இமாச்சலுக்கு ரூ.862 கோடி நிதியுதவி: அனுராக் தாக்கூர் தகவல்!
Jan 14, 2026, 11:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இமாச்சலுக்கு ரூ.862 கோடி நிதியுதவி: அனுராக் தாக்கூர் தகவல்!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 21, 2023, 01:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பேரிடர் பாதித்த இமாச்சலப் பிரதேச மாநிலத்திற்கு மத்திய அரசு ரூ.662 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கி இருப்பதாகவும், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூடுதலாக 200 கோடி ரூபாய் வழங்குவதாக தெரிவிதிருப்பதாகவும், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்திருக்கிறார்.

இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த 3 மாதங்களாகவே பருவமழை பெய்து வருகிறது. இடைவிடாதப் பருவமழையாலும், திடீர் மேக வெடிப்புகளாலும் பேய்மழை கொட்டியதாலும், பெருவெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும், ஆங்காங்கே பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டிருக்கின்றன. இதனால், மாநிலம் மிகப்பெரிய பேரழிவைச் சந்தித்திருக்கிறது.

இதையடுத்து, இமாச்சலப் பிரதேச அரசு முழு மாநிலத்தையும் இயற்கை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவித்திருக்கிறது. மேலும், மாநில அரசின் சமீபத்திய தகவல்களின்படி, ஜூன் 24 முதல் தற்போதுவரை இமாச்சலின் மொத்த பண இழப்பு 8014.61 கோடி ரூபாயை எட்டியுள்ளது. இந்தாண்டுப் பருவமழைக் காலத்தில் 113 நிலச்சரிவுகள் ஏற்பட்டிருக்கிறது. பெருவெள்ளத்தினாலும் , நிலச்சரிவுகளாலும்  மொத்தம் 2,022 வீடுகள் முழுமையாகவும், 9,615 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

மேலும், மழை வெள்ளம் காரணமாக மாநிலம் முழுவதும் சாலை விபத்துக்களில் இதுவரை 117 பேரும், பருவமழை சீற்றத்தில் 224 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, சம்மர் ஹில் நிலச்சரிவு சம்பவத்தில் இதுவரை 17 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், காணாமல் போனவர்களின் சடலங்களை மீட்பதற்கான மேல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தச் சூழலில், இமாச்சல் மழை வெள்ளம் தொடர்பாக கடந்த 19-ம் தேதி முக்கிய மத்திய அமைச்சர்கள் மற்றும் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இதன் தொடர்ச்சியாக, பா.ஜ.க. தலைவர் நட்டா, மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோர் நேற்று இமாச்சலப் பிரதேசத்துக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். அப்போது, பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்து ஆறுதல் கூறினர்.

இதையடுத்து, மாநில நிர்வாகத்துடன் இருவரும் ஆலோசனை நடத்தினர். அப்போது, இமாச்சலுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று தெரிவித்தனர். இந்த சூழலில், செய்தியாளர்களைச் சந்தித்த அனுராக் தாக்கூர், “இமாச்சலப் பிரதேச அரசுக்கு மொத்தம் ரூ.662 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியுள்ளது. இது தவிர, தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து மாநிலத்திற்குக்  கூடுதலாக ரூ.200 கோடி ரூபாய் வழங்குவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்” என்றார்.

Tags: Anurag Thakurhimachal pradesh
ShareTweetSendShare
Previous Post

இந்திய மகளீர் மல்யுத்த அணிக்கு பிரதமர் வாழ்த்து!

Next Post

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

Related News

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies