஷகானா ஊழல் வழக்கில் இம்ரானுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, பஞ்சாப் மாகாணத்திலுள்ள அட்டாக் சிறையில் அவர் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில், மத்திய புலனாய்வு அமைப்பின் (எஃப்.ஐ.ஏ.) கூட்டு விசாரணைக் குழு, கடந்த சில தினங்களுக்கு முன்பு அட்டாக் சிறைக்குள் சென்று இம்ரான் கானிடம் விசாரணை நடத்தியது.

மேலும், அவரது முதன்மைச் செயலாளர் ஆசம் கானிடமும் எஃப்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர், நீதிபதி முன்பும், எஃப்.ஐ.ஏ. முன்பும் கூறுகையில், தனது அரசியல் ஆதாயங்களுக்காகவும், நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பை தடுக்கவும், அமெரிக்க சைபரை இம்ரான் கான் பயன்படுத்தியதாகக் கூறினார். இதைத் தொடர்ந்து, இம்ரான் கான் மீது, அதிகாரப்பூர்வ இரகசிய சட்டத்தின் கீழ் எஃப்.ஐ.ஏ. வழக்குப் பதிவு செய்திருக்கிறது. இதனால், இம்ரான் கானுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

Tags: imran khanimran khan arrest latest newsimrankhan
ShareTweetSendShare
Previous Post

மேகாலயாவில் ரூபாய் 2 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

Next Post

“அம்ரித் சரோவர்” திட்டத்தைச் செயல்படுத்துவதில் தமிழகம் பின்னோக்கி உள்ளது- மத்திய அரசு

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies