விபத்தில் உயிரிழந்த தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் குடும்பத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
தமிழகச் செய்தியாளர் குழு சென்ற வாகனம், நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே விபத்துக்குள்ளானதில், புதிய தலைமுறை தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் திரு.சங்கர் அவர்கள் உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும், ஊடக நண்பர்களுக்கும் @BJP4Tamilnadu…
— K.Annamalai (@annamalai_k) August 24, 2023
தமிழகச் செய்தியாளர் குழு சென்ற வாகனம், நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே விபத்துக்குள்ளானதில், புதிய தலைமுறை தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் சங்கர் உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும், ஊடக நண்பர்களுக்கும் பாஜக சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஊடக நண்பர்கள், நாகராஜன், வள்ளிநாயகம், மற்றும் நாராயணன் ஆகியோர், விரைவாக நலம் பெற இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
விபத்தில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் அனைவருக்கும், தகுந்த உதவிகளை வழங்க வேண்டுமென்று, தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.