காந்தி கிராம பல்கலைக்கழகத்தால் மேலும் இந்தியாவிற்கு கிடைத்த புகழ் !
Apr 20, 2026, 02:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காந்தி கிராம பல்கலைக்கழகத்தால் மேலும் இந்தியாவிற்கு கிடைத்த புகழ் !

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 24, 2023, 03:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முதல் 2 சதவீத விஞ்ஞானிகளின் பட்டியலை, அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜான்லொன்னிடிஸ் மற்றும் அவரது குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இந்தப் பட்டியலில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் இடம் பெற்றுள்ளனர். குறிப்பாக, இந்தப் பட்டியலில் உலகம் முழுவதும் உள்ள, 2 லட்சத்துக்கும் அதிகமான அறிவியல் ஆராய்ச்சியாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவிலிருந்து 3,500-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் இதில் இடம் பிடித்துள்ளனர்.

2022 ஆம் ஆண்டுக்கான பட்டியலில் காந்தி கிராமப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கணிதவியல் துறைப் பேராசிரியர் பி.பாலசுப்பிரமணியம், வேதியியல் துறைப் பேராசிரியர்கள் எம்.ஜி.சேதுராமன், எஸ்.மீனாட்சி, இயற்பியல் துறைப் பேராசிரியர் கே.மாரிமுத்து ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

பேராசிரியர் பி.பாலசுப்பிரமணியம், தெளிவற்ற தர்க்க அணுகுமுறைகளைப் பயன்படுத்தி தரம் குறைந்த படங்களை உயர்தரப்படமாக மாற்றுதல், கிரிப்டோகிராபி மற்றும் செயலாக்கத் தொழில்நுட்பம் மூலம் நோயாளியின் மூளையில் ஏற்படும் அதிர்ச்சியைக் கண்டறியும் முறை சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.

பேராசிரியர் எம்.ஜி.சேதுராமன் தாவரங்கள் மூலப் பொருட்களில் இருந்து வரும் சேர்மங்களைக் கொண்டு உலோக அரிப்புகளைத் தடுக்கும் காரணிகளை உருவாக்கும் ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்.

பேராசிரியர் எஸ்.மீனாட்சி,கழிவுநீரில் இருந்து நச்சுத்தன்மையுள்ள ப்ளூரைடு. குரோமியம், பாதரசம் மற்றும் நச்சுகளை, உறிஞ்சுதல் மூலமாக நீக்கும் முறைகளை உருவாக்கும் ஆய்வில் ஈடுபட்டுள்ளார்.

பேராசிரியர் கே.மாரிமுத்து, பூமியின் அரிய தாதுக்களைக் கொண்டு தயாரிக்கப்படும் கண்ணாடிகள் மூலம், வெள்ளை ஒளி மற்றும் லேசர் ஒளி உமிழ்வதற்கான ஆய்வு மற்றும் அபாயகர கதிர்வீச்சைத் தடுப்பதற்கான கண்ணாடிகளை உருவாக்கும் ஆய்விள் ஈடுபட்டுள்ளார்.

இதற்கு முன்பும் வெளியிடப்பட்ட உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் இவர்கள் இடம் பெற்றிருந்த நிலையில், தொடர்ந்து நான்காவது முறையாக 2022-ம் ஆண்டுக்கான பட்டியலிலும் இவர்கள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:
ShareTweetSendShare
Previous Post

இந்தியப் பண்பாடும், கலாச்சாரமும் கூட்டுக் குடும்பம் தான்! : டெல்லி உயர்நீதிமன்றம்.

Next Post

உலகக்கோப்பை கிரிக்கெட் பயிற்சிப் போட்டிக்கான அட்டவணை வெளியீடு!

Related News

மதுரை சித்திரை திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

உதயநிதி முதலமைச்சரானால் தமிழ்நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் – ராஜ்நாத்சிங்

திருச்செந்தூரில் ராஜ்நாத்சிங் : சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம்!

கேஸ் சிலிண்டர் புக் செய்த 5 நாட்களுக்குள் வினியோகம் – பெட்ரோலிய துறை அமைச்சகம் விளக்கம்!

மகனை முதலமைச்சராக்குவதே ஸ்டாலினின் ஒரே குறிக்கோள் – மத்திய அமைச்சர் அமித் ஷா

அரசு முறை பயணமாக இலங்கை சென்ற சிபிஆர் – அதிபர் அனுர குமார திசநாயகேவுடன் சந்திப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பாஜக ஆட்சி அமைந்தவுடன் ஆண்டுதோறும் பெண்களுக்கு ரூ.36,000 – மேற்கு வங்க பிரச்சாரத்தில் பிரதமர் மோடி உறுதி!

நெல் சாகுபடியில் 10-வது இடத்திற்கு தள்ளப்பட்ட தமிழகம் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

தவெக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆண்டுக்கு 12 லட்சம் கோடி தேவைப்படும் – பொருளாதார வல்லுநர்கள் கருத்து!

மதமாற்றம், லவ் ஜிகாத்திற்கு எதிராக கடுமையான சட்டங்கள் தேவை – குடியரசு தலைவருக்கு விஷ்வ இந்து பரிஷத் தகவல்!

ராகுல் காந்தியின் ஆங்கில உரையை மொழிபெயர்த்த செல்வப்பெருந்தகை – ட்ரோல் செய்து வரும் நெட்டிசன்கள்!

தமிழகம் வந்தார் ராஜ்நாத்சிங் – வாசுதேவநல்லூர் தொகுதியில் இன்று ரோடு ஷோ!

தமிழகத்தை சுரண்டி பிழைக்கும் குடும்பத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே நடக்கின்ற தேர்தல் – இபிஎஸ்

என்டிஏ ஆட்சி அமைந்ததும் ஊழல் முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் – பிரதமர் மோடி

ஊழல் மலிந்த திமுக அரசை வீழ்த்தி என்டிஏ ஆட்சி அமைக்கும் – பியூஷ் கோயல் உறுதி!

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி – எதிர்கட்சிகளை கண்டித்து ஆந்திராவில் முதல்வர் தலைமையில் பேரணி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies