புதிய சிக்கலில் இம்ரான் கான்: சைபர் வழக்கு பதிவு!
Jun 15, 2026, 03:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதிய சிக்கலில் இம்ரான் கான்: சைபர் வழக்கு பதிவு!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 19, 2023, 08:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது மத்திய புலனாய்வு அமைப்பின் தீவிரவாத எதிர்ப்புப் பிரிவு புதிதாக ஒரு வழக்கு பதிவு செய்திக்கின்றனர். இதனால் இம்ரானுக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

2018 முதல் 2022-ம் ஆண்டு வரை பாகிஸ்தான் பிரதமராக இருந்தவர் பிரபல கிரிக்கெட் வீரர் இம்ரான் கான். இவரது தெஹ்கீர் இ இன்சாப் கட்சியுடன் கூட்டணியில் இருந்த முக்கிய கட்சி ஒன்று, எதிர்க்கட்சியோடு கூட்டணி சேர்ந்தது. இதனால், இம்ரான் கானின் ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டது. இதையறிந்த இம்ரான் கான், கடந்தாண்டு மார்ச் மாதம் தனது அரசை கவிழ்க்க சர்வதேச சதி நடப்பதாகவும், அமெரிக்காவின் ஆதரவு பெற்ற கும்பல் இந்த சதிக்குக் காரணமாக இருப்பதாகவும் கூறி, ஒரு கடிதத்தைக் காட்டினார்.

இதன் பிறகு நடந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மூலம் இம்ரான் கான் அரசு கவிழ்ந்தது. பின்னர், இம்ரான் கான் மீது ஊழல், மோசடி, கொலை மிரட்டல் உட்பட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், அவர் பிரதமராக இருந்தபோது கிடைத்த விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை அரசு கஜானாவில் சேர்க்காமல், மோசடி செய்ததாக தோஷகானா ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த சூழலில், அமெரிக்க தூதரகத்தின் இராஜதந்திர கேபிளின் உள்ளடக்கத்தை பொதுவெளியில் அம்பலப்படுத்தியதாக, மத்திய புலனாய்வு அமைப்பின் (எஃப்.ஐ.ஏ.) தீவிரவாத எதிர்ப்புப் பிரிவு கடந்தாண்டு ஏப்ரல் மாதம், இம்ரான் கான் மீது வழக்குப் பதிவு செய்தது.

இதனிடையே, தோஷகானா ஊழல் வழக்கில் இம்ரானுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, பஞ்சாப் மாகாணத்திலுள்ள அட்டாக் சிறையில் அவர் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில், மத்திய புலனாய்வு அமைப்பின் (எஃப்.ஐ.ஏ.) கூட்டு விசாரணைக் குழு, கடந்த சில தினங்களுக்கு முன்பு அட்டாக் சிறைக்குள் சென்று இம்ரான் கானிடம் விசாரணை நடத்தியது.

மேலும், அவரது முதன்மைச் செயலாளர் ஆசம் கானிடமும் எஃப்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர், நீதிபதி முன்பும், எஃப்.ஐ.ஏ. முன்பும் கூறுகையில், தனது அரசியல் ஆதாயங்களுக்காகவும், நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பை தடுக்கவும், அமெரிக்க சைபரை இம்ரான் கான் பயன்படுத்தியதாகக் கூறினார். இதைத் தொடர்ந்து, இம்ரான் கான் மீது, அதிகாரப்பூர்வ இரகசிய சட்டத்தின் கீழ் எஃப்.ஐ.ஏ. வழக்குப் பதிவு செய்திருக்கிறது. இதனால், இம்ரான் கானுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

Tags: imran khanimran khan arrest latest newsimrankhan
ShareTweetSendShare
Previous Post

மேகாலயாவில் ரூபாய் 2 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

Next Post

“அம்ரித் சரோவர்” திட்டத்தைச் செயல்படுத்துவதில் தமிழகம் பின்னோக்கி உள்ளது- மத்திய அரசு

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies