பில்லியன் டாலர் செயற்கைக்கோள் சந்தை: ஆதிக்கம் செலுத்துமா ? இந்தியா.
Apr 29, 2026, 01:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பில்லியன் டாலர் செயற்கைக்கோள் சந்தை: ஆதிக்கம் செலுத்துமா ? இந்தியா.

Murugesan M by Murugesan M
Aug 26, 2023, 05:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2017 ஆம் ஆண்டு, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஒரே நேரத்தில் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியதன் மூலம் குறைந்த விலை வெளியீட்டு தொழில்நுட்பத்தில் இந்தியா தன் ஆதிக்கத்தை நிறுவியது.

இந்த நிகழ்வு பிஎஸ்எல்வி என்ற இஸ்ரோவின் செயற்கைக்கோள் ஏவுவாகனத்தின் முப்பத்தெட்டாவது  தொடர்ச்சியான வெற்றிப் பணியாக அமைந்தது.

இந்த பிஎஸ்எல்வி செயற்கைகோள் மூலம் வெளிநாட்டு வாடிக்கையாளர்களிடம்  இருந்து அனுப்பப்பட்ட  செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை மட்டும் 180 க்கும் மேலாக இருக்கும் .  .

ஜூலை 30, 2023 நிலவரப்படி, பிஎஸ்எல்வி 58 ஏவுதல்களைச் செய்துள்ளது. இவற்றில் 55 அவற்றின் திட்டமிட்ட சுற்றுப்பாதையை வெற்றிகரமாக அடைந்தது. 94% வெற்றி விகிதத்தை கொண்டு உலகநாடுகளின் செயற்கைகோள்களை ஏவும் தொழில்நுட்பத்தில் இந்தியா ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளது,

இந்நிலையில் (PSLV) உடன் ஒப்பிடும்போது சிறிய செயற்கைக்கோள்களை வணிக ரீதியாக குறைந்தவிலையில் செலுத்தும் நோக்கத்துடன் SSLV உருவாக்கப்பட்டது.

SSLV ஆனது 500 கிலோ எடையுள்ள செயற்கைக்கோள்களை குறைந்த புவி சுற்றுவட்டப் பாதைக்கு “Launch -on demand” அடிப்படையில் அனுப்பக்கூடியது. அடுத்தப் பத்தாண்டுக்குள் இந்தச் சந்தையில் இந்தியா தன் பங்கை 5 மடங்காக உயர்த்த திட்டமிட்டுள்ளது.

இதன் அடிப்படையில் சிறிய செயற்கைக்கோள்களை ஏவுவதற்குப் பயன்படுத்தப்படும் ஏவுகணை  தயாரிப்பைத் தனியார்மயமாக்கும் திட்டத்தை இந்திய அரசு அறிமுகப்படுத்தியது. சுமார் 20 நிறுவனங்கள் தனியார்மயமாக்கலுக்கான ஏலத்தில் விருப்பம் தெரிவித்துள்ளன.


இந்நிலையில், L & T, மற்றும் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனங்கள், சிறிய வகை செயற்கைக்கோள்களை ஏவும் ராக்கெட் தயாரிப்பில் ஈடுபட முன்வந்துள்ளன.

சந்திரயான் -3 இன் வெற்றியானது விண்வெளி முயற்சிகளில் தனியார் முதலீட்டை ஊக்குவிக்கும் இந்தியாவின் முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்ரோவுக்குத் தொடர்புடைய நிறுவனங்களின் பங்குகளின் விலை இந்த வாரம்  ஏற்றமடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் நரேந்திர மோடியின் முன்மொழிவை ஏற்று பெரிய நிறுவனங்கள் மட்டும் அன்றி நூற்றுக்கணக்கான இந்திய தொழில்முனைவோர், space start up நிறுவனங்கள் உலகளாவிய விண்வெளி சந்தையில் தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கு பங்களிக்கத் தொடங்கும் போது, பில்லியன் டாலர் செயற்கைக்கோள் ஏவும் சந்தையில் உண்மையிலேயே இந்தியா ஆதிக்கம் செலுத்த முடியும் என்ற நம்பிக்கை பிறக்கும்.

Tags: Indiasatellite
ShareTweetSendShare
Previous Post

ம.பி.யில் அமைச்சரவை விரிவாக்கம்!

Next Post

அரிசி ஏற்றுமதிக்கு 20% வரி விதிப்பு: விலை உயர்வை தடுக்க மத்திய அரசு அதிரடி!

Related News

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies