இந்தியப் பண்பாடும், கலாச்சாரமும் கூட்டுக் குடும்பம் தான்! : டெல்லி உயர்நீதிமன்றம்.
Jul 1, 2025, 03:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியப் பண்பாடும், கலாச்சாரமும் கூட்டுக் குடும்பம் தான்! : டெல்லி உயர்நீதிமன்றம்.

Web Desk by Web Desk
Aug 24, 2023, 03:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நியாயமான காரணமின்றிக் கணவனைப் பெற்றோரை விட்டுப் பிரிந்து வரும்படி மனைவி வற்புறுத்துவது கணவரைச் சித்திரவதை செய்வதற்குச் சமம் என்று டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது.

டெல்லியைச் சேர்ந்த ஒருவர் விவாகரத்து வேண்டி டெல்லி குடும்பநல நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து இருந்தார். அதில் தனது மனைவி பெற்றோரை மதிப்பதில்லை எனவும், சண்டையிட்டுத் தகாத முறையில் வாக்குவாதம் செய்வதாகவும் குறிப்பிட்டு இருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், விவாகரத்து தர மறுத்து விட்டது.

இந்நிலையில், அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கில்  நேற்று உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார் கைட் தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவு,

திருமணமான எந்தவொரு ஆணும் தனது பெற்றோரைப் பிரிய விரும்ப மாட்டார்கள். இந்த வழக்கில், பெற்றோரைப் பிரிந்து கணவன் மனைவியுடன் தனியாகச் செல்ல எந்த நியாயமான மற்றும் வலுவான காரணங்களையும் மனைவி குறிப்பிடவில்லை.

தனியாக வாழ வேண்டும் என்று விடாப்பிடியாக மனைவி வற்புறுத்துவது, கணவனுக்குச் செய்யும் கொடூரமான சித்ரவதை. திருமணம் முடிந்தவுடன் பெற்றோரைப் பிரிந்து வாழ்வது மேற்கத்திய நாடுகளின் கலாச்சாரம். இந்தியப் பண்பாடும், கலாச்சாரமும் கூட்டுக் குடும்பம் தான்.

பெற்றோருக்கு வயதாகும் போது, அவர்களைக் கவனிக்க மகனுக்குத் தார்மீக மற்றும் சட்டப்பூர்வ கடமை உள்ளது. முறையான வாதங்கள், காரணங்கள் இருந்தால் மட்டுமே, குடும்ப உறுப்பினர்களைப் பிரிந்து, மனைவியுடன் கணவன் வாழலாம். இந்த வழக்கைப் பொறுத்தவரை  கணவன் மனைவி இருவருமே தொடர்ந்து  தனித் தனியாக வாழ்ந்து வருவதால் விவாகரத்து கொடுக்கப்படுகிறது எனத் தீர்ப்பளித்தனர் .

Tags: delhidelhi high court
ShareTweetSendShare
Previous Post

செம்மண் குவாரி வழக்கு: திமுக எம்.பி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

Next Post

காந்தி கிராம பல்கலைக்கழகத்தால் மேலும் இந்தியாவிற்கு கிடைத்த புகழ் !

Related News

பிரம்மோஸ் Vs K6 ஏவுகணை : இந்தியாவின் போர் வாளும்… பாதுகாப்புக் கவசமும்…!

இந்தியாவுடன் நட்பு பாராட்டும் இஸ்ரேல் – ஈரான்!

பறிபோகும் பொதுச்செயலாளர் பதவி : ஓரங்கட்டப்படும் துரைமுருகன்!

வங்கதேச சணல் – இறக்குமதிக்கு தடை!

முதலமைச்சர் தொகுதியில் துயரம் : 40 ஆண்டுகளாக வசிக்கும் மக்களை வெளியேற்ற முயற்சி!

ரபேலை விட கூடுதல் வசதி : விமானப்படையில் அதிக அளவில் சேர்க்கப்படும் தேஜாஸ் MK1A!

Load More

அண்மைச் செய்திகள்

2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறும் – எல்.முருகன் திட்டவட்டம்!

பறக்கும் துப்பாக்கி – அசத்தும் இந்தியா!

கூட்டணிக்குள் குழப்பம் – திக்குமுக்காடும் திமுக!

தனித்தீவாக மாறிய அவலம் : அடிப்படை வசதி இன்றி தவியாய் தவிக்கும் மக்கள்!

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு 9 கேள்விகள் : நயினார் நாகேந்திரன்

திமுக ஆட்சியில் தொழில்துறை தடுமாறுகிறது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

டாஸ்மாக் கடை வழக்கில் தமிழக அரசுக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி!

சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் ரீல்ஸ் பார்த்து நேரத்தைக் கழித்த உறுப்பினர்கள்!

50 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி : எல்.முருகன் பெருமிதம்!

ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமின் – உச்சநீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies