முதலமைச்சர் தொகுதியில் துயரம் : 40 ஆண்டுகளாக வசிக்கும் மக்களை வெளியேற்ற முயற்சி!
Jul 31, 2026, 04:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முதலமைச்சர் தொகுதியில் துயரம் : 40 ஆண்டுகளாக வசிக்கும் மக்களை வெளியேற்ற முயற்சி!

Murugesan M by Murugesan M
Jun 30, 2025, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை கொளத்தூரில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயற்சிப்பதாக புகார் எழுந்திருக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சொந்த தொகுதியில் வசிக்கும் மக்கள் படும் இன்னல்களை இந்த செய்தி தொகுப்பின் மூலம் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

சென்னை கொளத்தூர் பாரத் ராஜிவ்காந்தி நகரில் சுமார் 500க்கும் அதிகமான குடும்பங்கள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். அரசால் புறம்போக்கு நிலம் என அறிவிக்கப்பட்டுள்ள இப்பகுதியில் பல ஆண்டுகளாகக் குடியிருக்கும் பொதுமக்கள் குடிநீர் வரி, வீட்டு வரி, மின்சார கட்டணம் என அனைத்துவிதமான வரிகளையும் கட்டணங்களையும் முறையாகச் செலுத்தி வருகின்றனர்.

பட்டாவும் விரைவில் வழங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு வரும் நிலையில் திடீரென தனிநபர் ஒருவரின் நிலம் எனக்கூறி, ஆண்டாண்டு காலமாக அங்குக் குடியிருக்கும் மக்களை வெளியேற்ற முயற்சி நடப்பதாகப் புகார் எழுந்துள்ளது. மேடும், பள்ளமுமாக காட்சியளித்த பொறம்போக்கு நிலத்தைச் சமன்படுத்தி, தாங்கள் சேர்த்த சொத்துக்கள் முழுவதையும் விற்று வீடுகளை கட்டி குடியிருந்து வரும் நிலையில் திடீரெனெ தங்களை வெளியேறச் செல்வதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

நிலம் தனியாருக்குச் சொந்தமானது என்றால் மாநகராட்சி சார்பில் வடிகால் பணிகள் எதன் அடிப்படையில் நடைபெற்றது எனவும் ? 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பொறம்போக்கு நிலமாக இருந்த இடம் தற்போது தனிநபருக்குச் சொந்தமாக மாறியது என அப்பகுதி மக்கள் அடுக்கடுக்கான கேள்விகளையும் எழுப்புகின்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சொந்த தொகுதியில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயற்சிப்பது தமிழக அரசின் மற்றொரு மோசமான முகத்தை வெளிப்படுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆண்டாண்டு காலமாக வசித்து வந்த இடத்தை விட்டு வெளியேற வற்புறுத்தினால் போராட்டத்தில் ஈடுபடவும் தயங்க மாட்டோம் என பாரத் ராஜிவ் காந்தி நகர் மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: மக்களை வெளியேற்ற முயற்சிசென்னை கொளத்தூர்DMKcm stalinTragedy in the Chief Minister's constituency: Attempt to evict people who have been living there for 40 yearsமுதலமைச்சர் தொகுதியில் துயரம்
ShareTweetSendShare
Previous Post

ரபேலை விட கூடுதல் வசதி : விமானப்படையில் அதிக அளவில் சேர்க்கப்படும் தேஜாஸ் MK1A!

Next Post

பறிபோகும் பொதுச்செயலாளர் பதவி : ஓரங்கட்டப்படும் துரைமுருகன்!

Related News

நாட்டின் முதல் 1200 kV டிரான்ஸ்பார்மர் : இந்தியாவின் மின்சாரப் புரட்சி, வல்லரசுகளுக்கு சவால் – சிறப்பு தொகுப்பு!

வெற்றி பெறாமலேயே வெற்றி, போரில் ஈரான் சாதித்தது எப்படி? : நவீன போரின் புதிய கணக்கு – சிறப்பு தொகுப்பு!

எதிரிக்கு எச்சரிக்கை மணி : களமிறங்கும் இந்தியாவின் ‘பிரளய்’ ஏவுகணை – சிறப்பு தொகுப்பு!

இனறைய தங்கம் விலை!

சென்னையில் சிக்னல் கோளாறு காரணமாக ஒரே தண்டவாளத்தில் இரு புறநகர் ரயில்கள் அடுத்தடுத்து சென்றதா? – ரயில்வே நிர்வாகம் விளக்கம்!

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது – டி.கே.சிவகுமார்

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் கொட்டி தீர்த்த மழை – உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆக உயர்வு!

வினாத்தாள் கசிவால் 750 கோடி மாணவர்கள் பாதிப்பா? – பிரியாங்கா காந்திக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கேள்வி!

சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடியை நாடாளுமன்றத்தில் விமர்சித்த காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி – கல்வியாளர்கள் கண்டனம்!

மாநிலங்களவையிலும் வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா நிறைவேறியது!

முன்ஜாமின் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு – தமிழக அரசு கேவியட் மனுத்தாக்கல்!

மேகதாது அணை விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை – மத்திய அரசு விளக்கம்!

வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் வரை சிறை – மக்களவையில் நிறைவேறியது மசோதா!

நாட்டின் தேர்வு முறையை மேலும் வலுப்படுத்த தொடர் நடவடிக்கை – பிரதமர் மோடி உறுதி!

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies