“பிரிக்ஸ்” மாநாடு: தென்னாப்பிரிக்கா, கிரீஸ் நாடுகளுக்குப் பிரதமர் மோடி பயணம்!
Apr 22, 2026, 08:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“பிரிக்ஸ்” மாநாடு: தென்னாப்பிரிக்கா, கிரீஸ் நாடுகளுக்குப் பிரதமர் மோடி பயணம்!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 20, 2023, 02:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

“பிரிக்ஸ்” உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காகவும், கிரீஸ் நாட்டு அதிபர் அழைப்பின் பேரிலும், 4 நாள் பயணமாக தென்னாப்பிரிக்கா மற்றும் கிரீஸ் நாடுகளுக்கு செல்லும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

இந்தியா, ரஷ்யா, பிரேசில், சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் இணைந்து “பிரிக்ஸ்” என்கிற அமைப்பை உருவாக்கி இருக்கின்றன. இந்த அமைப்பின் உச்சி மாநாடு ஒவ்வொரு ஆண்டும் நடந்து வருகிறது. கொரோனா பரவல் காரணமாக, கடந்த 2019-ம் ஆண்டு முதல் கடந்த 4 ஆண்டுகளாக காணொளி வாயிலாகவே பிரிக்ஸ் மாநாடு நடந்தது.

இந்த நிலையில், 15-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு இந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவின் ஜோகஸ்பர்க் நகரில் வரும் 22-ம் தேதி முதல் 24-ம் தேதிவரை நேரடியாக நடைபெறுகிறது. இம்மாநாட்டில் பங்கேற்க வருமாறு தென்னாப்பிரிக்க அதிபர் சிறில் ரமாபோசா அழைப்பு விடுத்திருந்தார். இதை ஏற்று, பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நாளை தென்னாப்பிரிக்கா புறப்பட்டுச் செல்கிறார்.

தென்னாப்பிரிக்காவில் 3 நாட்கள் தங்கி இருக்கும் பிரதமர் மோடி, பிரிக்ஸ் மாநாடு நிறைவடைந்ததும் நடைபெறும் பிரிக்ஸ் அமைப்பில் உறுப்பினர் அல்லாத நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் “பிரிக்ஸ் – ஆப்பிரிக்கா அவுட்ரீச் மற்றும் பிரிக்ஸ் பிளஸ் உரையாடல்” என்கிற சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். தொடர்ந்து, ஜோகன்ஸ்பர்க்கில் முக்கியத் தலைவர்களுடன் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கிறார்.

பிரிக்ஸ் மாநாட்டை முடித்துக் கொண்டு புறப்படும் பிரதமர் மோடி, கிரீஸ் நாட்டின் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் அழைப்பின் பேரில், அந்நாட்டிற்குச் செல்கிறார். இதன் மூலம் 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஏதென்ஸ் நகருக்குச் செல்லும் முதல் பிரதமர் என்கிற பெருமையை பிரதமர் மோடி பெறுகிறார். இப்பயணத்தின்போது, இரு நாடுகளும் தங்களது உறவை விரிவான மூலோபாய கூட்டாண்மைக்கு மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பின்னர், தாய் நாடு திரும்பும் மோடி, செப்டம்பர் 6, 7-ம் தேதிகளில் இந்தோனேஸியாவுக்குச் செல்கிறார். தொடர்ந்து, செப்டம்பர் 9, 10-ம் தேதிகளில் இந்தியாவில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.

Tags: PM ModiModi Meeting
ShareTweetSendShare
Previous Post

இராணுவ வாகனம் கவிழ்ந்து 9 வீரர்கள் உயிரிழப்பு:

Next Post

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு!

Related News

பயங்கரவாதத்திற்கு இந்தியா ஒருபோதும் பணியாது – பிரதமர் மோடி

திருச்சூரில் பட்டாசு வெடித்து விபத்து : 13 பேர் பலி, 40-க்கும் மேற்பட்டோர் காயம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் சித்திரை வசந்த உற்சவ விழா!

டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டம் – ஐஎஸ்ஐ ஏஜென்டுகள் இருவர் கைது!

மேற்கு வங்கத்தில் முதற்கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது – நாளை வாக்குப்பதிவு!

சட்டமன்ற தேர்தலுக்கு சொந்த ஊர் செல்லும் மக்களுக்காக 3 சிறப்பு ரயில்கள் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

‘ஜனநாயகன்’ இணையதளத்தில் வெளியான விவகாரம் – எடிட்டருக்கு முன்ஜாமின் வழங்க தயாரிப்பு நிறுவனம் எதிர்ப்பு!

ஒரத்தநாட்டில் திமுகவினரின் பணப்பட்டுவாடாவை கண்டித்து சாலை மறியல் – நாதக வேட்பாளர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் கைது!

தமிழக சட்டசபை தேர்தலுக்கான இறுதிக்கட்ட பரப்புரை ஓய்ந்தது – நாளை வாக்குப்பதிவு!

எடுபடாத ஸ்டாலின் பிரச்சாரம் : காலி சேர்கள்; கலையும் கூட்டம், திக்கி திணறும் திமுக – சிறப்பு தொகுப்பு!

அகில இந்திய யாத்திரை பணியாளர்களுக்கு நலவாரியம் – ஜி.பி.எஸ்.கே. நாகேந்திரன் உறுதி!

இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவு வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன?

திருவண்ணாமலை அருகே 15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை

என்டிஏ 110, திமுக கூட்டணி 90 – தமிழ் ஜனம் கருத்துக்கணிப்பு முடிவுகள்!

திருவண்ணாமலை அருகே சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை – அண்ணாமலை கண்டனம்!

கொள்ளையடித்த பணத்தை வாக்காளர்களுக்கு கொடுக்கும் திமுக – அன்புமணி விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies