கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி தொகுதிக்கு உட்பட்ட சேடப்பாளையத்தில் வாக்கு சேகரிக்க சென்ற திமுக அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்திடம் இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது 5 ஆண்டுகளாக எந்த அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றித் தரவில்லை என குற்றம்சாட்டிய அவர்கள், திமுகவினரை அங்கிருந்து விரட்டியடித்தனர். அப்போது அவர்களை சமாதனப்படுத்த வந்த குள்ளஞ்சாவடி போலீசாரிடமும் இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
















