சீனா விவகாரம்: ராகுலுக்கு மத்திய அமைச்சர் பதிலடி!
Oct 2, 2025, 05:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீனா விவகாரம்: ராகுலுக்கு மத்திய அமைச்சர் பதிலடி!

Web Desk by Web Desk
Aug 21, 2023, 08:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் நிலப்பகுதியை சீனா ஆக்கிரமித்திருப்பதாகக் கூறிய ராகுல் காந்திக்கு, மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், பா.ஜ.க. எம்.பி. சுதன்ஷு திரிவேதி ஆகியோர் பதிலடி கொடுத்திருக்கின்றனர்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியின் எம்.பி.யுமான ராகுல் காந்தி, கடந்த ஜனவரி மாதம் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்குச் சென்றிருந்தார். அப்போது, அங்குள்ள லால் சௌக்கில் காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து மூவர்ண தேசியக்கொடியே ஏற்றியவர், இந்தியாவுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டோம் என்று கூறினார்.

அதேபோல, கடந்த பிப்ரவரி மாதம் தனது சகோதரி பிரியங்கா காந்தியுடன் மீண்டும் ஜம்மு காஷ்மீர் சென்ற ராகுல் காந்தி, குல்மார்க்கில் பனிச்சறுக்கு வாகனத்தில் ஜாலியாக வலம் வந்தார். இந்த சூழலில், தற்போது லடாக் யூனியன் பிரதேசத்திற்குச் சென்றிருக்கும் ராகுல் காந்தி, லே-யிலிருந்து பாங்காங் ஏரிக்கு இரு சக்கர வாகனத்தில் ஜாலியாக சென்றார். ஆனால், அங்கு பேட்டியளிக்கும்போது, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சில பகுதிகளை சீனா ஆக்கிரமித்து விட்டதாகக் குற்றம்சாட்டினார்.

இதற்குத்தான் மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதானும், பா.ஜ.க. எம்.பி. சுதன்ஷு திரிவேதியும் பதிலடி கொடுத்திருக்கிறார்கள். இதுகுறித்து பேசிய தர்மேந்திர பிரதான், “ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் தலைநகரமான ஸ்ரீநகரில் உள்ள லால் சௌக்கில் ராகுலும், காங்கிரஸ் தலைவர்களும் மூவர்ணக் கொடியை ஏந்தியதையும், மோடி கட்டமைத்த லடாக்கின் பளபளக்கும் சாலைகளில் ராகுல் காந்தி கவலையின்றி இரு சக்கர வாகன பந்தயத்தில் ஈடுபடுவதையும் பார்ப்பது நன்றாகத்தான் இருக்கிறது.

2014-ம் ஆண்டுக்கு முன்பு, காஷ்மீரில் உள்ள லால் சௌக்கில் தேசியக்கொடியை ஏற்றி வைத்துவிட்டு, லடாக்கை தரிசு நிலம் என்று ஜவஹர்லால் நேரு கூறினார். அதே லடாக்கில் ஒரு நாள் ராகுல் காந்தி தேசியக்கொடியை ஏற்றி மகிழ்வார் என்று யாராவது நினைத்துப் பார்த்திருக்க முடியுமா? நான் காங்கிரஸ் கட்சிக்கு சவால் விடுகிறேன். 2014-ம் ஆண்டுக்கு முன்பு லால் சௌக்கில் ராகுல் காந்தி மூவர்ணக் கொடியை ஏற்றிய அல்லது லடாக்கில் அச்சமும் கவலையும் இல்லாமல் சுற்றித் திரிந்த படத்தைக் காட்டுங்கள்” என்று கேள்வி எழுப்பியவர், “இதற்காகவாவது காங்கிரஸ் கட்சியினர் குறைந்தபட்சம் மோடிக்கு நன்றி சொல்ல வேண்டும்” என்றார்.

அதேபோல, ராகுல் காந்திக்கு கண்டனம் தெரிவித்திருக்கும் பா.ஜ.க. எம்பி. சுதன்ஷு திரிவேதி, “இராணுவத்தின் அறிக்கைக்கு எதிராக ராகுல் காந்தி இதுபோன்ற கருத்தை தெரிவிப்பது மிகவும் வருத்தமாக உள்ளது. கடந்த காலங்களில் நமது வீரர்கள் சீனர்களால் தாக்கப்பட்டபோதும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய விஷயங்களை ராகுல் கூறியிருக்கிறார். இதுதான் காங்கிரஸ் கட்சியினரின் மனநிலை.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் இந்தியா சீனர்களுக்கு இராஜதந்திர ரீதியாக பதிலடி கொடுத்த விதம் பாராட்டுக்குரியது. இந்தியாவிற்கு எதிராக சீனா பல முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா மீது ஒரு குற்றச்சாட்டையும் கொண்டு வர முடியவில்லை.

சீனாவுக்கு பிரதேசங்களை விட்டுக் கொடுத்தவர்களைக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கைகளை மதிப்பிட தேவையில்லை. அவர்கள் எவ்வளவு கடினமாக முயற்சி செய்தாலும், பிரதமர் நரேந்திர மோடி தேசத்திற்காக உறுதியாக நிற்கிறார். அதேபோல, காங்கிரஸ் கூட்டணி மோதல்கள் மற்றும் அவநம்பிக்கைகள் நிறைந்தது. இந்த கூட்டணியை இந்திய வாக்காளர்கள் ஒருபோதும் ஆதரிக்க மாட்டார்கள். மத்தியில் நாங்கள் மீண்டும் ஆட்சி அமைப்போம்” என்று கூறியிருக்கிறார்.

Tags: Central Ministerbjp mp
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை பாராட்டடிய எலன் மஸ்க்

Next Post

இந்தியாவில் மலிவான விலையில் இன்டர்நெட் சேவை- பிரதமர் மோடி பெருமிதம்

Related News

இந்தியாவின் 5-ஆம் தலைமுறை போர் விமானங்கள் : ஒப்பந்தத்தை பெற 7 நிறுவனங்கள் போட்டா போட்டி!

கட்டாய விடுப்பில் அமெரிக்க அரசு ஊழியர்கள் : முடங்கியது அமெரிக்காவின் அரசு நிர்வாகம்!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

காசா போரை நிறுத்த 20 அம்ச திட்டம் : 100% ஆதரவா? ‘யு’ டர்ன் போட்ட பாகிஸ்தான்!

இந்திய குடும்பங்களில் கையிருப்பாக 25,000 டன் தங்கம் : உலக தங்க சந்தையில் டான் ஆக ஆதிக்கம் செலுத்தும் இந்தியா!

சவால்களுக்கே சவால் விடும் “டெத் டிராப்” – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கில்லாடி “மிஸ்டர் பீஸ்ட்”!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

இணையத்தை கலக்கும் இளம் பஞ்சாப் பாடகி : 6 நாட்களில் 30 லட்சம் பார்வைகளை கடந்த “That Girl” பாடல்!

பக்ராமை கைப்பற்ற துடிக்கும் அமெரிக்கா : இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

ஆர்எஸ்எஸ் என்பது தேசிய உணர்வின் நல்லொழுக்க அவதாரம் : பிரதமர் மோடி

திமுக அராஜகத்திற்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள் – அண்ணாமலை

பிலிப்பைன்ஸ் : சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அதிர்ந்த கட்டடங்கள்!

மலக்குழியில் சிக்கி அப்பாவி தொழிலாளர்கள் பலியாகும் கொடூரம் எப்போது ஓயும்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

டாஸ்மாக் விவகாரத்தில் மவுனம் சாதித்த செந்தில் பாலாஜி, கரூர் சம்பவத்தில் பதறுவது ஏன்? – அதிமுக கேள்வி!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்வு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

இமய மலையில் கொட்டி கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணி தீவிரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies