தமிழகத்தில் ஊழல் மலிந்த திமுக அரசை வீழ்த்தி, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
உதகையில் பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், தமிழகத்தை ஸ்டாலின் குடும்பத்தினர் ஒரு தனியார் நிறுவனம் போல் நடத்தி வருவதாகக் குற்றம் சாட்டினார். டாஸ்மாக் முதல் மணல் குவாரி வரை இந்த ஆட்சியில் பெரும் ஊழல்கள் நடைபெறுவதாகவும், லஞ்சம் இன்றி எந்தப் பணியும் நடப்பதில்லை என்றும் அவர் சாடினார்.
உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சராக்க நடக்கும் முயற்சியால் மக்கள் கடும் கோபத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகள் பெண்களுக்கு எதிரானவை என்றும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) எதிரானவர்கள் என்றும் தெரிவித்தார்.
தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரானவர்கள் என்றும், தமிழ் மக்களுக்கே எதிரானவர்கள் என்றும் அவர் கூறினார்.
















