நீலிக் கண்ணீர் வடிக்கிறார் ஸ்டாலின்- அண்ணாமலை!
Aug 14, 2025, 08:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீலிக் கண்ணீர் வடிக்கிறார் ஸ்டாலின்- அண்ணாமலை!

Web Desk by Web Desk
Aug 20, 2023, 06:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கச்சத் தீவைத்  தாரை வார்த்துவிட்டு, இன்று நீலிக் கண்ணீர் வடிக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார்.

இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,

இன்றைய காலை என் மண் என் மக்கள் பயணம், திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் சிறப்பாக நடந்தேறியது. சந்திரயான் 3 ஏவுகணையில் பொருத்தப்படும் செமி கிரையோஜெனிக் எனும் இயந்திர சோதனை, இங்கிருக்கும் மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் தான் நடைபெற்றது என்பது நம் அனைவருக்குமே பெருமை. இன்று வெள்ளையர்களுக்கு எதிராகப் போராடி, பல போர்களில் வெற்றி கண்ட மாவீரன் ஒண்டி வீரனின் 252 ஆவது நினைவுதினம்.

கர்மவீரர் காமராஜர் படிக்கச் சொன்னார். திமுக 24 மணி நேரமும் குடிக்கச் சொல்கிறது.

1972 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ராமநாதபுர கெசட் திருத்திய புது பதிப்பில் கச்சத் தீவு இல்லை. அந்த பதிப்பிற்கு அணிந்துரை வழங்கியவர் அன்றைய முதலமைச்சர் கருணாநிதி. 1974 ஆம் ஆண்டு, காங்கிரஸ் கச்சத் தீவை தாரைவார்த்த போது குறைந்தபட்ச எதிர்ப்பைக் கூடத் தெரிவிக்காமல் இருந்தவர் கருணாநிதி. கச்சத் தீவைக் கொடுத்ததை ஆதரித்தது கம்யூனிஸ்ட் கட்சி. கச்சத் தீவை தாரை வார்த்துவிட்டு, இன்று நீலிக் கண்ணீர் வடிக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

மோடியின் முகவரி : ராதாபுரம்

ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீர் இணைப்பு வசதி பெற்ற திருமதி சித்ரா, முத்ரா திட்டத்தின் மூலம் தொழில் முனைவோராக உருவான  நித்தியானந்தம்,
PM கிசான் திட்டத்தில் பயன்பெற்ற அன்னப்பாண்டி, உஜ்வாலா திட்டத்தின் மூலம் இலவச சமையல் எரிவாயு பெற்றுப் பயனடைந்த காசிலிங்கம், பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் மூலம் வீடு பெற்ற செல்வி சியாமளா. இவர்கள்தான் பாரதப் பிரதமர் மோடியின் முகவரி.

தமிழக மக்களை ஜாதி ரீதியாகப் பிரித்தது கருணாநிதி என்று குற்றம் சாட்டிய அப்பாவு தான் இப்போது இங்கே நடக்கும் கனிம வளக் கொள்ளைக்கு முக்கிய காரணகர்த்தா.

அடைமிதிப்பான்குளத்தில் அனுமதி இல்லாமல் செயல்பட்ட கல்குவாரி வெடி விபத்திற்குப் பிறகும், தொடர்ந்து கல்குவாரிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டு வருகின்றன. அனுமதி இல்லாத 32 குவாரிகளுக்கு 300 கோடி அபராதம் வசூலித்ததாகக் கூறும் ஊழல் திமுக அரசு, அதன் விவரங்களை வெளியிட முடியுமா? 30 டன் தாங்கும் கிராம சாலைகளில் 70 டன் எடைக்கு மலைகளை உடைத்து கற்களை ஏற்றிச் செல்கிறார்கள்.

அடைமிதிப்பான்குளத்தில் அனுமதி இல்லாமல் செயல்பட்ட கல்குவாரி வெடி விபத்திற்குப் பிறகும், தொடர்ந்து கல்குவாரிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டு வருகின்றன. அனுமதி இல்லாத 32 குவாரிகளுக்கு 300 கோடி அபராதம் வசூலித்ததாகக் கூறும் ஊழல் திமுக அரசு, அதன் விவரங்களை வெளியிட முடியுமா? 30 டன்… pic.twitter.com/7QeHb5dPAR

— K.Annamalai (@annamalai_k) August 20, 2023

நொடிந்து போன BGR நிறுவனத்தை வைத்து 4,442 கோடி ஒப்பந்தம் நிறைவேற்ற முயற்சித்தார்கள். தமிழகத்தை தங்கள் சொந்த ஆதாயத்துக்காக அடகு வைக்க முயற்சித்தார்கள். இந்த BGR முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை.

வரும் பாராளுமன்றத் தேர்தலில், ஊழல் திமுக கூட்டணியை தமிழக மக்கள் மொத்தமாகப் புறக்கணிக்க வேண்டும். பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நல்லாட்சி மீண்டும் தொடர தமிழகமும் துணையிருக்கும் என்பதில் மிகுந்த நம்பிக்கை உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: k Annamalai Bjp
ShareTweetSendShare
Previous Post

மேகாலயா அன்னாசிப் பழத்திற்கு அங்கீகாரம் – பிரதமர் மோடி மகிழ்ச்சி

Next Post

சிறையில் எனது கணவர் உயிருக்கு ஆபத்து: கதறும் இம்ரான் கான் மனைவி!

Related News

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

ஜம்மு-காஷ்மீர் : மேகவெடிப்பு காரணமாக பெருவெள்ளம், நிலச்சரிவு!

பாகிஸ்தானின் தவறான குறிப்புகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது : ரந்தீர் ஜெய்ஸ்வால்

ஆபரேஷன் சிந்தூர் : 36 வீரர்களுக்கு விருது!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு கடுமையாக அதிகரிப்பு : ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு!

தூய்மைப் பணியாளர்கள் கைது : சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரிக்கக் கோரி முறையீடு!

மேக வெடிப்பால் பேரழிவு – உருக்குலைந்த இமாச்சல பிரதேசம் : மீட்பு பணியில் இந்திய ராணுவம்…!

“ரேபிஸ் ஒரு ஆபத்தற்ற மென்மையான வைரஸ்” : சர்ச்சையை ஏற்படுத்திய மேனகா காந்தியின் சகோதரி!

‘100 அடி’ ஆழிப்பேரலையால் அதிர்ந்த கடற்கரை : மக்களை திடுக்கிடச் செய்த திடீர் நிலச்சரிவு!

ரூ.60 கோடி மோசடி – நடிகை ஷில்பா ஷெட்டி, கணவர் ராஜ்குந்தா மீது வழக்கு!

பாகிஸ்தானில் சுதந்திர தின கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூடு – 3 பேர் பலி!

இல்லம் தோறும் மூவர்ணக் கொடி யாத்திரையை தொடங்கி வைத்த எல்.முருகன்!

சமூக நீதி பற்றி பேச திமுக அரசுக்கு துளியும் அருகதை இல்லை – எல்.முருகன்

ராமநாதபுரம் : பொது வழி பாதை ஆக்கிரமிப்பு – நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies