இந்தியாவில் மலிவான விலையில் இன்டர்நெட் சேவை- பிரதமர் மோடி பெருமிதம்
Jul 20, 2026, 08:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவில் மலிவான விலையில் இன்டர்நெட் சேவை- பிரதமர் மோடி பெருமிதம்

Murugesan M by Murugesan M
Aug 22, 2023, 09:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகிலேயே மலிவான விலையில் இந்தியாவில் 850 மில்லியனுக்கும் அதிகமான இணையப் பயனர்கள், இன்டர்நெட் சேவையைப் பெறுகின்றனர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஜி20 டிஜிட்டல் பொருளாதார அமைச்சர்கள் கூட்டத்தில், காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி,

“இந்தியாவில் 850 மில்லியனுக்கும் அதிகமான இணையப் பயனர்கள், உலகிலேயே மலிவான விலையில் இன்டர்நெட் சேவையை பெறுகின்றனர்.

இது இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்தின் வேகத்தை எடுத்துக்காட்டுகிறது. கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள டிஜிட்டல் மாற்றத்திற்காக, 2015ம் ஆண்டு டிஜிட்டல் இந்தியா என்ற முயற்சியை துவக்கினோம்.

வங்கி கணக்குகளின் எண்ணிக்கை 50 கோடியைத் தாண்டியது குறிப்பிடத்தக்க மைல்கல். இவற்றில் 67 சதவீத கணக்குகள் கிராமப்புறங்களில் துவங்கப்பட்டுள்ளன. நியாயமான டிஜிட்டல் அமைப்பை உருவாக்க வேண்டும். நிர்வாகத்தை மாற்றியமைக்கவும், அதை மிகத் திறமையாகவும், வேகமாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் மாற்றுவதற்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளோம்.

கோவின் போர்டல் இந்தியாவின் தடுப்பூசி இயக்கத்தை ஆதரித்தது. டிஜிட்டல் பொருளாதாரம் உலகளாவிய ரீதியில் பரவுவதால் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்ள நேரிடும். டிஜிட்டல் பொருளாதாரம் எதிர்கொள்ளும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்களை சமாளிக்க நடவடிக்கை எடுப்பது அவசியம்.

தனித்துவ டிஜிட்டல் அடையாளத்  தளமான ஆதார், 1.3 பில்லியனுக்கும் அதிகமான மக்களை உள்ளடக்கியது. ஜன்தன் வங்கிக் கணக்குகள், ஆதார், மொபைல் ஆகிய ஜாம் மும்மூர்த்திகளின் சக்தியைப் பயன்படுத்தி இந்தியாவில் நிதிச் சேர்க்கையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளோம்.
ஒவ்வொரு மாதமும், ஏறத்தாழ 10 பில்லியன் பரிவர்த்தனைகள் எங்கள் உடனடிக் கட்டண அமைப்பான யுபிஐயில் நடைபெறுகின்றன.
உலகளாவில் தற்போது இணையதள பரிவர்தனைகளில்  45% க்கும் அதிகமானவை இந்தியாவில் நிகழ்கின்றன.

டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்த நெட்வொர்க் இ-வணிகத்தை ஜனநாயகப்படுத்துகிறது. முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட வரிவிதிப்பு முறைகள் வெளிப்படைத்தன்மை மற்றும் மின் ஆளுமையை ஊக்குவிக்கின்றன.செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் மொழி மொழிபெயர்ப்பு தளமான பாஷினியை உருவாக்கி வருகிறோம். இது இந்தியாவின் பல்வேறு மொழிகளிலும் டிஜிட்டல் உள்ளடக்கத்திற்கு உதவும்.
இந்தியா தனது அனுபவங்களை உலகத்துடன் பகிர்ந்து கொள்ளத் தயாராக உள்ளது” எனத் தெரிவித்தார்.

 

Tags: PM Modipm modi speech
ShareTweetSendShare
Previous Post

சீனா விவகாரம்: ராகுலுக்கு மத்திய அமைச்சர் பதிலடி!

Next Post

விலை உயர்வைக் கட்டுப்படுத்த கூடுதலாக 2 லட்சம் டன் வெங்காயம்- மத்திய அரசு

Related News

சவுதியை தொடர்ந்து குவைத்தையும் வளைக்க பாகிஸ்தான் முயற்சி : பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்படுத்த பேச்சுவார்த்தை : சிறப்பு தொகுப்பு!

51 மதிப்பெண்ணில் தொடங்கிய பயணம் : விண்வெளியில் இந்தியாவின் புதிய மைல்கல் – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்க மண்ணில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கைது? : பரபரப்பை கிளப்பிய நியூயார்க் மேயர் – சிறப்பு தொகுப்பு!

56 வயது இளைஞர் – ராகுலை மறைமுகமாக சாடிய பிரதமர் மோடி!

கோயில்களில் தரிசன கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

முதலமைச்சர் குறித்து அவதூறு பேச்சு – விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது!

பழனி முருகன் கோயில் நிலப்பதிவு விவகாரம் – அசல் கிரையப் பத்திர ஆவணங்கள் வெளியீடு!

உலகக்கோப்பையை வென்ற ஸ்பெயின் – உலகம் முழுவதும் கொண்டாடி தீர்த்த கால்பந்து ரசிகர்கள்!

மேகதாது விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் – டிஆர். பாலு தகவல்!

பழனி கோயில் நில மோசடி வழக்கு – அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ் வீட்டுக்கு சீல்!

வடலூர் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் லஞ்சம் – எழுத்தரை சஸ்பெண்ட் செய்த அமைச்சர்!

ஊழல் குறித்து முன்னாள் அமைச்சர் மூர்த்தி பேசுவது நகைச்சுவையாக உள்ளது – அமைச்சர் ராஜ்மோகன்

உலகக்கோப்பை கால்பந்து – அர்ஜென்டினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது ஸ்பெயின்!

ஜப்தி செய்யப்பட்ட சொத்துக்களை உரிமையாளர்களுக்கு ஏலம்விடக் கூடாது;ரிசர்வ் வங்கி

நாகலாந்து கனமழை; 8 பேர் உயிரிழப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies