திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பேசிக் கொண்டிருந்தபோதே மக்கள் கலைந்து சென்றதால் சலசலப்பு ஏற்பட்டது.
பொன்னேரியில் இண்டி கூட்டணி கட்சியினர் சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் எம்.பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கலந்து கொண்டார். குறைந்த அளவு கூட்டத்திற்கான விழா பந்தலே அமைக்கப்பட்டிருந்த நிலையில், கடும் வெயிலால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
இதனால் ராகுல் காந்தி பேசிக் கொண்டிருந்தபோதே மக்கள் சாரை சாரையாக அங்கிருந்து கலைந்து சென்றனர். நாற்காலிகள் வெறிச்சோட தொடங்கியதால் கூட்ட ஏற்பாட்டாளர்கள் செய்வதறியாது திகைத்தனர். இக்கூட்டத்தில் இண்டி கூட்டணியின் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ளாதது தொண்டர்களிடம் ஏமாற்றத்தை அளித்தது.
















