சமூகநீதியை நிலைநாட்டியது நீட் தேர்வுதான்!-அண்ணாமலை
Jul 6, 2025, 03:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சமூகநீதியை நிலைநாட்டியது நீட் தேர்வுதான்!-அண்ணாமலை

Web Desk by Web Desk
Aug 21, 2023, 02:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக, காங்கிரஸ், அரசியலுக்காக பொய்களை பரப்பி மாணவர்களின் வாழ்வை பலிதரும் அரசியலை செய்வது வெட்கக் கேடானது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பாஜக தனது எக்ஸ் பக்கத்தில்,
“நீட் தேர்வுதான் சமூகநீதியையும், சமநிலையையும் மருத்துவப் படிப்பில் கொண்டு வந்துள்ளது. இந்த உண்மை ஆழமாக இருப்பதாலேயே உச்சநீதிமன்றம் வரை இந்த தேர்வுமுறை சரி என்பதை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இந்தத் தேர்வு  ஏழை – எளிய, பின்தங்கிய சமூகங்களுக்கு மருத்துவப்படிப்பை உறுதி செய்துள்ளது. நீட் தேர்வை நாடாளுமன்றத்தில் சட்டமாக இயற்றிய காங்கிரஸ் – திமுகவே, இன்று அரசியலுக்காக பொய்களைப் பரப்பி மாணவர்களின் வாழ்வை பலிதரும் அரசியலை செய்வது வெட்கக் கேடானது. ​

இதை நிறுத்தவில்லை என்றால் மக்களால் முழுதாக புறக்கணிக்கப்படுவார்கள்.  நீட் தேர்வு  21 – 10 – 2010 முதல் நடைமுறைக்கு வந்தது. அதை நடைமுறைப்படுத்தியது காங்கிரஸ் அரசில் அங்கம் வகித்த திமுகவின் அமைச்சர் காந்தி செல்வன்தான். நீட் தேர்வினால் யாருக்கும் பாதிப்பில்லை. தமிழக மாணவர்கள் 85% இடங்களை நிரப்புகிறார்கள். அதில் 69% இடஒதுக்கீடு முழுமையாக கடைபிடிக்கப்படுகிறது. மீதமுள்ள 15% இடத்தை AIQ வழியாக பிற மாநில மருத்துவ இடங்களையும் கைப்பற்றுகிறார்கள்.

இதில் நமது மாநில மாணவர்களுக்கோ, மாநிலத்தில் கடைபிடிக்கப்படும் பிரத்யேக இடஒதுக்கீட்டு முறைக்கோ எந்தவிதமான பாதிப்பும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் முன்பை விட அதிக வாய்ப்புகளை மாணவர்கள் இப்போதுதான் பெறுகிறார்கள். தமிழகத்தில் நிலவி வரும் 69% இடஒதுக்கீட்டினை இதுவரை பின்பற்றாத CMC போன்ற மருத்துவக் கல்லூரிகளில் கூட 50:50 என்ற முறையில் இடங்களை அனைத்து பிரிவினருக்கும் ஒதுக்கும் விதம் சமூகநீதியை நிலைநாட்டியது நீட் தேர்வுதான்.

DMK’s NEET fasting Drama comes to an end today.

Now, Let’s look at DMK’s double standards, how their former Health minister sold the merit list to Private medical colleges in exchange for money & and how, after NEET, students from every section of society have received an equal… pic.twitter.com/9zoCnLmYaX

— K.Annamalai (@annamalai_k) August 20, 2023

2011வது ஆண்டில் திமுக ஆட்சி முடிகிற போது தமிழகத்தில் இருந்த மருத்துவ இடங்கள் மொத்தம் 1945 மட்டுமேதான். தற்போது 8480 இடங்கள் கடந்த 11 வருடத்தில் அதிகமாகி 10425 மருத்துவ இடங்களாக மாறியிருப்பதற்கு ஒரே காரணம் பிரதமர் மோடி மட்டுமே.
இப்படி இடஒதுக்கீடு – மாநில நலன் – சரிவிகித வாய்ப்புகளை வழங்கும் நீட்தேர்வினை திமுக எதிர்க்க ஒரே காரணம், அவர்களது கட்சியினர் நடத்தும் தனியார் கல்லூரிகளின் கல்லா நிரம்பவில்லை என்பதே.
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசிடம் ஒப்படைக்கும் 50% இடங்களுக்கு அந்தந்த மாநில அரசுக் கல்லூரியில் வாங்கும் கட்டணத்தையே அளவீடாக வைக்க வேண்டும் என ஏழை மக்களின் வாழ்வில் ஒளியேற்றிய மோடி அரசின் மீது திராவிட மாடலுக்கு எரிச்சல் வருவது இயல்பே” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags: bjp k annamalai
ShareTweetSendShare
Previous Post

உத்தர்கண்ட்டில் தொடர்ந்து கனமழை – காவல்துறை எச்சரிக்கை

Next Post

லிபியாவில் கொடுஞ்சித்ரவதை: நாடு திரும்பிய 17 இந்தியர்கள்!

Related News

பரதநாட்டிய கலைஞர் லித்திகா ஸ்ரீயின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி – அண்ணாமலை பங்கேற்பு!

வார விடுமுறை – குற்றலா அருவிகளில் ஆனந்த குளியல் போட்ட சுற்றுலா பயணிகள்!

நாமக்கல் அருகே வட்டார போக்குவரத்து அலுவலர், மனைவியுடன் தற்கொலை? – தண்டவாளத்தில் கிடந்த உடல்கள்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – ஒருவர் பலி!

இஸ்ரேலுக்கு எதிரான போருக்கு பிறகு முதன்முறையாக பொதுவெளியில் தோன்றிய ஈரான் உச்ச தலைவர் கமேனி – மொஹரம் விழாவில் பங்கேற்பு!

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழா : 10-ஆம் கால யாகசாலை பூஜை கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி பிறந்தநாள் – தலைவர்கள் புகழாரம்!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில் யாகசாலை பூஜை – திருவாவடுதுறை ஆதீனம் பங்கேற்பு!

ராமநாதபுரம் அருகே கோயில் நில ஆக்கிரமிப்பு தொடர்பான நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் – பொதுமக்கள் வலியுறுத்தல்!

நெல்லையில் ஆகஸ்ட் 17ம் தேதி தொடங்குகிறது பாஜக முதல் மாநாடு – நயினார் நாகேந்திரன் அறிவிப்பு!

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இறுதிப்போட்டி – வெல்லப்போவது யார்?

அமெரிக்காவின் டெக்சாஸில் கொட்டி தீர்த்த மழை – வெள்ளத்தில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

குரோஷியாவில் நடைபெற்ற ரேபிட் செஸ் போட்டி – குகேஷ் சாம்பியன்!

ஒடிசாவில் திருவள்ளூர் இளைஞர் உயிரிழப்பு – போலீஸ் விசாரணை!

சத்தியமங்கலம் அருகே தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தை – பொதுமக்கள் அச்சம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் – குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies