“பிரிக்ஸ்” மாநாடு: தென்னாப்பிரிக்கா, கிரீஸ் நாடுகளுக்குப் பிரதமர் மோடி பயணம்!
Oct 2, 2025, 09:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“பிரிக்ஸ்” மாநாடு: தென்னாப்பிரிக்கா, கிரீஸ் நாடுகளுக்குப் பிரதமர் மோடி பயணம்!

Web Desk by Web Desk
Aug 20, 2023, 02:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

“பிரிக்ஸ்” உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காகவும், கிரீஸ் நாட்டு அதிபர் அழைப்பின் பேரிலும், 4 நாள் பயணமாக தென்னாப்பிரிக்கா மற்றும் கிரீஸ் நாடுகளுக்கு செல்லும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

இந்தியா, ரஷ்யா, பிரேசில், சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் இணைந்து “பிரிக்ஸ்” என்கிற அமைப்பை உருவாக்கி இருக்கின்றன. இந்த அமைப்பின் உச்சி மாநாடு ஒவ்வொரு ஆண்டும் நடந்து வருகிறது. கொரோனா பரவல் காரணமாக, கடந்த 2019-ம் ஆண்டு முதல் கடந்த 4 ஆண்டுகளாக காணொளி வாயிலாகவே பிரிக்ஸ் மாநாடு நடந்தது.

இந்த நிலையில், 15-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு இந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவின் ஜோகஸ்பர்க் நகரில் வரும் 22-ம் தேதி முதல் 24-ம் தேதிவரை நேரடியாக நடைபெறுகிறது. இம்மாநாட்டில் பங்கேற்க வருமாறு தென்னாப்பிரிக்க அதிபர் சிறில் ரமாபோசா அழைப்பு விடுத்திருந்தார். இதை ஏற்று, பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நாளை தென்னாப்பிரிக்கா புறப்பட்டுச் செல்கிறார்.

தென்னாப்பிரிக்காவில் 3 நாட்கள் தங்கி இருக்கும் பிரதமர் மோடி, பிரிக்ஸ் மாநாடு நிறைவடைந்ததும் நடைபெறும் பிரிக்ஸ் அமைப்பில் உறுப்பினர் அல்லாத நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் “பிரிக்ஸ் – ஆப்பிரிக்கா அவுட்ரீச் மற்றும் பிரிக்ஸ் பிளஸ் உரையாடல்” என்கிற சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். தொடர்ந்து, ஜோகன்ஸ்பர்க்கில் முக்கியத் தலைவர்களுடன் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கிறார்.

பிரிக்ஸ் மாநாட்டை முடித்துக் கொண்டு புறப்படும் பிரதமர் மோடி, கிரீஸ் நாட்டின் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் அழைப்பின் பேரில், அந்நாட்டிற்குச் செல்கிறார். இதன் மூலம் 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஏதென்ஸ் நகருக்குச் செல்லும் முதல் பிரதமர் என்கிற பெருமையை பிரதமர் மோடி பெறுகிறார். இப்பயணத்தின்போது, இரு நாடுகளும் தங்களது உறவை விரிவான மூலோபாய கூட்டாண்மைக்கு மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பின்னர், தாய் நாடு திரும்பும் மோடி, செப்டம்பர் 6, 7-ம் தேதிகளில் இந்தோனேஸியாவுக்குச் செல்கிறார். தொடர்ந்து, செப்டம்பர் 9, 10-ம் தேதிகளில் இந்தியாவில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.

Tags: PM ModiModi Meeting
ShareTweetSendShare
Previous Post

இராணுவ வாகனம் கவிழ்ந்து 9 வீரர்கள் உயிரிழப்பு:

Next Post

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு!

Related News

ட்ரம்பின் வரிவிதிப்பால் பாதிப்பில்லை- இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்காது என கணிப்பு!

இந்தியாவின் 5-ஆம் தலைமுறை போர் விமானங்கள் : ஒப்பந்தத்தை பெற 7 நிறுவனங்கள் போட்டா போட்டி!

கட்டாய விடுப்பில் அமெரிக்க அரசு ஊழியர்கள் : முடங்கியது அமெரிக்காவின் அரசு நிர்வாகம்!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

காசா போரை நிறுத்த 20 அம்ச திட்டம் : 100% ஆதரவா? ‘யு’ டர்ன் போட்ட பாகிஸ்தான்!

இந்திய குடும்பங்களில் கையிருப்பாக 25,000 டன் தங்கம் : உலக தங்க சந்தையில் டான் ஆக ஆதிக்கம் செலுத்தும் இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

சவால்களுக்கே சவால் விடும் “டெத் டிராப்” – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கில்லாடி “மிஸ்டர் பீஸ்ட்”!

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

இணையத்தை கலக்கும் இளம் பஞ்சாப் பாடகி : 6 நாட்களில் 30 லட்சம் பார்வைகளை கடந்த “That Girl” பாடல்!

பக்ராமை கைப்பற்ற துடிக்கும் அமெரிக்கா : இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

ஆர்எஸ்எஸ் என்பது தேசிய உணர்வின் நல்லொழுக்க அவதாரம் : பிரதமர் மோடி

திமுக அராஜகத்திற்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள் – அண்ணாமலை

பிலிப்பைன்ஸ் : சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அதிர்ந்த கட்டடங்கள்!

மலக்குழியில் சிக்கி அப்பாவி தொழிலாளர்கள் பலியாகும் கொடூரம் எப்போது ஓயும்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

டாஸ்மாக் விவகாரத்தில் மவுனம் சாதித்த செந்தில் பாலாஜி, கரூர் சம்பவத்தில் பதறுவது ஏன்? – அதிமுக கேள்வி!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்வு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies