அரிசி ஏற்றுமதிக்கு 20% வரி விதிப்பு: விலை உயர்வை தடுக்க மத்திய அரசு அதிரடி!
Oct 6, 2025, 06:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

அரிசி ஏற்றுமதிக்கு 20% வரி விதிப்பு: விலை உயர்வை தடுக்க மத்திய அரசு அதிரடி!

Web Desk by Web Desk
Aug 26, 2023, 05:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வெளிநாட்டு ஏற்றுமதியை குறைத்து, உள்நாட்டில் அரிசி விலையை கட்டுப்படுத்தும் வகையில், அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு 20 சதவிகிதம் வரி விதித்திருக்கிறது.

இந்திய மக்களின் முக்கிய உணவாக இருப்பது அரிசிதான். ஆனால், இந்தியாவில் பதிவாகிவரும் நிலையற்ற மழை காரணமாக, கடந்த சில வருடங்களாக விவசாய உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. மேலும், எல் நினோ வேறு அச்சுறுத்தி வருகிறது. இதனால், உள்நாட்டுச் சந்தையில் அரிசி விலை உயர வாய்ப்பு இருக்கிறது. இதன் தாக்கம், சில்லறை பண வீக்கத்தில் அதிகளவு எதிரொலிக்கும். இதை முன்கூட்டியே கணித்த மத்திய அரசு, ஏற்றுமதிக்கான தடை மற்றும் வரி விதிப்பு ஆகிய ஆயுதங்களை கையில் எடுத்திருக்கிறது.

அந்த வகையில், பாசுமதி தவிர்த்த வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு சமீபத்தில் தடை விதித்தது. தற்போது, புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கு 20 சதவிகிதம் வரி விதித்திருக்கிறது. சர்வதேச அளவில் புழுங்கல் அரிசி ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியா மிகவும் முக்கியமானது. 2022-ம் ஆண்டில் மொத்த அரிசி ஏற்றுமதியில் புழுங்கல் அரிசியின் ஏற்றுமதி மட்டும் 7.4 மில்லியன் டன்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தவிர, இந்தியாவில் அரிசி விலை ஏற்கெனவே 11 வருடங்களாக இல்லாத அளவுக்கு உச்சத்தில் இருக்கிறது.

ஆகவே, அரிசி ஏற்றுமதிக்கான தடை மற்றும் வரி விதிப்பு போன்றவை உள்நாட்டில் விலை உயர்வை தடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, செப்டம்பர் மாதம் முதல் உணவு பணவீக்கம் குறைய வாய்ப்பு இருக்கிறது. சர்வதேச அளவில் அரிசி ஏற்றுமதியில் இந்தியா முக்கிய நாடாக இருக்கும் நிலையில், அரிசிக்கான தடையும், வரி விதிப்பும் உலகளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், ஏற்கெனவே, சீனாவில் மழை, வெள்ளம் காரணமாக, அந்நாட்டின் அரிசி உற்பத்தி அதிகளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஓட்டுமொத்த தென்கிழக்கு நாடுகளிலும் அரிசி விலை உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags: central government
ShareTweetSendShare
Previous Post

பில்லியன் டாலர் செயற்கைக்கோள் சந்தை: ஆதிக்கம் செலுத்துமா ? இந்தியா.

Next Post

“கலாச்சாரப் பாரம்பரியம் என்பது…” ஜி20 மாநாட்டில் பாடம் நடத்திய பிரதமர் மோடி!

Related News

வச்ச குறி தப்பாத ஏகே 630 வான்பாதுகாப்பு தளவாடம் : பாக்.எல்லைகளில் நிறுத்த இந்திய ராணுவம் முடிவு – சிறப்பு தொகுப்பு!

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் – ஊர் திரும்ப போதிய பேருந்து இல்லாததால் அவதி!

மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய “சிப்” – மின்னணு உற்பத்தியில் முந்தும் இந்தியா!

கடலில் 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த 12 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் – குவியும் பாராட்டு!

ஆன்மிக வாழ்வுக்கு புது இலக்கணம் வகுத்த வள்ளலார் – சிறப்பு தொகுப்பு!

பீகார் சட்டமன்றத் தேர்தல் – பாட்னாவில் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

அரக்கோணம் அருகே சென்னை நோக்கி வந்த விரைவு ரயிலில் புகை – பயணிகள் அச்சம்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – விசாரணையை தொடங்கினார் ஐஜி அஸ்ரா கார்க்!

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மாயமான சிங்கம் – ட்ரோன் கேமராக்கள் மூலம் தேடிய ஊழியர்கள்!

ஆக்கிரமிப்பு காஷ்மீர் போராட்டம் – ஒப்பந்தம் கையெழுத்து!

அரசு கேபிளில் தமிழ்ஜனம் தொலைக்காட்சிக்கும் இடம் வழங்காத பாசிச திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குன்னூர் வெலிங்டன் எம்.ஆர்.சி.ராணுவ பயிற்சி முகாம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி – ஏராளமானோர் பங்கேற்பு!

திருமுல்லைவாயல் அருகே கஞ்சா போதையில் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள்!

சிங்கம்புணரியில் நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயம்!

சிவகாசி அருகே பட்டாசு கடையில் வெடி விபத்து – குடோனிலும் தீ பரவியதால் பதற்றம்!

தவெக தலைவர் விஜய் பிரசார வாகன ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு – இருசக்கர வாகன ஓட்டிகள் மீதும் பாயந்தது வழக்கு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies