உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு!
Jul 2, 2025, 07:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு!

Web Desk by Web Desk
Aug 20, 2023, 02:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

3 நாள் பயணமாக உத்தரப் பிரதேச மாநிலத்துக்குச் சென்றிருக்கும் நடிகர் ரஜினிகாந்த், அம்மாநில துணை முதல்வருடன் ஜெயிலர் திரைப்படத்தை பார்த்ததோடு, முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும் சந்தித்து ஆசிபெற்றார்.

தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. ஏற்கெனவே இவரது நடிப்பில் 1995-ல் வெளியான பாட்ஷா திரைப்படத்திற்கு பிறகு, இப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கும் ரஜினிகாந்த், இமயமலை, ஜார்கண்ட், உத்தரகண்ட் என ஆன்மிக தலங்களுக்கு சென்றிருக்கிறார்.

அந்த வகையில், பத்ரிநாத், பாபா குகை என பல்வேறு முக்கிய இடங்களில் தரிசனம் செய்தவர், ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்துப் பேசினார். பின்னர், அங்குள்ள சின்னமஸ்தா காளி கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்தவர், கடந்த 18-ம் தேதி இரவு உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவுக்குச் சென்றார். அவருக்கு அரசுத் தரப்பில் சிறப்பு மரியாதை அளிக்கும்படி உ.பி. மாநில அரசு உத்தரவிட்டிருக்கிறது.

அன்றையதினம் இரவு, நட்சத்திர ஹோட்டலில் தங்கி இருந்த ரஜினிகாந்த், மறுநாள் காலை உ.பி. மாநில ஆளுநர் ஆனந்தி பென் படேலை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். அப்போது செய்தியாளரை சந்தித்தவர், “ஜெயிலர் திரைப்படத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு காண்பிக்க வந்திருக்கிறேன்” என்றார். ஆனால், வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக முதல்வர் யோகி அயோத்தி சென்று விட்டதால், அவருடன் சேர்ந்து ரஜினியால் படம் பார்க்க முடியவில்லை.

இதையடுத்து, உ.பி. துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியாவுடன் ஜெயிலர் திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை கண்டுகளித்தார். இதற்காக, ரஜினியின் மனைவி லதாவும் விமானம் மூலம் லக்னோ வந்திருந்தார். இதனிடையே, முதல்வர் யோகி ஆதித்யநாத், அயோத்தியிலிருந்து திரும்பினார். இதைத் தொடர்ந்து, தனது மனைவி லதாவுடன் சேர்ந்து முதல்வர் யோகி இல்லத்திற்குச் சென்று சந்தித்தார். அப்போது, யோகியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற ரஜினி, அவருக்கு பூங்கொத்து வழங்கினார். யோகி முதல்வர் மட்டுமல்லாது மடாதிபதியும் கூட என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: UP CM Yogi Adityanathsuper star rajiniCm Yogi Adityanath
ShareTweetSendShare
Previous Post

“பிரிக்ஸ்” மாநாடு: தென்னாப்பிரிக்கா, கிரீஸ் நாடுகளுக்குப் பிரதமர் மோடி பயணம்!

Next Post

இந்தியா – அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி!

Related News

அஜித்குமாரின் உடலில் 44 காயங்கள், கொலை செய்யப்பட்டவர்களின் உடலில் கூட இத்தனை காயங்கள் கிடையாது – மதுரை உயர் நீதிமன்றம் அதிர்ச்சி!

திருப்புவனம் அஜித்குமார் வழக்கு – மதுரை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

திருப்புவனம் அஜித்குமார் வழக்கு – சிபிஐ விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு பரிந்துரை!

நடக்கக் கூடாதது நடந்து விட்டது – உயிரிழந்த அஜித்குமாரின் தாயாரிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் ஸ்டாலின்!

தேர்தல் வருவதால் சிபிஐ விசாரணைக்கு மாற்ற பரிந்துரையா ? – அண்ணாமலை கேள்வி!

திமுக ஆட்சியில் 25 லாக்-அப் மரணங்கள் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட சிவகங்கை எஸ்.பி – புதிய காவல்துறை கண்காணிப்பாளராக சந்தீஷ் பொறுப்பேற்பு!

பிரதமர் மோடி 8 நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் – கானா, அர்ஜெண்டினா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்கிறார்!

வங்கதேச சணல் – இறக்குமதிக்கு தடை!

ஏவுகணை மூலம் இலக்கை அழிக்கும் பங்கர் பஸ்டர் குண்டு – சிறப்பு கட்டுரை!

RAW புதிய தலைவர் : நாட்டின் பாதுகாப்புக்கு புதிய நம்பிக்கை!

“இந்த வாழ்க்கையை இனி வாழ முடியாதுப்பா….” – ரிதன்யாவிற்கு நடந்தது என்ன?

மம்தா கட்சியின் செல்லப்பிள்ளை – கூட்டுப் பாலியல் வன்கொடுமை குற்றவாளி பற்றி பகீர் தகவல்!

பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

இயற்கை விவசாயம் மீது காதல் : பாரம்பரியம் காக்க முயற்சி – முன்னோடியான இளைஞர்!

தனியார் பட்டாசு ஆலைகளில் முறையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் : எல்.முருகன் வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies