மகளிருக்கு அதிகாரமளிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோற்கடித்த எதிர்க்கட்சிகளை கண்டித்து ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.
கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் நடைபெற்ற பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
இந்த மசோதா தோல்வியடைந்ததை ‘தேசத் துரோகம்’ மற்றும் ‘ஜனநாயகத்தின் கருப்பு தினம்’ என்று சாடிய சந்திரபாபு நாயுடு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பெண்களின் உரிமையைப் பறித்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார்.
பெண்களின் அரசியல் அதிகாரம் எதிர்க்கட்சிகளால் திட்டமிட்டுத் தடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
















