முதல்முறையாக ஆசியக் கோப்பை 2023 தொடரைப் பாகிஸ்தானும், இலங்கையும் சேர்ந்து நடத்தவுள்ளது
இதற்குமுன், ஆசியக் கோப்பை ஏதாவது ஒரேயொரு நாட்டில்தான் நடைபெறும். இந்தமுறை மொத்தமுள்ள 13 போட்டிகளில் நான்கு போட்டிகள் பாகிஸ்தானிலும், மீதமுள்ள 9 போட்டிகள் இலங்கையிலும் நடைபெறுகிறது.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், நேபால், வங்காளதேசம் ஆகிய 6 அணிகளுக்கான ஆசியக் கோப்பை 2023 கிரிக்கெட் போட்டி வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி தொடங்குகிறது.
ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் செப்டம்பர் 17 ஆம் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெறும் . இதில் குழு A மற்றும் குழு B என்று இரு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது. குழு A -வில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நேபால் அணிகளும் , குழு B- யில் இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகளும் மோதவுள்ளன.
லீக் சுற்றில் இந்தியாவுடன் இரு அணிகள் மோதவுள்ளன. செப்டம்பர் 2 ஆம் தேதி இந்தியா பாகிஸ்தான்னும், செப்டம்பர் 4ஆம் தேதி இந்தியா, நேபாளுடனும் மோதவுள்ளது. செப்டம்பர் 5ஆம் தேதியுடன் லீக் சுற்று முடிவடைந்து செப்டம்பர் 15ஆம் தேதி வரை கால் இறுதி மற்றும் அரையிறுதி போட்டிகள் நடைபெறும் . அரையிறுதியில் வெற்றிப்பெற்று வரும் அணிகளுக்குள் செப்டம்பர் 17 ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெறும்.
ஏற்கனவே 7 முறை ஆசியக் கோப்பையை வென்றுள்ள இந்தியா 8 வது முறையாக நிச்சயம் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.