அரிசி ஏற்றுமதிக்கு 20% வரி விதிப்பு: விலை உயர்வை தடுக்க மத்திய அரசு அதிரடி!
Feb 15, 2026, 10:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

அரிசி ஏற்றுமதிக்கு 20% வரி விதிப்பு: விலை உயர்வை தடுக்க மத்திய அரசு அதிரடி!

Murugesan M by Murugesan M
Aug 26, 2023, 05:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வெளிநாட்டு ஏற்றுமதியை குறைத்து, உள்நாட்டில் அரிசி விலையை கட்டுப்படுத்தும் வகையில், அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு 20 சதவிகிதம் வரி விதித்திருக்கிறது.

இந்திய மக்களின் முக்கிய உணவாக இருப்பது அரிசிதான். ஆனால், இந்தியாவில் பதிவாகிவரும் நிலையற்ற மழை காரணமாக, கடந்த சில வருடங்களாக விவசாய உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. மேலும், எல் நினோ வேறு அச்சுறுத்தி வருகிறது. இதனால், உள்நாட்டுச் சந்தையில் அரிசி விலை உயர வாய்ப்பு இருக்கிறது. இதன் தாக்கம், சில்லறை பண வீக்கத்தில் அதிகளவு எதிரொலிக்கும். இதை முன்கூட்டியே கணித்த மத்திய அரசு, ஏற்றுமதிக்கான தடை மற்றும் வரி விதிப்பு ஆகிய ஆயுதங்களை கையில் எடுத்திருக்கிறது.

அந்த வகையில், பாசுமதி தவிர்த்த வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு சமீபத்தில் தடை விதித்தது. தற்போது, புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கு 20 சதவிகிதம் வரி விதித்திருக்கிறது. சர்வதேச அளவில் புழுங்கல் அரிசி ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியா மிகவும் முக்கியமானது. 2022-ம் ஆண்டில் மொத்த அரிசி ஏற்றுமதியில் புழுங்கல் அரிசியின் ஏற்றுமதி மட்டும் 7.4 மில்லியன் டன்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தவிர, இந்தியாவில் அரிசி விலை ஏற்கெனவே 11 வருடங்களாக இல்லாத அளவுக்கு உச்சத்தில் இருக்கிறது.

ஆகவே, அரிசி ஏற்றுமதிக்கான தடை மற்றும் வரி விதிப்பு போன்றவை உள்நாட்டில் விலை உயர்வை தடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, செப்டம்பர் மாதம் முதல் உணவு பணவீக்கம் குறைய வாய்ப்பு இருக்கிறது. சர்வதேச அளவில் அரிசி ஏற்றுமதியில் இந்தியா முக்கிய நாடாக இருக்கும் நிலையில், அரிசிக்கான தடையும், வரி விதிப்பும் உலகளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், ஏற்கெனவே, சீனாவில் மழை, வெள்ளம் காரணமாக, அந்நாட்டின் அரிசி உற்பத்தி அதிகளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஓட்டுமொத்த தென்கிழக்கு நாடுகளிலும் அரிசி விலை உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags: central government
ShareTweetSendShare
Previous Post

பில்லியன் டாலர் செயற்கைக்கோள் சந்தை: ஆதிக்கம் செலுத்துமா ? இந்தியா.

Next Post

“கலாச்சாரப் பாரம்பரியம் என்பது…” ஜி20 மாநாட்டில் பாடம் நடத்திய பிரதமர் மோடி!

Related News

இந்து மன்னருக்கு பெருகும் ஆதரவு – நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சி ?

டி-20 லீக் போட்டி – இந்தியா Vs பாகிஸ்தான் போட்டி அல்ல ‘போர்’

நிஜ்ஜார் வழக்கில் கனடாவுடன் சேர்ந்து பணியாற்ற இந்தியா விருப்பம்!

இளம் இந்திய வீரர்களை கண்டு பாகிஸ்தானுக்கு தான் பயம் அதிகம் -கிரிக்கெட் வியூக வகுப்பாளர் பாஸ்கி

30 ஆண்டுகளாக போராட்டம் – தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக இரு கிராம மக்கள் எச்சரிக்கை!

வி.கே.சசிகலா தலைமையில் வரும் 24-ஆம் தேதி பிரமாண்ட பொதுக்கூட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சியிடமிருந்து 1,400 ஏக்கர் நிலத்தை மீட்க போராடிய விவசாயிகள் கைது!

தனியார் மேல்நிலைப்பள்ளியின் ஆண்டு விழா மாணவர்களின் நிகழ்த்திய முருகர் நாடகம்.. பார்த்து வியந்த பார்வையாளர்கள்!

வெள்ளியங்கிரியில் மகா சிவராத்திரி விழா கோலாகலம்!

திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயிலில், நாட்டியாஞ்சலி விழா – உள்நாட்டு, வெளிநாட்டு கலைஞர்கள்பங்கேற்பு

காங்கிரஸ் குறித்து தொடர்ந்து சர்ச்சை கருத்து -அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்க இருந்த கட்சி பொதுக்கூட்டங்கள் திடீர் ரத்து

இந்தியாவுடன் உறவை வலுப்படுத்த விருப்பம் -வங்கதேசத்தில் வென்ற BNP கட்சி அறிவிப்பு

மகா சிவராத்திரியை ஒட்டி திருவண்ணாமலையில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!

ஆட்சியில் பங்கு , அதிக சீட்டுகள் – மாணிக்கம் தாகூர் முன்னிலையில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!

தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமங்களின் ஆண்டு விழாவில் நடனம் ஆடி அசத்திய பிரபுதேவா!

ஏஐ 18 மாதங்களில் வேலை வாய்ப்பு சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் – மைக்ரோசாப்ட் அதிகாரி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies