மேகாலயாவின் அன்னாசிப் பழங்களுக்கு உள்நாட்டிலும், உலக அளவிலும் உரிய அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் மோடி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
டெல்லி மேகாலயாவில் அன்னாசிப் பழங்கள் கண்காட்சி ‘டெல்லி ஹாட்’ டில் நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் மேகாலயா முதல்வா் கான்ராட் கே.சங்மா “மேகலாயாவின் அன்னாச்சிச் பழங்கள் டெல்லி ஹாட் கண்காட்சியில் பங்கேற்று வியக்கவைக்கிறது” எனவும், ‘பிரிமியம் தரமான மேகாலயாவின் அன்னாசிப்பழம் இனிப்பு அளவு உயா்ந்து ஏற்றுமதி செய்யப்படுவதோடு, சில்லறை விற்பனையாளா்களால் விரும்பப்படும் பழமாக மாறி வருகிறது. மேலும் இது விவசாயிகளின் கடின உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம்’ என மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சா் கிரிராஜ் சிங்கும் தங்களது எக்ஸ் (ட்விட்டர் ) பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக பிரதமர் மோடி , மேகாலயாவின் அன்னாசிப் பழங்களுக்கு உள்நாட்டிலும், சா்வதேச அளவிலும் உரிய அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் இத்தகைய முயற்சிகள் நமது வேளாண் பாரம்பரியத்தைக் கொண்டாடுவதோடு மட்டுமின்றி, நமது விவசாயிகளுக்கும் அதிகாரமளிக்கின்றன என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் மத்திய ஆயுதக் காவல் படைகள் சாா்பில்
‘அகில இந்திய மரம் வளா்ப்பு பிரசாரத்தின்’ கீழ், 4 கோடி (40 மில்லியன்) மரக்கன்று
நடப்பட்டுள்ளதாகவும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான இந்தப் பிரசாரத்தை ஒரு
முக்கியமான பங்களிப்பாக மாற்றிய அனைத்து ஆயுதப் படைகளையும் பாராட்டுவதாகவும் அமித்ஷா குறிப்பிட்டாா்.
இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, ‘இது அற்புதமான சாதனை மேலும் சுற்றுச்சூழல், இயற்கையைப் பாதுகாப்பதற்கான உள்துறை அமைச்சகத்தின் இந்த மரம் நடும் பிரசாரம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் ‘ என
தெரிவித்துள்ளாா்.
शानदार उपलब्धि! पर्यावरण और प्रकृति के संरक्षण की दिशा में गृह मंत्रालय का यह वृक्षारोपण अभियान हर किसी को प्रेरित करने वाला है। https://t.co/HLHX4g9l4e
— Narendra Modi (@narendramodi) August 19, 2023