மதமாற்றம், லவ் ஜிகாத் ஆகியவற்றிற்கு எதிராக கடுமையான சட்டங்கள் இயற்ற வேண்டுமென விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு வலியுறுத்தி உள்ளது.
இதுதொடர்பாக அந்த அமைப்பு குடியரசு தலைவருக்கு எழுதிய கடிதத்தில், கிராமப்புறங்களை தாண்டியும், கார்ப்பரேட் மற்றும் வணிகத் துறைகளிலும் மதமாற்றம் மற்றும் ‘லவ் ஜிஹாத்’ சம்பவங்கள் நடைபெறுவதாகவும் இதுபோன்ற சம்பவங்கள் மிகுந்த வேதனையை அளிக்கிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கலாசார சீரழவை ஏற்படுத்தும் இந்த சம்பவங்களை தடுக்க கடுமையான சட்டம் இயற்ற வேண்டுமென அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேபோன்று காடுகள், பொது நிலங்களை ஆக்கிரமிப்பது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு தெரிவித்துள்ளது. இதே கோரிக்கையை வலியுறுத்தி பஜ்ரங் தளம் அமைப்பினரும் குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளது.
















