இமாச்சலுக்கு ரூ.862 கோடி நிதியுதவி: அனுராக் தாக்கூர் தகவல்!
Aug 19, 2025, 03:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இமாச்சலுக்கு ரூ.862 கோடி நிதியுதவி: அனுராக் தாக்கூர் தகவல்!

Web Desk by Web Desk
Aug 21, 2023, 01:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பேரிடர் பாதித்த இமாச்சலப் பிரதேச மாநிலத்திற்கு மத்திய அரசு ரூ.662 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கி இருப்பதாகவும், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூடுதலாக 200 கோடி ரூபாய் வழங்குவதாக தெரிவிதிருப்பதாகவும், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்திருக்கிறார்.

இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த 3 மாதங்களாகவே பருவமழை பெய்து வருகிறது. இடைவிடாதப் பருவமழையாலும், திடீர் மேக வெடிப்புகளாலும் பேய்மழை கொட்டியதாலும், பெருவெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும், ஆங்காங்கே பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டிருக்கின்றன. இதனால், மாநிலம் மிகப்பெரிய பேரழிவைச் சந்தித்திருக்கிறது.

இதையடுத்து, இமாச்சலப் பிரதேச அரசு முழு மாநிலத்தையும் இயற்கை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவித்திருக்கிறது. மேலும், மாநில அரசின் சமீபத்திய தகவல்களின்படி, ஜூன் 24 முதல் தற்போதுவரை இமாச்சலின் மொத்த பண இழப்பு 8014.61 கோடி ரூபாயை எட்டியுள்ளது. இந்தாண்டுப் பருவமழைக் காலத்தில் 113 நிலச்சரிவுகள் ஏற்பட்டிருக்கிறது. பெருவெள்ளத்தினாலும் , நிலச்சரிவுகளாலும்  மொத்தம் 2,022 வீடுகள் முழுமையாகவும், 9,615 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

மேலும், மழை வெள்ளம் காரணமாக மாநிலம் முழுவதும் சாலை விபத்துக்களில் இதுவரை 117 பேரும், பருவமழை சீற்றத்தில் 224 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, சம்மர் ஹில் நிலச்சரிவு சம்பவத்தில் இதுவரை 17 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், காணாமல் போனவர்களின் சடலங்களை மீட்பதற்கான மேல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தச் சூழலில், இமாச்சல் மழை வெள்ளம் தொடர்பாக கடந்த 19-ம் தேதி முக்கிய மத்திய அமைச்சர்கள் மற்றும் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இதன் தொடர்ச்சியாக, பா.ஜ.க. தலைவர் நட்டா, மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோர் நேற்று இமாச்சலப் பிரதேசத்துக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். அப்போது, பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்து ஆறுதல் கூறினர்.

இதையடுத்து, மாநில நிர்வாகத்துடன் இருவரும் ஆலோசனை நடத்தினர். அப்போது, இமாச்சலுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று தெரிவித்தனர். இந்த சூழலில், செய்தியாளர்களைச் சந்தித்த அனுராக் தாக்கூர், “இமாச்சலப் பிரதேச அரசுக்கு மொத்தம் ரூ.662 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியுள்ளது. இது தவிர, தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து மாநிலத்திற்குக்  கூடுதலாக ரூ.200 கோடி ரூபாய் வழங்குவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்” என்றார்.

Tags: Anurag Thakurhimachal pradesh
ShareTweetSendShare
Previous Post

இந்திய மகளீர் மல்யுத்த அணிக்கு பிரதமர் வாழ்த்து!

Next Post

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

Related News

தெரு நாய்களுக்கு ஆதரவாக விலங்குநல ஆர்வலர்கள் போராட்டம்!

கரூர் : போலி அறக்கட்டளை நடத்தி பண மோசடி – மாவட்ட ஆட்சியரகத்தில் புகார்!

வெனிசுலா கனமழை : வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதி!

கோவிலம்பாக்கம் ஊராட்சி : மதுபோதையில் ஊழியர்களை தாக்கிய ஊராட்சியைச் செயலர்!

தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு!

சேலம் : கல்லூரி மாணவனை மிரட்டி ஓரின சேர்க்கை!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பூரில் குடியிருப்புக்கு அருகே குப்பைகள் கொட்டுவதற்கு எதிர்ப்பு : பொதுமக்கள் சாலை மறியல்!

தர்மஸ்தலா விவகாரம் : தூய்மை பணியாளர் பரபரப்பு வாக்குமூலம்!

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

பூமியை அதி வேகமாக நெருங்கும் ‘சிறுகோள்’ : ஆபத்தில்லை என உறுதிப்படுத்திய நாசா!

தேஜ கூட்டணி எம்பிக்கள் கூட்டத்தில் சி.பி.ராதாகிருஷ்ணனை அறிமுகம் செய்து வைத்த பிரதமர் மோடி!

திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கட்சித் தலைமையிடம் புகார்!

பாகிஸ்தானை புரட்டிப்போட்ட பெருவெள்ளம் : 48 மணி நேரத்தில் 300 பேருக்கு மேல் பலி..!

கர்நாடகா : ஹெப்பல் மேம்பாலம் பயன்பாட்டிற்கு திறப்பு!

ஸ்பெயின் : பலத்த காற்றால் அதிவேகமாக பரவும் காட்டுத்தீ!

சீனாவில் நிலத்தடி நீர் குழாய் வெடிப்பு – நீரூற்றாக மாறிய சாலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies