“பிரிக்ஸ்” மாநாடு: தென்னாப்பிரிக்கா, கிரீஸ் நாடுகளுக்குப் பிரதமர் மோடி பயணம்!
Nov 16, 2025, 01:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“பிரிக்ஸ்” மாநாடு: தென்னாப்பிரிக்கா, கிரீஸ் நாடுகளுக்குப் பிரதமர் மோடி பயணம்!

Web Desk by Web Desk
Aug 20, 2023, 02:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

“பிரிக்ஸ்” உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காகவும், கிரீஸ் நாட்டு அதிபர் அழைப்பின் பேரிலும், 4 நாள் பயணமாக தென்னாப்பிரிக்கா மற்றும் கிரீஸ் நாடுகளுக்கு செல்லும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

இந்தியா, ரஷ்யா, பிரேசில், சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் இணைந்து “பிரிக்ஸ்” என்கிற அமைப்பை உருவாக்கி இருக்கின்றன. இந்த அமைப்பின் உச்சி மாநாடு ஒவ்வொரு ஆண்டும் நடந்து வருகிறது. கொரோனா பரவல் காரணமாக, கடந்த 2019-ம் ஆண்டு முதல் கடந்த 4 ஆண்டுகளாக காணொளி வாயிலாகவே பிரிக்ஸ் மாநாடு நடந்தது.

இந்த நிலையில், 15-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு இந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவின் ஜோகஸ்பர்க் நகரில் வரும் 22-ம் தேதி முதல் 24-ம் தேதிவரை நேரடியாக நடைபெறுகிறது. இம்மாநாட்டில் பங்கேற்க வருமாறு தென்னாப்பிரிக்க அதிபர் சிறில் ரமாபோசா அழைப்பு விடுத்திருந்தார். இதை ஏற்று, பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நாளை தென்னாப்பிரிக்கா புறப்பட்டுச் செல்கிறார்.

தென்னாப்பிரிக்காவில் 3 நாட்கள் தங்கி இருக்கும் பிரதமர் மோடி, பிரிக்ஸ் மாநாடு நிறைவடைந்ததும் நடைபெறும் பிரிக்ஸ் அமைப்பில் உறுப்பினர் அல்லாத நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் “பிரிக்ஸ் – ஆப்பிரிக்கா அவுட்ரீச் மற்றும் பிரிக்ஸ் பிளஸ் உரையாடல்” என்கிற சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். தொடர்ந்து, ஜோகன்ஸ்பர்க்கில் முக்கியத் தலைவர்களுடன் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கிறார்.

பிரிக்ஸ் மாநாட்டை முடித்துக் கொண்டு புறப்படும் பிரதமர் மோடி, கிரீஸ் நாட்டின் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் அழைப்பின் பேரில், அந்நாட்டிற்குச் செல்கிறார். இதன் மூலம் 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஏதென்ஸ் நகருக்குச் செல்லும் முதல் பிரதமர் என்கிற பெருமையை பிரதமர் மோடி பெறுகிறார். இப்பயணத்தின்போது, இரு நாடுகளும் தங்களது உறவை விரிவான மூலோபாய கூட்டாண்மைக்கு மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பின்னர், தாய் நாடு திரும்பும் மோடி, செப்டம்பர் 6, 7-ம் தேதிகளில் இந்தோனேஸியாவுக்குச் செல்கிறார். தொடர்ந்து, செப்டம்பர் 9, 10-ம் தேதிகளில் இந்தியாவில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.

Tags: PM ModiModi Meeting
ShareTweetSendShare
Previous Post

இராணுவ வாகனம் கவிழ்ந்து 9 வீரர்கள் உயிரிழப்பு:

Next Post

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு!

Related News

சிவகங்கையில் வட்டாட்சியரை கடித்த தெருநாய் – நகராட்சி ஆணையருக்கு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ்!

சென்னை சேலையூரில் கொள்ளையர்கள் கைவரிசை – வெளியானது வீடியோ!

சுசீந்திரம் தாணுமாலய கோயில் தெப்பக்குள விவகாரம் – அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்!

சுற்றுச்சூழல் ஆர்வலர் சாலுமரத திம்மக்கா அம்மா மறைவு – அண்ணாமலை இரங்கல்!

முதலீடுகளை கோட்டை விடும் முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்

வேலூரில் திமுக கவுன்சிலர் இல்லத்தில் S.I.R. விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்த அதிகாரிகள் – அதிமுகவினர் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

கேரளாவில் பரவும் அமீபா தொற்று – சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை!

“இண்டி” கூட்டணிக்கு தலைமை தாங்கும் தகுதி காங்கிரசுக்கு உள்ளதா? – திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி!

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் – உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு சென்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

பிரச்சனைகளுக்கு தீர்வு காண இந்தியாவை நாடும் சர்வதேச நாடுகள் – மோகன் பகவத்

காங்கிரஸ் கட்சியை இனி யாராலும் காப்பாற்ற முடியாது – பிரதமர் மோடி

அனைத்தையும் எதிர்ப்பதா? : SIR நடவடிக்கையை எதிர்க்கும் காரணத்தை விஜய் கூற வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!

தீவிரவாத தாக்குதல் காரணமாக மூடப்பட்ட டெல்லி செங்கோட்டை – 5 நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் திறப்பு!

டெல்லி கார் குண்டு வெடிப்பு – உமர் முகமது செல்போன் பயன்படுத்தும் வீடியோ வெளியானது!

பீகாரில் ஆட்சி அமைப்பது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies