முதலமைச்சர் தொகுதியில் துயரம் : 40 ஆண்டுகளாக வசிக்கும் மக்களை வெளியேற்ற முயற்சி!
Jun 15, 2026, 02:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முதலமைச்சர் தொகுதியில் துயரம் : 40 ஆண்டுகளாக வசிக்கும் மக்களை வெளியேற்ற முயற்சி!

Murugesan M by Murugesan M
Jun 30, 2025, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை கொளத்தூரில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயற்சிப்பதாக புகார் எழுந்திருக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சொந்த தொகுதியில் வசிக்கும் மக்கள் படும் இன்னல்களை இந்த செய்தி தொகுப்பின் மூலம் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

சென்னை கொளத்தூர் பாரத் ராஜிவ்காந்தி நகரில் சுமார் 500க்கும் அதிகமான குடும்பங்கள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். அரசால் புறம்போக்கு நிலம் என அறிவிக்கப்பட்டுள்ள இப்பகுதியில் பல ஆண்டுகளாகக் குடியிருக்கும் பொதுமக்கள் குடிநீர் வரி, வீட்டு வரி, மின்சார கட்டணம் என அனைத்துவிதமான வரிகளையும் கட்டணங்களையும் முறையாகச் செலுத்தி வருகின்றனர்.

பட்டாவும் விரைவில் வழங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு வரும் நிலையில் திடீரென தனிநபர் ஒருவரின் நிலம் எனக்கூறி, ஆண்டாண்டு காலமாக அங்குக் குடியிருக்கும் மக்களை வெளியேற்ற முயற்சி நடப்பதாகப் புகார் எழுந்துள்ளது. மேடும், பள்ளமுமாக காட்சியளித்த பொறம்போக்கு நிலத்தைச் சமன்படுத்தி, தாங்கள் சேர்த்த சொத்துக்கள் முழுவதையும் விற்று வீடுகளை கட்டி குடியிருந்து வரும் நிலையில் திடீரெனெ தங்களை வெளியேறச் செல்வதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

நிலம் தனியாருக்குச் சொந்தமானது என்றால் மாநகராட்சி சார்பில் வடிகால் பணிகள் எதன் அடிப்படையில் நடைபெற்றது எனவும் ? 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பொறம்போக்கு நிலமாக இருந்த இடம் தற்போது தனிநபருக்குச் சொந்தமாக மாறியது என அப்பகுதி மக்கள் அடுக்கடுக்கான கேள்விகளையும் எழுப்புகின்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சொந்த தொகுதியில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயற்சிப்பது தமிழக அரசின் மற்றொரு மோசமான முகத்தை வெளிப்படுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆண்டாண்டு காலமாக வசித்து வந்த இடத்தை விட்டு வெளியேற வற்புறுத்தினால் போராட்டத்தில் ஈடுபடவும் தயங்க மாட்டோம் என பாரத் ராஜிவ் காந்தி நகர் மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: மக்களை வெளியேற்ற முயற்சிசென்னை கொளத்தூர்DMKcm stalinTragedy in the Chief Minister's constituency: Attempt to evict people who have been living there for 40 yearsமுதலமைச்சர் தொகுதியில் துயரம்
ShareTweetSendShare
Previous Post

ரபேலை விட கூடுதல் வசதி : விமானப்படையில் அதிக அளவில் சேர்க்கப்படும் தேஜாஸ் MK1A!

Next Post

பறிபோகும் பொதுச்செயலாளர் பதவி : ஓரங்கட்டப்படும் துரைமுருகன்!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

சட்டமன்ற தேர்தல் தோல்வி – அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

Load More

அண்மைச் செய்திகள்

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies