இந்தியத் திரைப்படத்திற்கான தேசிய விருதுகள் நேற்று மத்திய அரசு வெளியிட்டது. 69-ஆவது தேசிய திரைப்பட விருதில், சிறந்த படத்துக்கான விருதை ‘ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்’ வென்றுள்ளது. சிறந்த தமிழ்ப் படத்துக்கான விருதை ‘கடைசி விவசாயி’ பெற்றுள்ளது. இந்தத் திரைப்படத்திற்குப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Congratulations, Thiru @ActorMadhavan avl, for bagging the National Award for the best feature film for ‘Rocketry: The Nambi Effect’.
While India is exhilarated by the victory of Chandraayan-3, this comes as a boost to our Nationalistic spirits.
Hats off to you and your team. pic.twitter.com/xe8bRlAUrE
— K.Annamalai (@annamalai_k) August 24, 2023
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’ படத்துக்காக சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருதைப் பெற்ற நடிகர் மாதவனுக்கு வாழ்த்துகள். சந்திராயன்-3 இன் வெற்றியால் இந்தியா உற்சாகமடைந்துள்ள நிலையில், இது நமது தேசிய உணர்வுகளுக்கு ஊக்கமளிக்கிறது. உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் வாழ்த்துகள்.
2021 ஆம் ஆண்டின் சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருதுக்கு, நடிகர் விஜயசேதுபதி நடித்த கடைசி விவசாயி படம் தேர்வாகியுள்ளது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் என்ற வள்ளுவரின் வரிகளுக்கேற்ப, விவசாயத்தின் மேன்மை பேசும் தமிழ்த் திரைப்படம், தேசிய அளவிலான அங்கீகாரம் பெற்றது நம் அனைவருக்கும் பெருமை அளிப்பதாகும்.
2021 ஆம் ஆண்டின் சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருதுக்கு, நடிகர் திரு @VijaySethuOffl அவர்கள் நடித்த #கடைசி_விவசாயி படம் தேர்வாகியுள்ளது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் என்ற வள்ளுவரின் வரிகளுக்கேற்ப, விவசாயத்தின் மேன்மை பேசும் தமிழ்த்… pic.twitter.com/WfRUrNLHvJ
— K.Annamalai (@annamalai_k) August 24, 2023
தேசிய விருது நடுவர்களின் சிறப்புக் குறிப்பில் இடம்பெற்ற கடைசி விவசாயி ஐயா நல்லாண்டி அவர்கள் பெயரும், நெடுங்காலம் நிலைத்திருக்கும்.
விவசாயம் எனும் உன்னதமான கதைக் களத்தைத் தேர்ந்தெடுத்து, சிறப்பானதொரு திரைப்படம் தந்த இயக்குநர் M. மணிகண்டன் அவர்களுக்கு, எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.