புதிய சிக்கலில் இம்ரான் கான்: சைபர் வழக்கு பதிவு!
Aug 21, 2025, 04:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதிய சிக்கலில் இம்ரான் கான்: சைபர் வழக்கு பதிவு!

Web Desk by Web Desk
Aug 19, 2023, 08:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது மத்திய புலனாய்வு அமைப்பின் தீவிரவாத எதிர்ப்புப் பிரிவு புதிதாக ஒரு வழக்கு பதிவு செய்திக்கின்றனர். இதனால் இம்ரானுக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

2018 முதல் 2022-ம் ஆண்டு வரை பாகிஸ்தான் பிரதமராக இருந்தவர் பிரபல கிரிக்கெட் வீரர் இம்ரான் கான். இவரது தெஹ்கீர் இ இன்சாப் கட்சியுடன் கூட்டணியில் இருந்த முக்கிய கட்சி ஒன்று, எதிர்க்கட்சியோடு கூட்டணி சேர்ந்தது. இதனால், இம்ரான் கானின் ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டது. இதையறிந்த இம்ரான் கான், கடந்தாண்டு மார்ச் மாதம் தனது அரசை கவிழ்க்க சர்வதேச சதி நடப்பதாகவும், அமெரிக்காவின் ஆதரவு பெற்ற கும்பல் இந்த சதிக்குக் காரணமாக இருப்பதாகவும் கூறி, ஒரு கடிதத்தைக் காட்டினார்.

இதன் பிறகு நடந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மூலம் இம்ரான் கான் அரசு கவிழ்ந்தது. பின்னர், இம்ரான் கான் மீது ஊழல், மோசடி, கொலை மிரட்டல் உட்பட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், அவர் பிரதமராக இருந்தபோது கிடைத்த விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை அரசு கஜானாவில் சேர்க்காமல், மோசடி செய்ததாக தோஷகானா ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த சூழலில், அமெரிக்க தூதரகத்தின் இராஜதந்திர கேபிளின் உள்ளடக்கத்தை பொதுவெளியில் அம்பலப்படுத்தியதாக, மத்திய புலனாய்வு அமைப்பின் (எஃப்.ஐ.ஏ.) தீவிரவாத எதிர்ப்புப் பிரிவு கடந்தாண்டு ஏப்ரல் மாதம், இம்ரான் கான் மீது வழக்குப் பதிவு செய்தது.

இதனிடையே, தோஷகானா ஊழல் வழக்கில் இம்ரானுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, பஞ்சாப் மாகாணத்திலுள்ள அட்டாக் சிறையில் அவர் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில், மத்திய புலனாய்வு அமைப்பின் (எஃப்.ஐ.ஏ.) கூட்டு விசாரணைக் குழு, கடந்த சில தினங்களுக்கு முன்பு அட்டாக் சிறைக்குள் சென்று இம்ரான் கானிடம் விசாரணை நடத்தியது.

மேலும், அவரது முதன்மைச் செயலாளர் ஆசம் கானிடமும் எஃப்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர், நீதிபதி முன்பும், எஃப்.ஐ.ஏ. முன்பும் கூறுகையில், தனது அரசியல் ஆதாயங்களுக்காகவும், நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பை தடுக்கவும், அமெரிக்க சைபரை இம்ரான் கான் பயன்படுத்தியதாகக் கூறினார். இதைத் தொடர்ந்து, இம்ரான் கான் மீது, அதிகாரப்பூர்வ இரகசிய சட்டத்தின் கீழ் எஃப்.ஐ.ஏ. வழக்குப் பதிவு செய்திருக்கிறது. இதனால், இம்ரான் கானுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

Tags: imran khanimran khan arrest latest newsimrankhan
ShareTweetSendShare
Previous Post

மேகாலயாவில் ரூபாய் 2 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

Next Post

“அம்ரித் சரோவர்” திட்டத்தைச் செயல்படுத்துவதில் தமிழகம் பின்னோக்கி உள்ளது- மத்திய அரசு

Related News

திருநெல்வேலியில் திரளும் தாமரைச் சொந்தங்களை சந்திக்க பேராவல் கொண்டுள்ளேன் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

மணல் கடத்தலை தடுத்த பெண் விஏஓ மீது வீடு புகுந்து தாக்குதல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – வெளிமாநில தமிழ் பள்ளிகளுக்கு மீண்டும் பாட நூல்களை வழங்க நடவடிக்கை!

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா!

சீனாவுன்னு ஒரு நியாயம் இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

தர்மஸ்தலா வழக்கில் புதிய திருப்பம் : சதித்திட்டம் தீட்டிய தமிழக காங்கிரஸ் எம்.பி?

Load More

அண்மைச் செய்திகள்

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

ஆப்கானின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த influencers-ஐ கொண்டு தாலிபான்கள் விளம்பரம் : ஆபத்தானது என எச்சரிக்கை!

இலங்கை ​யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழா கோலாகலம்!

எதிர்க்கட்சிகள் அமளி – மக்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைப்பு!

குடியரசுத் துணை தலைவர் தேர்தல் – சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்!

நீலகிரி அருகே கடன் தொகையை திருப்பி செலுத்தாதவர் மீது தாக்குதல் – தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் 4 பேர் கைது!

கரூரில் ரயில்வே தண்டவாளம் அருகே கல்லூரி மாணவர் உடல் எரிந்த நிலையில் மீட்பு!

நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் இருவர் படுகாயம்!

கர்நாடகாவில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் சட்ட மசோதா தாக்கல்!

டெல்லி முதலமைச்சருக்கு Z பிரிவு பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies