தென்னாப்பிரிக்காவிலிருந்து 4 சிறுத்தைகள் கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு கொண்டு வரப்பட்டன.
வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக, தென்னாப்பிரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட 4 சிறுத்தைகளை கர்நாடக வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கந்த்ரே பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்றார்.
இந்தச் சிறுத்தைகள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் பன்னேருகட்டா உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டன. அங்குள்ள புதிய சூழலுக்கு அவை பழக்கப்படும் வரை, அடுத்த 30 நாட்களுக்கு கட்டாய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டு, மருத்துவ நிபுணர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பிறகு, பொதுமக்கள் பார்வைக்காக அவை பிரத்யேக பகுதிகளில் விடப்படும் என்று அவர்கள் கூறினர்.
















