புதிய சிக்கலில் இம்ரான் கான்: சைபர் வழக்கு பதிவு!
Aug 24, 2026, 03:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதிய சிக்கலில் இம்ரான் கான்: சைபர் வழக்கு பதிவு!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 19, 2023, 08:12 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது மத்திய புலனாய்வு அமைப்பின் தீவிரவாத எதிர்ப்புப் பிரிவு புதிதாக ஒரு வழக்கு பதிவு செய்திக்கின்றனர். இதனால் இம்ரானுக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

2018 முதல் 2022-ம் ஆண்டு வரை பாகிஸ்தான் பிரதமராக இருந்தவர் பிரபல கிரிக்கெட் வீரர் இம்ரான் கான். இவரது தெஹ்கீர் இ இன்சாப் கட்சியுடன் கூட்டணியில் இருந்த முக்கிய கட்சி ஒன்று, எதிர்க்கட்சியோடு கூட்டணி சேர்ந்தது. இதனால், இம்ரான் கானின் ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டது. இதையறிந்த இம்ரான் கான், கடந்தாண்டு மார்ச் மாதம் தனது அரசை கவிழ்க்க சர்வதேச சதி நடப்பதாகவும், அமெரிக்காவின் ஆதரவு பெற்ற கும்பல் இந்த சதிக்குக் காரணமாக இருப்பதாகவும் கூறி, ஒரு கடிதத்தைக் காட்டினார்.

இதன் பிறகு நடந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மூலம் இம்ரான் கான் அரசு கவிழ்ந்தது. பின்னர், இம்ரான் கான் மீது ஊழல், மோசடி, கொலை மிரட்டல் உட்பட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், அவர் பிரதமராக இருந்தபோது கிடைத்த விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை அரசு கஜானாவில் சேர்க்காமல், மோசடி செய்ததாக தோஷகானா ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த சூழலில், அமெரிக்க தூதரகத்தின் இராஜதந்திர கேபிளின் உள்ளடக்கத்தை பொதுவெளியில் அம்பலப்படுத்தியதாக, மத்திய புலனாய்வு அமைப்பின் (எஃப்.ஐ.ஏ.) தீவிரவாத எதிர்ப்புப் பிரிவு கடந்தாண்டு ஏப்ரல் மாதம், இம்ரான் கான் மீது வழக்குப் பதிவு செய்தது.

இதனிடையே, தோஷகானா ஊழல் வழக்கில் இம்ரானுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, பஞ்சாப் மாகாணத்திலுள்ள அட்டாக் சிறையில் அவர் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில், மத்திய புலனாய்வு அமைப்பின் (எஃப்.ஐ.ஏ.) கூட்டு விசாரணைக் குழு, கடந்த சில தினங்களுக்கு முன்பு அட்டாக் சிறைக்குள் சென்று இம்ரான் கானிடம் விசாரணை நடத்தியது.

மேலும், அவரது முதன்மைச் செயலாளர் ஆசம் கானிடமும் எஃப்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர், நீதிபதி முன்பும், எஃப்.ஐ.ஏ. முன்பும் கூறுகையில், தனது அரசியல் ஆதாயங்களுக்காகவும், நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பை தடுக்கவும், அமெரிக்க சைபரை இம்ரான் கான் பயன்படுத்தியதாகக் கூறினார். இதைத் தொடர்ந்து, இம்ரான் கான் மீது, அதிகாரப்பூர்வ இரகசிய சட்டத்தின் கீழ் எஃப்.ஐ.ஏ. வழக்குப் பதிவு செய்திருக்கிறது. இதனால், இம்ரான் கானுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

Tags: imran khanimran khan arrest latest newsimrankhan
Share
Tweet
SendShare
Previous Post

மேகாலயாவில் ரூபாய் 2 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

Next Post

“அம்ரித் சரோவர்” திட்டத்தைச் செயல்படுத்துவதில் தமிழகம் பின்னோக்கி உள்ளது- மத்திய அரசு

Related News

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் – பேரவையில் இபிஎஸ் வலியுறுத்தல்!

பரந்தூர் விமான நிலைய விவகாரம் குறித்து பேச அனுமதி மறுப்பு – திமுக வெளிநடப்பு!

பத்மஸ்ரீ விருது பெற்ற தாமோதரனின் சுயசரிதை நூல் – ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார்!

பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுகிறது – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

பொங்கல் பண்டிகை முதல் ஆண்டுக்கு 3 விலையில்லா எரிவாயு சிலிண்டர் – முதல்வர் விஜய் அறிவிப்பு!

அக்டோபர் 2 முதல் மகளிருக்கான கட்டணமில்லா பயணத் திட்டம் விரிவுபடுத்தப்படும் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக ஒரு சொட்டு கச்சா எண்ணெய்கூட செல்ல அனுமதிக்க மாட்டோம் – ஈரான் எச்சரிக்கை!

எரிவாயு தட்டுப்பாடு : வங்கதேசத்தில் தொழிற்சாலைகள் மூடல்!

சென்னையில் விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை: தரமணியில் அதிகபட்சமாக 49.5 மி.மீ பதிவு!

இறுதிக்கட்டத்தில் இந்திய அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் – செர்ஜியோ கோர் தகவல்!

காரைக்காலில் சிகிச்சைக்காக அரசு ஆம்புலன்சில் சென்ற பெண், ஆக்சிஜன் டியூப் வெடித்து உயிரிழந்த சோகம்!

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தேசிய பாதுகாப்பு வியூக மாநாடு – பயங்கரவாதம், போதைப்பொருள் தடுப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை!

திறமையாளர்களின் முதல் தேர்வாக இந்தியாவை மாற்ற வேண்டும்; பிரதமர் மோடி

ரூ.1.81 லட்சம் கோடி கடன்; தவிக்கும் தமிழக அரசு

மீண்டும் சிறையில் இம்ரான் கான் – உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பின் நடந்தது என்ன? – சிறப்பு தொகுப்பு!

பாதுகாப்பு துறையில் தன்னிறைவு : ஏவுகணைகள், வெடிகுண்டுகள் தயாரிக்கும் திட்டம் : தனியார் நிறுவனங்களுக்கு DRDO அழைப்பு – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies