பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சர் கைது: இம்ரான் கானுக்குச் சிக்கலுக்கு மேல் சிக்கல்!
Aug 22, 2025, 01:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சர் கைது: இம்ரான் கானுக்குச் சிக்கலுக்கு மேல் சிக்கல்!

Web Desk by Web Desk
Aug 20, 2023, 03:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இம்ரான் கானின் நெருங்கிய உதவியாளரும், அவரது தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் துணைத் தலைவரும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான ஷா மக்மூத் குரேஷி கைது செய்யப்பட்டிருப்பதால் இம்ரான் கானுக்குச் சிக்கலுக்கு மேல் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான். இவர், பிரதமராக இருந்தபோது தனக்கு பரிசாகக் கிடைத்த விலை உயர்ந்த பொருட்களை அரசு கஜானாவில் சேர்க்காமல் விற்றுப் பணத்தை மோசடி செய்துவிட்டதாக ஊழல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுத் தற்போது சிறையில் இருந்து வருகிறார். எனினும், தோஷகானா வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறைத் தண்டனை எதிர்த்து இம்ரான் கான் மேல் முறையீடு செய்திருக்கிறார்.

இந்த சூழலில், கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் பிரசாரக் கூட்டம் ஒன்றில் பேசிய இம்ரான் கான், தனது ஆட்சியைக் கவிழ்க்க சர்வதேச சதி இருப்பதாகக் கூறி, ஒரு கடிதத்தைத் காட்டினார். இதையடுத்து, அமெரிக்கத் தூதரகத்தின் இராஜதந்திர கேபிளின் உள்ளடக்கத்தை பொதுவெளியில் அம்பலப்படுத்தியதாக, மத்திய புலனாய்வு அமைப்பின் (எஃப்.ஐ.ஏ.) தீவிரவாத எதிர்ப்புப் பிரிவு கடந்தாண்டு ஏப்ரல் மாதம், இம்ரான் கான் மீது வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்குத் தொடர்பாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு அட்டாக் சிறையில் இம்ரான் கானிடம் விசாரணை நடத்திய எஃப்.ஐ.ஏ. அதிகாரிகள், மேற்கண்ட விவகாரம் தொடர்பாக புதிதாக ஒரு வழக்கைப் பதிவு செய்திருக்கிறார்கள். இதனால், இம்ரான் கானுக்குப் புதிய சிக்கல் ஏற்பட்டிருக்கும் நிலையில், இம்ரான் கான் அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஷா மக்மூத் குரேஷியை காவல்துறையினர் திடீரென நேற்று கைது செய்திருப்பது சிக்கலுக்கு மேல் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.

இம்ரான் கானின் நெருங்கிய உதவியாளராக இருந்தவர் ஷா மகமூத் குரேஷி. அவரது தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் துணைத் தலைவராகவும், அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் இருந்தவர். இம்ரான் கானின் அனைத்து நடவடிக்கைகளையும் நன்கு அறிந்தவர். அதேபோல, இம்ரானின் அனைத்து இரகசியங்களையும் நன்கு அறிந்தவர். இவர் கைது செய்யப்பட்டிருப்பதுதான் இம்ரானுக்குச் சிக்கலுக்கு மேல் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags: pakistan
ShareTweetSendShare
Previous Post

கருப்பு பணத்தைப் புழக்கத்தில் விட்டவர்கள் குறித்து மத்திய அரசு விசாரணை – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

Next Post

மேகாலயா அன்னாசிப் பழத்திற்கு அங்கீகாரம் – பிரதமர் மோடி மகிழ்ச்சி

Related News

சீனாவுக்கு ஒரு நியாயம், இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

விரைவில் குறைந்த எடை கொண்ட உதகை மலை ரயில் – அதிகாரிகள் தகவல்!

தர்மஸ்தலா வழக்கில் புதிய திருப்பம் : சதித்திட்டம் தீட்டிய தமிழக காங்கிரஸ் எம்.பி?

உள்நாட்டு விமானப் போக்குவரத்து இலவசம் – சுற்றுலா பயணிகளை ஈர்க்க தாய்லாந்து நடவடிக்கை!

நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர் – அமைச்சர் கிரண் ரிஜிஜு

களியக்காவிளை புதிய பேருந்து நிலைய பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் – பொதுமக்கள் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்பான அமெரிக்காவின் குற்றச்சாட்டு – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறுப்பு!

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகை தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

விழுப்புரம் அருகே நீட் தேர்வில் வென்று மருத்துவ கனவை நனவாக்கிய மாணவி!

தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறுவதைத் தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

திருநெல்வேலியில் திரளும் தாமரைச் சொந்தங்களை சந்திக்க பேராவல் கொண்டுள்ளேன் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

மணல் கடத்தலை தடுத்த பெண் விஏஓ மீது வீடு புகுந்து தாக்குதல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – வெளிமாநில தமிழ் பள்ளிகளுக்கு மீண்டும் பாட நூல்களை வழங்க நடவடிக்கை!

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies