இமாச்சலுக்கு ரூ.862 கோடி நிதியுதவி: அனுராக் தாக்கூர் தகவல்!
Aug 12, 2026, 08:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இமாச்சலுக்கு ரூ.862 கோடி நிதியுதவி: அனுராக் தாக்கூர் தகவல்!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 21, 2023, 01:14 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பேரிடர் பாதித்த இமாச்சலப் பிரதேச மாநிலத்திற்கு மத்திய அரசு ரூ.662 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கி இருப்பதாகவும், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூடுதலாக 200 கோடி ரூபாய் வழங்குவதாக தெரிவிதிருப்பதாகவும், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்திருக்கிறார்.

இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த 3 மாதங்களாகவே பருவமழை பெய்து வருகிறது. இடைவிடாதப் பருவமழையாலும், திடீர் மேக வெடிப்புகளாலும் பேய்மழை கொட்டியதாலும், பெருவெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும், ஆங்காங்கே பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டிருக்கின்றன. இதனால், மாநிலம் மிகப்பெரிய பேரழிவைச் சந்தித்திருக்கிறது.

இதையடுத்து, இமாச்சலப் பிரதேச அரசு முழு மாநிலத்தையும் இயற்கை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவித்திருக்கிறது. மேலும், மாநில அரசின் சமீபத்திய தகவல்களின்படி, ஜூன் 24 முதல் தற்போதுவரை இமாச்சலின் மொத்த பண இழப்பு 8014.61 கோடி ரூபாயை எட்டியுள்ளது. இந்தாண்டுப் பருவமழைக் காலத்தில் 113 நிலச்சரிவுகள் ஏற்பட்டிருக்கிறது. பெருவெள்ளத்தினாலும் , நிலச்சரிவுகளாலும்  மொத்தம் 2,022 வீடுகள் முழுமையாகவும், 9,615 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

மேலும், மழை வெள்ளம் காரணமாக மாநிலம் முழுவதும் சாலை விபத்துக்களில் இதுவரை 117 பேரும், பருவமழை சீற்றத்தில் 224 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, சம்மர் ஹில் நிலச்சரிவு சம்பவத்தில் இதுவரை 17 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், காணாமல் போனவர்களின் சடலங்களை மீட்பதற்கான மேல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தச் சூழலில், இமாச்சல் மழை வெள்ளம் தொடர்பாக கடந்த 19-ம் தேதி முக்கிய மத்திய அமைச்சர்கள் மற்றும் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இதன் தொடர்ச்சியாக, பா.ஜ.க. தலைவர் நட்டா, மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோர் நேற்று இமாச்சலப் பிரதேசத்துக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். அப்போது, பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்து ஆறுதல் கூறினர்.

இதையடுத்து, மாநில நிர்வாகத்துடன் இருவரும் ஆலோசனை நடத்தினர். அப்போது, இமாச்சலுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று தெரிவித்தனர். இந்த சூழலில், செய்தியாளர்களைச் சந்தித்த அனுராக் தாக்கூர், “இமாச்சலப் பிரதேச அரசுக்கு மொத்தம் ரூ.662 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியுள்ளது. இது தவிர, தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து மாநிலத்திற்குக்  கூடுதலாக ரூ.200 கோடி ரூபாய் வழங்குவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்” என்றார்.

Tags: Anurag Thakurhimachal pradesh
Share
Tweet
SendShare
Previous Post

இந்திய மகளீர் மல்யுத்த அணிக்கு பிரதமர் வாழ்த்து!

Next Post

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

Related News

பழனியில் மீண்டும் ஒரு பத்திரப்பதிவு மோசடி; ஜஸ்டின் மணிகண்டன் மீது மற்றொரு வழக்கு பதிவு

குறுக்கு வழிகளை கைவிடுங்கள்; இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்

கொசுமருந்தை சுவாசித்து மூச்சுத்திணறல்; இருவர் உயிரிழப்பு

அடுத்த 15 நாட்களுக்கு தினமும் ஒரு டிஎம்சி நீர் திறக்க வேண்டு; கர்நாடகாவுக்கு உத்தரவு

குறையும் குழந்தை பிறப்பு : அதிகரிக்கும் முதியோர் ஜனத்தொகை : முடங்கும் ஐரோப்பிய பொருளாதாரம்? – சிறப்பு தொகுப்பு!

73 லட்சமா 73 ஆயிரமா? – பட்டா தொடர்பாக கேகேஎஸ்எஸ்ஆர், செங்கோட்டையன் விவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் பங்களிப்புடன் அடையாறு கூவம் ஆறு தூர்வாரும் பணிகள் – அமைச்சர் ஆனந்த்

நீட் ரத்து இல்லையென்றால் பணம் படைத்தவர்களின் குழந்தைகள் தான் மருத்துவபடிப்பில் சேர முடியும் – பாஜக எம்எம்ஏ போஜராஜன்

இடமாற்றமும், நெஞ்சில் இருக்கும் புகைப்பட மாற்றமும் – ஓபிஎஸ், செங்கோட்டையன் காரசார விவாதம்!

நீட் நுழைவுத் தேர்வு – தமிழக மாணவர்கள் சாதனை!

ஈரான் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் – ட்ரம்ப் வலியுறுத்தல்!

இன்றைய தங்கம் விலை!

தஞ்சை அருகே கோயில் நிலத்தில் ஈ.வெ.ரா சிலை – ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

கருக்கலைப்புக்கு எதிரான பேரணியில் பங்கேற்ற சபாநாயகர் சட்டத்தின் காவலரா அல்லது மதத்தின் பிரதிநிதியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

தமிழகத்தில் மட்டும் No Delimitation நாடகம் ஏன்? : தயாநிதி மாறன் கேள்வி!

நவோதயா பள்ளிகளை அனுமதிக்க முடியாது – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies